தர்ப்பையின் மகிமை

தர்ப்பையின் மகிமை


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் "குசா" என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.

உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர்.

அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.

இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுக஠ ?றது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:

தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க.

தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு.

எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்க தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள்.

எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள்.

 பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும்.

 இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள்.

 தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:

திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்:

தருப்பை என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா.

பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்

கட்டு மந்திரங்கள்

கட்டு மந்திரங்கள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திக்கு கட்டு

1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்

அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

உடல்கட்டு.
************

ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா

(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)

கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
சிவ மகாமந்திரம் ... முயன்று பாருங்கள்
***********************************************

"ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்"

ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.

இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் - அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!

இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் .
*************************************

“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,
லங்காபுரி ராவண சம்ஹாரா,
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர்.

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...
*****************************

"ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.

சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..
********************************************

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
******************************************

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்"
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..
*******************************************

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"
- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம்
றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால்
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..
************************************

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு
சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம்
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..
*************************************

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"
- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும்
மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று
அன்பாக லட்சம் உரு செபித்தால்
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
****************************************

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"
- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகத்தியர்.

சனிக்கான உடல் கட்டு மந்திரம்..
***********************************

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"
- அகத்தியர் -

பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
****************************************

"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"
- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு
மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி"
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால்
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
******************************************

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம்
போடே"
- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின்
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல்
கட்டு மந்திரங்களை அகத்தியர்
அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..
********************************

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"
- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு
"ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.
********************************************

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங்
என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"
- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம்
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங்
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம்
பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும்
என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால்
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப்
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும்
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது
உடல் முழுமையாக உனது
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை
****************************************

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும்
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில்
மந்திரங்கள் மட்டுமே கூறப்
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு
கொண்டு வருவது போன்றவைகள்
குருவினால் மட்டுமே கூறிட இயலும்.

தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.

இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும்
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம்
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி
பார்ப்போம்.

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும்
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"
- அகத்தியர் -

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்"
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம்
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம்
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும்,
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர்,
மேலும் திருவான வினாயகரின் சுழியை
முதலில் செபித்தே தனது மந்திரங்கள்
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று
சொல்கிறார்.

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம்
உருத்தான்போடு"
- அகத்தியர் -

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க
வேண்டும் என்கிறார்.

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும்,
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன்
படுத்திடலாம்.

உடல் கட்டு மந்திரம் !!!
************************

விபூதியை கையில் வைத்துக்கொண்டு
வடக்கு முகமாய்
இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல்
முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,
ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி,
ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை
தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி
என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை
ஒன்றும்
செய்ய முடியாது.

Note: எந்தவொரு மந்திரம் செபிக்கும்
முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து
விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொ
ண்டால்
அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல்
செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின்
சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த
விபூதியை விட்டு வெளியே வரும் வரை
உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய
வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து
கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு
வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல்
முறிந்து விடும்.

பின் குறிப்பு :
*************
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள்
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை,
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும்,
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும்
தெளிவுகள் கிட்டும்.

சித்தர்களின் திக்கு கட்டு , தேக கட்டு மந்திர ரகசியம் ???
ஓம் நமசிவாய .... ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் தான் தவம் செய்யும் இடத்திலும் , தவம் செய்யும் காலம் வரையிலும் , தங்களின் தவத்திற்கும் , உடலுக்கும் இடையூறு வராமல் இருக்க , தேகக்கட்டு , திக்கு கட்டு வசியம் செய்வர் . இந்த கட்டு மந்திரம் காப்பு செய்த பின் அவர்கள் தவம் செய்து முடிக்கும் வரை உடலுக்கும் , புற வெளியில் ( விலங்குகள் மனிதர்கள் பஞ்ச பூதங்களால் ) லும் தவத்திற்கு இடையூறு இருக்காது !. சீக்கிரம் நினைத்தவரம் கிட்டும் !!
சித்தர்கள் தவம் செய்ய அமர்ந்தவுடன் , கையில் , திருநீறு , குங்குமம் , கமண்டலநீர் , அல்லது தான் அமரும் இடத்தின் மண் அல்லது ருத்ராட்சம் , இதில் ஏதாவது ஒன்றை கையில் எடுத்து கண்களை மூடி புருவமத்தியில் கையை வைத்து ஓம் நமசிவாய என 3 முறை உச்சாடனம் செய்வர் !! பின்
உடலின் கீழ் பகுதியை நினைத்து ( மூலாதாரம் ) ஓம் நங் என்றும்
உடலின் முன்புறம் நினைத்து ஓம் யங் என்றும்
உடலின் பின்புறம் நினைத்து ஓம் வங் என்றும்
உடலின் வலப்புறம் நினைத்து ஓம் சிங் என்றும்
உடலின் இடப்புறம் நினைத்து ஓம் மங் என்றும் உச்சாடனம் செய்து கையில் உள்ள திருநீறை அந்தந்த பக்கத்தில் போடுவர்! இந்த மந்திரத்தால் தவம் செய்யும் போது சித்தர்களின் தேகத்திற்கு எந்த உபாதையும் வராது !!( இது தேக கட்டு முறை )
அடுத்து திக்கு கட்டு !!!
ஓம் நங் , ஓம் யங் , ஓம் வங் , ஓம் சிங் , ஓம் மங் , என்று மந்திரம் சொல்லி தேகக்கட்டு முடித்து பின்பு திக்கு கட்டிற்கு அதேபோல் கையில் திருநீறு எடுத்து சிவனை வணங்கி கீழ்கண்ட மந்திரம் சொல்லி திசைகளில் திருநீறு போடுவர் ,
ஓம் சண்முக நாய வசிய --- தெற்கு
ஓம் பிரம்மநாய வசிய ------- வடக்கு
ஓம் தேவேந்திரநாய வசிய -- கிழக்கு
ஓம் நரசிங்கநாய வசிய ----- மேற்கு
ஓம் திரு நீலகண்டாயா வசிய --- ஆகாயம்
ஓம் காலபைரவணாய வசிய ---- பாதாளம்
ஓம் பூமிபூடாய வசிய ------- பூமி ---- இப்படி மந்திரங்கள் கூறி தவம் செய்ய ஆரம்பிப்பார்கள் , இதனால் சித்தர்களின் தவத்திற்கு தேகத்திலும் , வெளியில் இருந்தும் எந்த இன்னலும் வராது இது சித்த தவமுறை ரகசியம் ஆகும் , தற்காலத்தில் இதை அருட்காப்பு என்றும் கூறுவர் ,
நீங்களும் தவம் செய்யும்போதோ அல்லது பூஜை செய்யும் போதோ இந்த மந்திரங்களை பின் பற்றினால் சித்தர்களின் ஆசி கிட்டும்.

ஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள்

ஆறு வகை  பாரம்பரிய வணக்க முறைகள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஆறு வகை  பாரம்பரிய வணக்க முறைகள்
வணக்கம் சொல்ல மறக்காதீங்க!

தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் 'ஹலோ...' என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது 'நம' என்னும் சொல்லில் இருந்து வந்தது. 'நம' என்பதற்கு 'பணிதல்' என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே 'வணக்கம்'

ஆறு வகை  பாரம்பரிய வணக்க முறைகள்

தமிழர் நம் கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் ‘பிரணாமங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:

1) அஷ்டாங்கணம்

- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

2) ஷாஷ்டாங்கம்

- உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

3) பஞ்சாங்கம்

- உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)

4) நமஸ்காரம்

- இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)

5) அபிநந்தனம்

- இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)

6) சரணஸ்பர்ஷம்

- கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)

வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை

ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை.

 அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள்.

அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள்.

ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.

அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை.

மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம்.

இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.

இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,

போகவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம். அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.

கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

சிரஞ்சீவிகள் ஏழு பேர் !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அஸ்வத்தாமன்,
பரசுராமன்,
மார்க்கண்டேயன்,
ஹனுமான்,
விபீஷணன்,
மாபலி சக்ரவர்த்தி,
வியாசர் --

இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.

இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள்.

நாம் ஆலய தரிசனம் முடித்ததும்,
ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.

அப்போது

அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.

அதனால்,

கோவிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

திருவிளக்கின் முக்கியத்துவம் .

திருவிளக்கின் முக்கியத்துவம் .



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 




 * ஏக முகம்: பிணி நீக்கும்.

* துவி முகம்: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* த்ரி முகம்: சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.

*சதுர்முகம்: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.

*பஞ்ச முகம்: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.

*சன் முகம்: ரோகம், சத்ரு கடன் தீர.

*சப்த முகம்: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.

*அஷ்ட முகம்: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.

*நவ விளக்கு: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.

*தச முகம் : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.

*ஏக தசை முகம் : லாபங்கள் கூட, பணம் சேர,
சொத்துக்கள் வாங்க

*துவாச முகம்: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.

*சோடஷ முகம் (16 முகம்): கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.



திருவிளக்குத் துளிகள்:

* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.

* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.

* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.

* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.

* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். அதிலும் சீழ் நிறைந்த பருக்கள் வந்தால், அதுப்போக 3-4 நாட்களாவது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த வகையான பருக்கள் காய்ந்து உதிர்ந்த பின் கருமையான தழும்புகளை ஏற்படுத்தும். மேலும் இந்த தழும்புகள் அவ்வளவு எளிதில் போகாது.

ஆனால் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க ஒருசில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்தால், விரைவில் போக்கலாம். அதிலும் தினமும் அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் போய்விடும். சரி, இப்போது பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்க உதவும் எண்ணெய்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், அதனைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால், பருக்கள் விரைவில் போய்விடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் கருமையான தழும்புகள் உள்ள இடத்தில் தினமும் தடவி வர, தழும்புகள் மறையும்.

லாவெண்டர் ஆயில்

ஒரு டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெயில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவினால், நல்ல பலனைக் காணலாம்.

புதினா ஆயில்

புதினா எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருந்தாது. குறிப்பாக சென்டிசிவ் சருமத்தினருக்கு ஏற்றது அல்ல. மேலும் இந்த எண்ணெயின் ஒரு துளியை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் லேசாக அரிப்பு ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருக்கவும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தில் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகள் மட்டுமின்றி, கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியும் நீங்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. எனவே இந்த எண்ணெயை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் கூட பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்க வல்லது. அதற்கு இந்த எண்ணெயை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெயும் மிகவும் சிறப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் ஓர் எண்ணெய். இதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தலும் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி !

‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத் துவதும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியானது. ‘பிருந்தா’ எனும் பெயரும் துளசிக்கு உண்டு.

‘பிருந்தா, பிருந்தாவனி விஷ்வபூஜிதா விஷ்வபாவனி
புஷ்பசாரா, நந்தினி க்ருஷ்ண ஜீவனி துளசித்வாம் ரக்ஷ ரக்ஷமாம்’
என்று கூறி, மஞ்சள், குங்குமம், புஷ்பம் முதலி யவற்றால் துளசிச் செடியை அர்ச்சித்து கற்பூர ஹாரத்தி காட்டலாம். துளசியை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யம், புத்திர சம்பத்து, நல்ல கணவன், புகழ், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும். துளசியைக் கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை அர்ச்சிப்பதால் நான்கு லட்சம் முறை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும்.

ஒருமுறை அர்ச்சித்த துளசியை நீரில் அலம்பிவிட்டு மீண்டும் உபயோகிக்கலாம். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.

செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி மற்றும் இரவு நேரங்களில் துளசியை பறிக்கக்கூடாது. துளசி செடிக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் புண்ணியம். இதை ஆண், பெண் என அனைவரும் செய்யலாம்.

அறிவியல் பயன்கள்: துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்துதல் உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும். தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது. துளசி மணி மாலை அணியும்போது அதிலி ருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலி ருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலை யில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து நீராட, பேன், பொடுகு தொல்லை நீங்கும். வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் முதலியவற் றுக்கும் துளசி அருமருந்தாகும்.

அனைத்துத் தாவரங்களுமே பகலில் கார்பன்-டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது.

 இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இத்தனை சிறப்புகளுடைய துளசியை வளர்த்து, வணங்கி, உண்டு உயர்வு பெறுவோம்!

சுவை மருத்துவம்

சுவை மருத்துவம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். நடக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போது நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிடுவோம்.

சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்குச் சக்தி கிடைக்கிறதா?

அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா?

சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும்.

 ஆனால்  நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்கு சென்று அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது.

 ஏனவே நமக்கு 2 மணிநேரத்திற்குப் பிறகு தான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரையின் அளவை சோதனை செய்து பார்ப்பார்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு தான் சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?

நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதி பிராண சக்தி கிடைக்கிறது. நாம் உணவை வாயில் மெல்லும் பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளி புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள்  மூலமாக சுவைகளைக் கிரகித்து உடல் முழுவதும் அனுப்பி விடுகிறது.

நமது நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள் சுவையைப் பிராண சக்தியாக மாற்றி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பி மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பிரித்து கொடுக்கிறது.

நாம் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டவுடன் தெம்புடன் இருக்கிறோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும். ஏனென்றால் ஹோட்டல்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவை சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள்.

 எனவே அந்தக் சுவை நாக்கின் மூலமாக பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம்.

ஆனால் ஹோட்டலில் சோடா உப்பு. அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருள்களாக இருப்பதில்லை. எனவே ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.

நமது உடலுக்குப் பல வகையில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும் பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.

வீட்டில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி கழித்து நன்றாக தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால் வீட்டில் நாம் சுவைகளைப் பற்றி கவலைப் படுவதில்லை.

 ஆனால் உணவு சத்து பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே சுவைகள் மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால் உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.

 வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹோட்டலில் சுவை மூலமாக கிடைக்கும் பிராண சக்தி முதல் ஒரு மணி நேரத்திற்குப் பயன்படுகிறது. ஆனால் அதன் பிறகு சத்துப் பொருட்கள் இல்லை என்பதால் சோர்வடைகிறோம். வீட்டில் சுவை இல்லை என்பதால் முதல் ஒரு மணி நேரம் சோர்வாக இருக்கிறோம். பின்னர் சத்துப் பொருட்கள் மூலமாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் சக்தியுடன் இருக்கிறோம்.

