சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.
* காலைச் சிறு நீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு    நல்லெண்ணையை விட்டு விட்டு உற்று கவனியுங்கள்.
* எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால், உடலில் வாதம்    
   மிகுந்துள்ளது என்ற அறிகுறி.
* மோதிரம் போல வட்டமாக இருந்தால், அது பித்த நோயின் அறிகுறி,
* முத்துப் போல நின்றால், கபநோயின் அறிகுறி,
* எண்ணெய்த் துளி வேகமாக பரவினால், நோய் விரைவில் குணமாகும்.
* எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால், நோய் குணமாக தாமதமாகும்.
* எண்ணெய்த்துளி சிதறினாலோ, அமிழ்ந்து விட்டாலோ, நோயை  
   குணப்படுத்த இயலாது.