எனவே வீடுகளில் இனி மேல் ஹோட்டலைப் போன்று சுவையாக சமைக்க வேண்டும். அதே சமயம் ஹோட்டலில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருள்களை சமைக்க வேண்டும். இப்படி செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம். எனவே சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் ஒரு அற்புதமான ஒரு விசயம். எனவே நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகையிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழ்வதற்கு கற்றுக் கொள்ளலாம்.

நமது வீட்டில் கரண்ட் போய்விட்டது என்றால் டி.வி, ஃபேன், டியூப் லைட் வேலை செய்யாது. ஆனால் கே° அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கே° தீர்ந்து விட்டது என்றால் அடுப்பும் எரியாது. ஆனால் ருஞளு மூலமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் அணையாது. இப்படி நாம் வீட்டில் கரண்ட்டு மூலமாக சில பொருட்களும், பேட்டரி மூலமாக சில பொருட்களும் ருஞளு மூலமாக சில பொருட்களும் கே° சிலிண்டர் மூலமாகச் சில பொருட்களும் இப்படி ஒவ்வொரு பொருள்களும் ஒவ்வொரு எரிபொருள் மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதே போல் நமது உடலிலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். நமது உடலில் மொத்தம் ஐந்து விதமான பிராண சக்தி என்ற கரண்ட் இருக்கிறது. ஒவ்வொரு விதமான கரண்ட் என்கிற பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்புகள் வேலை செய்யும்.

குடல்வால் (Appendix)

குடல்வால் (Appendix)


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அப்பன்டிக்ஸ் வலிக்கிறது என்று கூறினால் குடல்வால்-யை வெட்டி வெளியே எடுத்து விடுவார்கள். அது என்ன வேலை செய்கிறது என்று தெரியுமா? உடலிலுள்ள கழிவுகளை அகற்றுகின்றது.

 உடலில் வலது பக்க, இடது பக்க இரண்டையும் அளவாக வைத்துக் கொள்கிறது. Equilibrium என்று சொல்வார்கள்.

குடல்வால்எடுத்தவர்கள் மலை மேல் ஏறும் போது அவர்களால் Balance செய்ய முடியாது.

இடது பக்கத்தை வலது பக்கத்தை அவர்களுக்கு Balance செய்து ஒழுங்காக வைத்து கொள்ள தெரியாது.

ஆனால், உலக வைத்தியம் கூறுகிறது. குடல்வால் (Appendix) என்ற உறுப்பு தேவையேயில்லை என்று. நமது உடலில் ஒரு உறுப்பு தேவையில்லையென்று எப்பொழுது கூறுகிறார்களோ, அப்பொழுது என்ன அர்த்தம். கடவுள் முட்டாள் என்று அர்த்தம்.

 கடவுளுக்கு ஒரு உறுப்பு தேவையா ? இல்லையா ? என்று தெரியாதா குடல்வால் எ ந் தவொரு வேலையும் செய்யவில்லை என்று ஒரு மருத்துவர் கூறுகிறார் என்றால் அவருக்கு அந்த உறுப்பு என்ன செய்கிறது என்று தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, அவருக்குப் புரியவில்லை என்று அர்த்தமே தவிர, அந்த உறுப்பு எந்த வேலையும் செய்வதில்லை என்பது தவறான ஒரு கருத்து.

இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது.

 அந்த உறுப்பைக் குணப்படுத்துவதுதான் வைத்தியம். எனவே, நமது சிகிச்சையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக எந்த உறுப்பில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கட்டி, குடல்வால் போன்ற நோய்களுக்கு உறுப்பை அறுக்காமலேயே, உடலின் உள்ளேயே உறுப்பை புதுப்பிப்பதற்குச் சில சுலபமான வழிமுறைகள் உள்ளன.

எனவே, புரிந்து கொள்ளுங்கள். ஒரு உறுப்பை வெட்டி எடுப்பதற்கு மருத்துவர் தேவை இல்லை. அந்த உறுப்பை குணப்படுத்துவதற்கு மட்டுமே மருத்துவர் தேவை. இப்படி உறுப்புக்களை வெட்டி எடுக்கிறார்கள். முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக் கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புகளிலும் புதுப்புது நோய் வரும்.

உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.

உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



நமது முன்னோர்கள் சாப்பிடும் பொழுது முதலில் இலையில் இனிப்பான பொருளை வைத்திருந்தார்கள்.

ஏனென்றால் இனிப்பு என்ற சுவை இரைப்பையையும், மண்ணீரலையும் வேலை செய்ய வைக்கும் சக்தி என்று பார்த்தோம்.

நாம் சாப்பிடுகிற உணவு முதலில் இரைப்பையில் சென்று விழுகிறது. எனவே இரைப்பைக்கு சக்தியைக் கொடுக்கும் இனிப்பை முதலில் சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும்
என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சிலர் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு கடைசியாக இனிப்புச் சாப்பிடுவார்கள். அதை விட சிறந்தது முதலில் இனிப்புச் சாப்பிட்டு, பிறகு சாப்பிட ஆரம்பிப்பது.

 எனவே எப்பொழுது சாப்பிடும் பொழுதும் முதலில் இனிப்பை சாப்பிட ஆரம்பியுங்கள். அதற்காக சர்க்கரைப் பொங்கலை இரண்டு கரண்டி வைத்து முழு சர்க்கரைப் பொங்கலையும் முடித்து விட்டுப் பிறகு மற்ற பண்டத்தைச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்.

 முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள். பிறகு மற்ற எல்லா சுவைகளையும் சாப்பிட்டு விட்டு நடுவில் தேவைப் பட்டால் மீண்டும் இனிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியாகவும் இனிப்பை சாப்பிடலாம். இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு முறை. அவ்வளவு தான். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

மீண்டும் ? ஞாபகப்படுத்துகிறேன். பலர் இந்த எல்லா முறைகளையும் படித்து விட்டு ஒவ்வொரு வேளையும் கஷ்டப்பட்டு இந்த முறைகளைக் கையாள வேண்டாம்.

ஒரு சில நேரத்தில் சில முறைகளைக் கையாள முடியும் அல்லது கையாள முடியாது. எனவே கவலை படாமல், பயப்படாமல் சாப்பிடுங்கள்.

 முதலில் இனிப்பு எடுக்கவில்லையே என்ற எண்ணத்துடன் சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் கவலைப் படாமல் தைரியமாக சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக

K.Karthik Raja's Share Market Training - Student Mr. Manoj Aryan (IT Professtional)

K.Karthik Raja's Share Market Training  - Student Mr. Manoj Aryan (IT Professtional)

Mr Manoj (IT Professional) - Chennai Feedback about K Karthik Raja's Share Market Training's


                             K.Karthik Raja With Manoj Aryan(IT Professional)
                                              (One to One Training Session 1)

" I know Rupee Desk through one of my relatives who worked here as an Indian equity market consultant, a few years back. I joined basic equity market training last week and it was a good learning first session conducted by Mr. Karthik Raja last saturday. It was an eye opener session for me and I am looking forward to learn more from the professional. Here i am at the training center for the next session with full eagerness and enthusiasm to learn more! "

Manoj Aryan(IT Professional)

               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



                              K.Karthik Raja With Manoj Aryan (One to One Training Session2)

Share Market Training & Online Stock Market Courses - Share Trading Academy - Rupeedesk
Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training


இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 




இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்தது ½ மணிநேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது உணவு மீண்டும் சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும்.

எனவே தூக்கத்தைப் பொறுத்தவரை எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது படுக்கவேண்டும். படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உடலே தானாக தூங்கும், உடலே தானாக எழுந்திருக்கும். இப்படி இயல்பாக நம் உடல் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அவ்வளவு மணி நேரம் நாம் தூக்கத்தைக் கொடுத்தால் உடலில் ஆகாயம் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் சரியாக பெற்று அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. வாழ்வோம் ஆரோக்கியமாக. !

மூட்டு வாதம் - ரொமேட்டேட் ஆர்த்தரெட்டீ°ஸ்(Rheumatoid Arthritis) என்ற நோயாகும்

மூட்டு வாதம் - ரொமேட்டேட் ஆர்த்தரெட்டீ°ஸ்(Rheumatoid Arthritis) என்ற நோயாகும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



மூட்டு முழங்கால் வாதம் என்பது என்னவென்றால், ஹெல்பர், கில்லர் என்ற மருந்தை அனுப்பிவிட்டு, சப்ரசர் என்ற ஒரு மருந்தை நம் உடல் அனுப்பாமல் இருந்தால் இந்த கில்லர் என்ற ஒரு மருந்து நோய்க்கிருமியை அழித்த பிறகு, நமது மூட்டு முழங்கால்களையும் அழிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ரொமேட்டேட் ஆர்த்தரெட்டீ°ஸ் என்ற நோயாகும். எவர் ஒருவர் உடலில் நாம் மேலே கூறிய ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கும் இந்த ஆர். ஏ. என்ற இந்த நோய் வராது. ஒரு வேளை வந்து விட்டால் இந்த ஐந்தையும் சரிசெய்வது மூலமாக நமது உடல் சப்ர°ஸர் என்ற மருந்தை எப்பொழுது அனுப்புகிறதோ அன்று முதல் அவருக்கு அந்த நோய் குணமாகும்.

எனவே நமது உடலில் ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் நோய்க்கிருமியால் உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதருக்கும் நோய் வராது என்பதை புரிந்து கொண்டு நோய்க் கிருமிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து நமது நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு, நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்வது மூலமாக நாம் ஆரோக்கிய மான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் சிசிச்சை

வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் சிசிச்சை
 vomiting is not a disease. It is the treatment



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நமக்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வாந்தி வருகிறது. தினமும் வருவது கிடையாது. வாந்தி எப்பொழுது வருகிறது என்று சற்று யோசித்து பாருங்கள். நாம் ஏதாவது கெட்டுப்போன பொருட்களை சாப்பிட்டால் வரும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் வரும். பசி இல்லாமல் சாப்பிட்டால் வரும். உடல்நிலை சரியில்லாதபொழுது சாப்பிட்டால் வரும். எனவே வாந்தி என்பது என்னவென்றால் நாம் ஒரு கழிவுப்பொருளை கெட்டுப்போன ஒரு உணவை ஒரு ஹோட்டலில் சூடு செய்து கொடுக்கும்பொழுது நமக்கு தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் நம் வயிற்றுக்கு ஒரு அறிவு உள்ளது. ஒரு உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நல்ல உணவாக இருந்தால் மட்டுமே ஜீரணம் செய்யும். கெட்டுபோன உணவுகளை நம் வயிறு ஜீரணம் செய்யாது. நம் வயிற்றுக்கு உள்ள அறிவு நாம் சாப்பிட்ட உணவை நல்லதா? கெட்டதா? என ஆராய்ச்சி செய்யும். நல்ல உணவாக இருந்தால் ஜீரண சுரப்பிகளை சுரக்க வைத்து அதை ஜீரணம் செய்து சிறு குடலுக்குள் அனுப்பும். கெட்டுபோன உணவாக இருந்தால் உடனே ஜீரண சுரப்பிகளை நிறுத்திவிட்டு வாந்தி எடுப்பதற்கு என்று சில சுரப்பிகள் உள்ளது. அதை சுரக்க வைக்க ஆரம்பிக்கும்.

வயிற்றில் உள்ள உணவை நாம் பற்களால் நன்றாக அரைக்காமல் குண்டு குண்டாக சாப்பிட்டு இருப்போம். வாந்தி எடுப்பதற்காக அந்த உணவை கட் செய்து சிறிதுபடுத்தும். மேலும் வயிற்றில் நீரை அதிகரிக்கும். நாம் இரவு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருப்போம். ஆனால் வாந்தி வரும் பொழுது பாருங்கள் அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் இருக்கும். இந்த நான்கு டம்ளர் தண்ணீர் எங்கு இருந்து வந்தது. நம் வயிறு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் உள்ள தண்ணீரையும் எடுத்து வயிற்றில் ஊற்றி விடும். மேலும் வேகமாக வயிற்றிலிருந்து உணவுக்குழாயிலிருந்து வாயின் வழியாக வெளியே வரும் பொழுதும் உணவுக்குழாயும், வாயும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக லூப்ரிகேசன் எண்ணெய்களை ஊற்றி பத்திரமாக வெளியனுப்ப சில சுரப்பிகளை சுரக்க வைக்கும்.

இப்படி உடல் கெட்டுப்போன உணவை அல்லது தேவையில்லாத உணவை, அளவுக்கு அதிகமான உணவை ஜீரணம் செய்தால் குடல் மற்றும் இரத்தத்தில் கழிவுகள் தேங்கி உடலுக்கு ஆபத்து வரும் என்ற நல்ல எண்ணத்தில் நமது உடலில் உள்ள மருத்துவர் வாந்திக்கான சுரப்பிகளை சுரக்க வைத்து நமக்கு தெரியாமல் நம்மை மீறி ரெடி 1, 2, 3 என்று கூறிவிட்டு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வயிற்றில்இருக்கும் கழிவுப் பொருட்களை வாய் வழியாக வேகமாக வாந்தி என்ற ஒரு சிசிச்சை மூலமாக வெளியேற்றுகிறார். நாம் அறிவில்லாமல் சாப்பிட்ட ஒரு கழிவுப் பொருளை நம் வயிறு அறிவுடன் தூக்கி வெளியே வீசும் ஒரு சிசிச்சைக்கு பெயர்தான் வாந்தி. வாந்தி என்பது ஒரு நோய் கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் சிசிச்சை.
ஆனால் நம்மில் பலர் வாந்தி வருவது போல் இருந்தால் உடனே எலுமிச்சம்பழத்தை எடுத்து மூக்கில் வைத்து நுகர்வார்கள் அப்படி செய்யக்கூடாது. அப்படி செய்தால் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் அந்த வாசம் மூக்கின் வழியாகஉடலுக்குள் சென்று வாந்தி எடுப்பதை நிறுத்துகிறது. வாந்திக்காக தயார் செய்யப்பட்ட ஒரு கழிவுப்பொருள் தயார் நிலையில் வயிற்றில் இருக்கும்பொழுது அதை ஜீரணம் செய்வதற்காக நாம் ஒரு வேலையைச் செய்தால் இது நம் உடலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? சிலர் வாந்தி வருவது போல் இருந்தால் ஒரு மருந்து கடைக்குச் சென்று "வாந்தியை நிறுத்துவதற்கு ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள். மாத்திரையை கொடுங்கள்" என்று சாப்பிடுவார்கள். அப்படி தயவுசெய்து செய்யாதீர்கள். சிலர் சில பாட்டி வைத்தியங்களை கடைபிடித்து வாந்தி வராமல் தடுப்பார்கள்.

வாந்தி எடுத்த பிறகு அதை யாராவது சாப்பிடுவீர்களா? நினைத்துப் பார்ப்பதற்கே எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருவதுபோல் இருக்கும்போது, யார் யாரெல்லாம் மருந்தை மாத்திரையை சாப்பிட்டு வாந்தியை நிறுத்துகிறீர்களோ, அவர்கள் வாந்தி எடுத்து அதை வழித்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள். எப்பொழுது நம் வயிறு இது கழிவு பொருள், இது உடலுக்கு தேவையில்லை என்று வெளியே தூக்கி வீச தயாராகிவிட்டதோ அந்த கழிவு வெளியே வந்தே தீர வேண்டும். அந்த வாந்தியை ஜீரணம் செய்வதற்கு நீங்கள் மருந்து மாத்திரையை சாப்பிட்டால், என்னவாகும்? வயிற்றை வாந்தியை ஜீரணம் செய்ய வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த கழிவு ஜீரணம் செய்து உடலுக்குள் அனுப்பும் பொழுது குடலில் நோய்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுப்பொருளும் இரத்ததில் கலந்து பல உறுப்புகளுக்கு நோயை ஏற்படுத்துகிறது. எனவே புரிந்து கொள்ளுங்கள் வாந்தி என்பது ஒரு நோயே கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் ஒரு வைத்தியம் ஆகும்.

வாந்தி என்பதை நோய் என்றும், வாந்தி வந்தால் இதை செய்தால் குணமடையும் என்று கூறினால், அவர் மருத்துவரே கிடையாது. எனவே, வாந்தி வரும் பொழுது உலகத்தில் மிகச்சிறந்த சிசிக்சை ஒன்றே ஒன்றுதான். நன்றாக வாந்தி எடுக்கவேண்டும். உடல் கழிவை தூக்கி வெளியே வீசும்பொழுது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும். எனவே வாந்தி வரும்பொழுது தயவு செய்து ஓரமாக அமர்ந்து உங்கள் விரலை வாய்க்குள் விட்டால் நன்றாக வாந்தி வரும். வாந்தி எடுத்தவுடன் சாதாரண தண்ணீரை குடித்தால் மீண்டும் வாந்தி வரும். இப்படி உங்கள் வயிற்றிலிருக்கும் கழிவுபொருட்கள் வெளியே வரும் வரைக்கும் தான் வாந்தி வரும். என்றாவது உங்கள் வயிறு வெளியே வந்து விழுந்திருக்கிறதா? கழிவுதானே வெளியே வருகிறது. அது வெளியே சென்றால் நம் உடல் ஆரோக்கியமாகத் தானே இருக்கும். எனவே தயவுசெய்து வாந்தி வரும்பொழுது அதற்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யக்கூடாது. வாந்தி என்பதே ஒரு சிகிச்சைதான் என்பதை புரிந்து கொண்டு வாந்தி எடுங்கள். இப்படி வாந்தி எடுத்து வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வந்து முடிந்தபிறகு சாதாரண தண்ணீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து கல் உப்பு தேவையான அளவு கலந்து குடிந்தால் ஒரு அரைமணி ஒருமணி நேரத்திற்குள் நம் வயிறு பழைய நிலைமைக்கு திரும்பும். நன்றாக பசிக்கும். இப்படி கழிவை வெளியேற்றிய பிறகு சுத்தம் செய்து பிறகு உணவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வாந்தி வந்து கொண்டு இருக்கும் பொழுது அல்லது வருவது போல் ஒரு உணர்ச்சி இருக்கும்பொழுது எலுமிச்சம்பழம் ஜூ°ஸ் குடிக்கக்கூடாது. வாந்தி எடுத்து முடித்து வயிறு காலியான பிறகு மட்டுமே எலுமிச்சம்பழம் ஜூ° குடித்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.


English:

Vomiting

We feel like vomiting (throwing up) rarely. We do not vomit every day. Please think carefully why we vomit. Vomiting comes only when we eat some bad food or when we eat too much food. Vomiting comes also if we eat when we are not hungry or when we are not feeling well. S o , w h a t c a u s e s
vomiting? If a bad food is heated up in a hotel and given to us, we may eat it, unaware of its quality. But, our body has got a sense. It will digest the food only if it is good. Our stomach will  not digest bad food. Our stomach will check to see if the food that we ate is good or bad. If it is good food, then only the stomach will make the digestive glands to secrete and digest the food and send it to
the small intestine. If the food is not good, then the stomach will stop the digestive glands from secreting and it will order the glands meant for vomiting to secrete. We might have eaten the food without chewing it fully with our teeth and making it as a paste. In order to vomit such a food, our
body will cut the food and make it into smaller pieces. It will also increase the water
in our stomach. We might have drunk one glass of water after dinner. But you will
observe that the vomit contains about five glasses of water. Where did the remaining four glasses of
water come from? Our body will gather water from all the remaining parts and give it to the stomach. Moreover, when the vomit comes fast from the stomach through the food path (alimentary canal) and through the mouth, in order to protect the food path and the mouth, our body will make some
glands to secrete some lubricating matter. Thus, with the good intention that, if the stomach digests bad food, unwanted food or excess food, the wastages should not remain in our intestine and blood, the doctor in our body makes the glands for vomiting to function and, without our knowledge, says
“Ready, 1, 2, 3...” and all our body parts work together and the waste matter inside our stomach is sent out through the mouth in the name of a treatment called vomiting. The bad food that we ate senselessly is being thrown out by our stomach using its sense. The name of this treatment is vomiting.

Therefore, vomiting is not a disease. It is the treatment that is given by our body to itself.
But, many people smell a lemon when they get a vomiting sensation. It is not the
right thing to do. If we do it, the smell in the lemon goes inside our body through our
nose and stops the vomiting. When the waste matter is ready in the stomach for
being sent out, if we do something to digest it, is it not a treachery that we do to our
body? Some people go to a medical store immediately when they get vomiting sensation and ask, “Please give me a medicine or tablet to stop vomiting.” Some people use some household remedy to stop the vomiting. Please do not do any such thing to stop vomiting. After vomiting, will anybody eat the vomited matter? It is disgusting even to think about it. If someone takes a medicine
or tablet and stops the vomiting, it means that they eat their own vomit. Once the
stomach has decided that a matter is garbage and has decided to throw it out, that matter has to come out of our body. What will happen if you take a medicine or tablet to digest that waste material? It means that you have forced your stomach to digest that vomit. If this waste material is digested, the
intestine will get diseases. Moreover, this waste material will mix in the blood and
many other parts of the body will get disease. Thus, we understand that vomiting is
not at all a disease. Vomiting is nothing but a treatment given by our own body. If a doctor
says that vomiting is a disease and something is to be done to stop it, then that person is not at all a doctor.

Therefore, the best treatment in the world for vomiting is to just vomit well. When the body is throwing out a waste matter, why should we stop it? So, if you feel like vomiting, please sit in a corner and put a finger inside your mouth so that vomit comes out well. After vomiting, if you drink ordinary water, you will get vomiting again. Vomiting will come only as long as waste matter is
inside your body. Only waste matter comes out when you vomit. Your body will become
healthier if waste material comes out. Therefore, please do not take any treatment
when you get vomiting. Do the vomiting with the understanding that vomiting itself
is a treatment being given by your body. After vomiting, when all the waste matter from the stomach has come out, if you drink a glass of water mixed with lemon and crystal salt, your stomach will come back to normal condition in about half an hour to one hour. Then you will feel hungry.
If you eat after sending out waste matter like this and cleaning your stomach, your body
will be healthy.

Therefore, when you are vomiting or when you have the vomiting sensation, you should not drink lemon juice. Only after you completely finish vomiting and when your stomach becomes empty, you should drink lemon juice to clean your stomach. 

தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா !

தடுப்பூசி என்றால் என்ன - நல்லதா ! கெட்டதா !


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



தடுப்பூசியைப்பற்றிக் கேள்விப் படாத நபர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. தடுப்பூசியில் என்ன இருக்கும்? தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தடுப்பூசி என்பது அந்த நோய்க்கிருமியை அழிக்கும் ஒரு மருந்து இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிக் கிடையாது. தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்குமே தவிர நோய்க்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் இருக்காது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. உதாரணமாக போலியோ சொட்டு மருந்து என்றால் போலியோ வைரஸை உயிருடன் குழந்தைக்கு அனுப்பும் ஒரு முறைதான் போலியோ தடுப்பு சொட்டு மருந்து. அம்மை தடுப்பூசி என்றால் அம்மை நோய்க்கிருமியை சில பிராச° செய்து குழந்தையின் உடலில் அனுப்புவதற்கு அம்மைத் தடுப்பூசி என்று பெயர்.

எனவே தடுப்பூசியில் நிறைய ரகங்கள் உள்ளது. ஒரு சில தடுப்பூசிகள் உயிருடன் கிருமிகளை அனுப்புவார்கள். ஒரு சில இறந்த கிருமிகளையும், ஒரு சில தடுப்பூசியில் பாதி இறந்த மயக்க நிலையில் உள்ள கிருமிகளையும் அனுப்புவார்கள். ஆக தடுப்பூசி என்றால் மருந்து மாத்திரை இருக்காது. நோய்கிருமிதான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆச்சரியமாக இருக்கும். நோய்க்கிருமிகளை உடலில் அனுப்பினால் இதற்குத் தடுப்பூசி என்று எப்படி பெயர் வைக்க முடியும்.

பிறந்த குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ அல்லது எபிசிடி-யோ தெரியாது. தான் ஒரு மனிதன் என்றே ஒரு குழந்தைக்குத் தெரியாது. ஆணா? பெண்ணா? என்றும் அந்த குழந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமியை உடலில் அனுப்புவது என்ன தைரியத்தில் என்று கேட்டால் மனித உடலில் அனைவருக்கும் ஒரு அறிவு உள்ளது. எந்த நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது உடலுக்கு நோய் உண்டு செய்யும் கெட்ட கிருமியா என்று ஆராய்ச்சி செய்யும். நல்ல கிருமிகள் பல ஆயிரக்கணக் கானவை உள்ளன. அவற்றை நம் உடல் ஒன்றும் செய்யாது. உடலுக்கு நோயை ஏற்படுத்தும். கெடுக்கும் நோய்கிருமிகளைக் கண்டுபிடித்து விட்டால் உடலில் உள்ள தைம°ஸ் சுரப்பி, கல்ஙூரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் பல சுரப்பிகளும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரி மருந்து வேண்டும் என்று யோசித்து அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களையும், எந்தவிதத்தில் கலக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும். அதாவது ஒரு பார்முலா தயார் செய்யும்.

பார்முலா என்றால் என்னவென்றால் நமது வீட்டில் ஒரு ரசம் செய்வதற்கு எந்த எந்த பொருட்களை எவ்வளவு கலந்து எப்படி சுடவைத்துத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது அல்லவா? அந்த பார்முலா தெரியாத நபரால் ரசத்தை தயாரிக்க முடியாது. அதுபோல உடலில் உறுப்புகளாகிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு பார்முலாவை எழுதி அந்த பார்முலாவுக்கு தேவைப்படுகிற மூலப்பொருள்களை இரத்தம் என்ற இடத்திற்குச் சென்று எடுத்து வந்து அதை சரியாக கலவை செய்து மருந்தை தயார் செய்து, அந்த மருந்தை நோய்க்கிருமிகள் மேல் செலுத்தி அந்த நோய்க்கிருமியை அழிக்கிறார்கள்.

இப்படி உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே பிறந்த நாள்முதல் நோய்க்கிருமியை அழிக்கும் ஆற்றல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் மட்டுமே உலகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.

தடுப்பு ஊசி என்ற பெயரில் உடலுக்குள் நோய்க்கிருமிகளை உடலுக்குள் அனுப்புகிறார்கள். உடல் அந்த நோய்கிருமி என்றுஅறிமுகப்படுத்தி அதை அழிக்கும் சக்தியை நம் உடல் பழகுவதற்குத்தான் தடுப்பூசி அனுப்பப்படுகிறது.

தடுப்பூசியில் நோய்கிருமிகள்தான் இருக்கும் என்ற விஷயமும், அதுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது என்று உலகத்திலுள்ள எந்த மருத்துவரிடம் கேட்டாலும் சொல்வார்கள். இது பொதுமக்களாகிய நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? இதைக்கூட தெரியாத நமக்கு உடலைப் பற்றியும், மருத்துவத்துறையைப்பற்றியும் வேறு என்ன தெரிந்திருக்க முடியும்.

தடுப்பூசிகள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் மட்டுமே செலுத்துவார்கள். 20 வயது 50 வயது நோய்களுக்கு தடுப்பு ஊசி கொடுக்கப்படுவது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு உடலில் 5 விஷயங்கள் ஒழுங்ககாக இருக்கும். வயதாக வயதாக நம்மில் நம்மிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கத்தினால் அந்த 5ல் ஒன்றோ இரண்டோ கெட்டு விடும். நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கும் பொழுது மட்டுமே ஒரு நோய்க்கிருமியை உடல் அறிவால் அழிக்க முடியும். அப்பொழுது பிறந்த குழந்தைக்கு என்ன இருக்கிறது. இப்போது நம்மிடம் என்ன இல்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமி அனுப்பும்பொழுது அது உடம்பில் நோய்கிருமியை அழித்து விடுகிறது. ஆனால், 20 வயது 50 வயது நபர்களுக்கு நோய்க்கிருமியின் மூலமாக சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற நோய்கள் வருகிறதே இது எதனால் என்று யோசிக்க வேண்டும்.

மனிதனின் உடலுக்கே நோய்கிருமியை அழிக்கும் சக்தி இருந்தால், எனக்கு ஏன் சிக்கன் குன்யா போன்ற நோய்கிருமிகள் வருகிறது என்ற சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும். அதற்குக் காரணம், சிறு வயதில் நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கிறது. இப்பொழுது 5 விஷயங்களில் ஏதோ ஒன்றோ இரண்டோ ஒழுங்காக இல்லை. எனவே, நோய்கிருமியினால் ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதில்லை. நம் உடலில் ஏதோ ஒன்று குறைபடுவதால் அந்த மருந்தைத் தயாரிக்கும் முறையில் சில சிக்கல்கள் ஏற்படுவதால் அந்த நோய்க்கிருமியை அழிக்க முடியாமல் நம் உடல் தடுமாறுகிறது. எனவே, தவறு நோய் கிருமிகள் மேல் இல்லை. நமது உடலில் உள்ள சில விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதை சரிப்படுத்துவது எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் நாம் நோய்கிருமியை பார்த்து பயப்படத் தேவையில்லை.

உடலை அம்மாவாகவும், இரத்தத்தை சமையலறையாகவும் இரத்தத்தில் உள்ள பொருள்களை சமையல் அறையில் உள்ள பொருளாகவும், ரசத்தை ஒரு நோய்கிருமிக்கான மருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். சமையலறையில் ரசத்திற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப்போன பொருளாக இருந்தால் அதை வைத்து ரசம் செய்யும்பொழுது அந்த ரசத்தை நாம் சாப்பிட முடியாது. அதுபோல ஒருவருக்கு ஒரு நோய்க்கிருமி உடலில் நுழையும்பொழுது அதை அழிக்கத் தயாரிக்க தேவையான ஒரு பொருள் நமது இரத்தத்தில் கெட்டுப்போய் இருந்தால் அந்த மருந்தால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. இதனால் நமக்கு அந்த நோய்கிருமியை அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இது முதலாவது காரணம்.

இப்பொழுது கூறுங்கள். நோய்கிருமியால் நோய் வந்ததா? அல்லது நம் இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்ததால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் தரம் குறைந்த பொருளைத் தரம் சரி செய்வது எப்படி? என்பதை நாம் கற்றுக் கொள்ள போகிறோம். எனவே இனி நாம் நோய்க்கிருமியை அழிப்பதற்கு மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் இரண்டு. ஒரு வேளை சமையலறையில் ரசம் தயாரிக்க ஒரு பொருள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரசத்தில் ஒரு பொருள் இல்லாமல் உருவாக்கினால் அதை யாரும் சாப்பிட முடியாது. அதேபோல் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க தேவைப்படும் ஒரு பொருள் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ நம் உடலால் அந்த குறிப்பிட்ட மருந்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோய்க்கிருமி அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இப்பொழுது சொல்லுங்கள் நோய்கிருமியால் நோய் வந்ததா? இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் அல்லது குறைந்து இருப்பதால் நோய் வந்ததா? நமது சிகிச்சையில் இரத்தத்தில் இல்லாமல் போன பொருளை வைப்பதற்கும், குறைந்த பொருளை சரிசெய்வதற்கும் சில எளிய முறைகள் உள்ளன. அதை நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். அதை கற்றுக்கொண்டு ஒழுங்கு படுத்தினால் நோய்கிருமிகளிலிருந்து நம் உடலை நாம் காப்பாற்றலாம்.

மூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதனுடைய உடலிலுள்ள உயரம், எடை, வயதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உள்ளது. 4 லிட்டர் 5 லிட்டர் என நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதன் அளவு குறையும் பொழுது நோய்க்கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தை நம் உடல் செய்யாது. எனவே இரத்தத்தின் அளவு குறைவதால் தான் நோய் வருகிறதே தவிர, நோய்கிருமியால் அல்ல என்பதை புரிந்து கொண்டு இரத்தத்தின் அளவை சரியாக வைத்துக்கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். எனவே நாம் நோயிலிருந்து விடுபடலாம்.

நான்காவது காரணம். நமது மனம் கெட்டுப்போனால், நோய்க்கிருமியை அழிக்க முடியாது. நமது மனதிற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் மனம் எதைப்பற்றி யோசிக்கிறதோ, உடல் அதைச் செய்யும். ஒரு உடலுக்கு நோய்க்கிருமியால் ஒரு காய்ச்சல் வந்தவுடன் நமது மனம் நமக்கு நோய் வந்து விட்டது பயமாக இருக்கிறது. இதை மருந்து மாத்திரையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று நினைத்தால், உடல் உங்கள் நோயை குணப்படுத்தாது. என் உடலுக்கு அறிவுள்ளது அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று மனதில் பயமில்லாமல் தைரியமாக இருந்தால் மட்டுமே நம் உடல் நம் நோயை குணப்படுத்த முடியும்.

 நீங்கள் பார்த்திருக்கலாம் பலர் பல சந்தோஷமாக அமர்ந்திருக்கும்பொது அந்த உணவில் பல்லி விழுந்து விட்டது என்று யாராவது சொன்னால் அடுத்த வினாடி வாந்தி வருகிறது. உணவில் பல்லி விழுந்தது என்று தெரியாதவரை ஜீரணம் செய்து கொண்டிருந்த வயிறு இப்போது ஏன் வாந்தி எடுத்தது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மனம் நினைத்தால் ஜீரணம் செய்யும் வயிற்றை நிறுத்தி வாந்தி எடுக்க வைக்கும். எனவே, மனதில் ஒரு நோய் வந்தவுடன் பயம் ஏற்பட்டால் அந்த நோயை உடல் குணப்படுத்தாது. இது நான்காவது காரணம்.

நமது உடலில் அறிவு உள்ளது. அந்த அறிவுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது. அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அது கெட்டுப் போகும் பொழுதும் நமக்கு நோய்க்கிருமியால் நோய் வரும். இது ஐந்தாவது காரணம்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால் நோய்க்கிருமியால் உடலுக்கு நோய் வருவதில்லை. நம் உடலில் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதால், இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் போவதால் அல்லது குறைந்து போவதால், இரத்தத்தின் அளவு குறைவதால், மனது கெட்டுப் போவதால், உடல் அறிவு கெட்டுப் போவதால் மட்டுமே நமக்கு நோய் வரும்.
எனவே ஒருவருக்கு நோய்கிருமியால் எந்த நோயும் வரவில்லையென்றால் அவ்வுடலில் இந்த 5 விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறது என்று பொருள். ஒருவருக்கு நோய்க்கிருமியால் நோய் வந்து விட்டது என்றால் ஐந்தில் ஒன்றோ, இரண்டோ அல்லது பல விஷயங்கள் கெட்டுப் போய்விட்டது என்று பொருள்.

நோய்க்கிருமியால்தான் நோய் வருகிறது என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோய்க்கிருமியால் நோய் வருகிறது என்றால், மருத்துவர்களுக்குத்தான் அதிகமாக நோய் வரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள்தான் தினமும் மருத்துவமனையில் பல கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் உடலிலிருந்து வரும் காற்றின் மூலமாக, அவர்கள் தொடும் பொருள்களின் மூலமாக அந்தக் கிருமிகள் பரவுகிறது. ஏன் மருத்துவர்களுக்கு மட்டும் அந்த நோய் வரவில்லை.

நோய்கிருமியால்தான் நோய் வருகிறது என்பது உண்மையானால் ஒரு ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரே நோய் வரவேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் பத்து நபர்கள் இருந்தால் எட்டு நபர்களுக்கு வரும் நோய் அந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

அந்த இருவருக்கும் இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கும். எனவே உலகிலுள்ள பலவிதமான நோய் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கு பெயர் வைத்து அந்த நோய்கிருமிகளை பெரிய மனிதர்களாக ஆக்குவதை விட்டுவிட்டு நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களையும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சிறிய ரகசியங்களை புரிந்து கொண்டு அதை சரி செய்துவிட்டால் எந்த நோய்க் கிருமியாலும் எந்த நோயும் வராது.

நோய்க்கிருமி என்றால் என்ன? அது என்ன வடிவத்தில் இருக்கும்? என்ன அளவில் இருக்கும் என்று தெரியாத பலர் இந்த நோய்கிருமியைப்பார்த்து பயப்படுவார்கள். பல கிருமிகள் நம் கண்ணிற்கே தெரியாது. இதுவரை யாரும் மைக்ரா°கோப் மூலமாக கூட யாரும் பார்த்தது கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் பலகோடிக் கணக்கான நோய் கிருமிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், நாம் விடும் மூச்சுக்காற்றின் வழியாக பல கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை நம் உடலுக்குள் சென்று வெளியே அனுப்புகிறோம்.

எனவே தயவு செய்து நோய்க்கிருமியைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கு எந்த நோய்க்கிருமியாலும் எந்த நோயும் வராது. அப்படி வந்தாலும் காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இந்த புத்தகத்தில் விரிவாக கூறியிருப்போம். அதைமட்டும் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால் எந்த மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவரின் உதவி இல்லாமலே நாம் நோய்க்கிருமியை வெல்ல முடியும்.

எனவே, தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்கும். பிறந்த குழந்தைக்கு மிகச்சிறந்த தடுப்பூசி குழந்தையின் அம்மாவின் தாய்ப்பால்தான். தாய்ப்பால்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பூசி. ஒரு அம்மா தன்னுடைய வாழ்நாளில் மற்றும் அவருடைய பரம்பரையில் உள்ள அனைத்து நோய்களையும் எப்படி குணம் செய்தார் என்ற ரகசிய பார்முலாவை தாய்ப்பாலின் வழியாக தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு முதல் 3 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வேறு எந்த தடுப்பூசியும், மருந்து மாத்திரையும், லேகியமும் கொடுக்காமல் வளர்த்தால் உலகிலேயே அந்த குழந்தைபோல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தை வேறு எந்தக் குழந்தையும் இருக்காது.

இப்படிப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி என்ற பெயரில் ஒரு நோய்க் கிருமியை உள்ளே அனுப்பும்பொழுது அந்த குழந்தையின் உடல் தாய்ப்பாலின் மூலமாக வரும் பலகோடிக்கணக்கான அறிவை சேர்த்து வைக்காமல் இந்த தடுப்பூசியில் உள்ள நோய்க்கிருமியை பார்த்து பயந்து இந்த நோய்க் கிருமிகளுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. எனவே, தடுப்பூசி போட்ட அந்த நோய்க்கு மட்டும் பாதுகாப்பாக இருக்குமே தவிர, வேறு எந்த நோய் வரும்பொழுது பயப்பட ஆரம்பிக்கிறது. எனவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவு செய்யுமே தவிர அதிகப்படுத்தாது.

தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி எப்படி உருவாயிற்று? பல நூற்றாண்டுகளாக இந்தத் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப் பட்டது?. எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள்?. தடுப்பூசியைத் தடை செய்வதற்கு அது சம்பந்தமான ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு இயக்கம் தோற்றப்பட்டது எப்பொழுது? இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன? தடுப்பூசி என்பது தேவையில்லாத ஒன்று என்பதை இயற்கை வைத்தியம் என்ற தமிழ்வாணன் ஐயா எழுதிய புத்தகத்தை தயவு செய்து படித்துப்பாருங்கள். அதில் முதல் 200 பக்கங்களில் இந்த தடுப்பூசி பற்றி தெளிவாக கூறியிருப்பார்.

தடுப்பூசி என்பது நோய்க் கிருமியை உடலுக்குள் அனுப்பும் ஒருமுறை. உடல் நோய்க்கிருமியை பார்த்த அடுத்த வினாடி, ஹெல்பர், கில்லர், சப்ர°ஸர், மெம்மரி என்ற நான்கு காரியத்தை செய்யும். ஹெல்பர் என்றால் சளி. முதலில் சளியை உண்டு செய்து அந்த நோய்கிருமியை சளி மூலமாக வெளியேற்றும். சளி என்பது நோய்க்கிருமியை வெளியேற்றும் ஒரு வாகனம். எனவேதான், தண்ணீரை மாற்றிக் குடிக்கும்பொழுது சளிப் பிடிக்கிறது. இது ஏன் என்பதை தண்ணீர் அருந்தும் முறை என்ற தலைப்பில் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க உள்ளோம். ஒரு நோய்க்கிருமியை ஹெல்பர் என்ற சளியால் வெளியே அனுப்ப முடிந்துவிட்டால் அத்துடன் உடல் சமாதானம் அடைகிறது.

ஒரு சில நோய்க்கிருமிகள் சளிக்கு வெளியே செல்லாமல் சளியை இழுத்துக்கொண்டு உடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிடும். அப்பொழுது கில்லர் என்ற ஒரு மருந்தை நமது உடல் தயார் செய்து அந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. இந்த கில்லர் என்ற மருந்து ஒரு புரோட்டீன் ஆகும். இம்மருந்து நோய்கிருமியை அளித்த உடல் அந்த கில்லர் என்ற மருந்தை அழிப்பதற்காக சப்ர°ஸர் என்ற ஒரு மருந்தை உடன் தயார் செய்கிறது. இந்த சப்ர°ஸர் என்ற மருந்து கில்லர் என்ற மருந்தை வீரியமிழக்கச் செய்கிறது. இப்படி சளி, நோய்க்கிருமியை அழிக்கும் மருந்து, மருந்தை சமாதானப்படுத்தும் மருந்து என 3 மருந்துகளை அது அனுப்பி நான்காவதாக நமது உடலில் உள்ள செல்களில் நான் ஒரு நோய்க்கிருமியை பார்த்தேன். அந்த நோய்க்கிருமியின் வீரியம் இவ்வளவு, அதை அழிப்பதற்காக நான் இந்த மருந்துகளை அனுப்பினேன், அதன் மூலமாக அந்த நோய்க்கிருமி இறந்து விட்டது, சக்ஸ°, என்று அந்த பார்முலாவை பதிவு செய்வது மெம்மரி என்ற அறிவு. இப்படி ஒவ்வொரு நோய்க்கிருமியும் உடலுக்குள் போகும்பொழுது இந்த நான்கு முறையில் நான்கு விதமாக நமது உடல் அறிவு வேலை செய்து நோய்க்கிருமியை அழிக்கிறது.