ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம்

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி

03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)

04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)

05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்

07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)

08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி

13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி

14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.

18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்

20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)

23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)

24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.

வேர்க்கடலையை (GROUND NUT)ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும்

வேர்க்கடலையை (GROUND NUT)ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


 குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான்.

 *உடலை* *உஷ்ணமாக* *வைத்திருக்கும்*:

வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.

 *கொழுப்பின்* *அளவைக்* *கட்டுப்படுத்தும்*

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.

 *சர்க்கரை* *அளவைச்* *சரி* *செய்யும்*:

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.

 *சரும* *ஆரோக்கியத்தைப்* *பாதுகாக்கும்*:

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.

ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம்.

வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும்.

ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள்.

குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.

குளிகை என்பது நல்ல நேரமா?

குளிகை என்பது நல்ல நேரமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


(குளிகை பிறந்த கதை)

ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும்.

குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? -

அதற்கு ஒரு கதையும் உண்டு.

இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான்.

அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும்.

எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழும் என்பதை கணித்து சொல்லுங்கள். இது பேராசையல்ல குருவே, ஒரு தந்தையின் நியாயமான ஆசை“

“இராவணா… உன் எதிர்ப்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாள பிறக்க வேண்டும் என்று எண்ணும் போது, நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன். துயரத்தையும் தோல்விகளையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தாளும் வல்லமை கொண்டவன். பிறக்க போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல்களை கொண்டவனாக திகழவேண்டும் என்று நீ எதிர்பார்ப்பில் தவறோன்றும் இல்லை இராவணா.

நானும் நீ சொல்ல வந்ததை நீ சொல்லாமலே ஞானத்தால் அறிந்தேன். குழந்தை பிறக்க வேண்டிய நேரத்தை கணித்துக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனால்…“ என்று இழுத்தார் சுக்கிராச்சாரியார். “என்ன தயக்கம்.?

"ஆனால்…“ என்கிற வார்த்தையை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தயக்கமின்றி சொல்லுங்கள். என்ன பிரச்சனை?“ என்றான் இராவணன்.

"நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே இராசி கட்டத்தில் வந்தால் நல்லது. எப்படி பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு நேரம் அமையாமல் இருக்கிறது. நானும் கணித்து கணித்து பார்க்கிறேன், யோசித்தே என் தலைவெடித்துவிடும் போல் இருக்கிறது.

சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன? என்று கூட தோன்றுகிறது.“ புன்னகைத்தவாரே சொன்னார் சுக்கிராச்சாரியார்.

வேடிக்கையாக சொன்ன வார்த்தை வினையாகிப் போனது.

"நீங்கள் சொல்வதும் சரிதான். நவகிரகங்களையும் ஒன்றாக சிறையில் தள்ளினால்தான், நான் நினைத்தது நடக்கும்.

சரியான நேரத்தில் ஆலோசனை கூறிய தங்களுக்கு நன்றி. ஆனால் நவகிரகங்களில் நீங்களும் ஒருவராக இருப்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்“. என்றான் 

இராவணன்.

சுக்கிரன் என்று அழைக்கப்படும் சுக்கிராச்சாரியாரையும் சிறையில் தள்ளினான். நவகிரகங்களையும் ஒரே சிறையில்அடைத்தான் இராவணன். இந்த நிலைக்கு காரணமே சுக்கிராச்சாரியார்தான் என்பதால் சுக்கிரனை நவகிரகங்களும் திட்டி தீர்த்தன.

"சிவனையே பாதாள லோகத்தில் வாழ செய்தவன் நான். என்னை இராவணன் இந்த சிறையில் தள்ளிவிட்டான். எல்லாம் உங்களால்தான். உங்களை “அசுரகுரு“ என்று அழைப்பது சரியாகத்தான் இருக்கிறது.

திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே… தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் இராவணன். அவனிடம் போயா நம் பெருமைகளை சொல்வது? அறிவு களஞ்சியமய்யா நீ“ என்றார் சனிஸ்வரர்.

"நான் என்னவோ சொகுஸாக இருப்பதை போலவும், நீங்கள்தான் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசிக்கொண்டுயிருக்கிறீர்கள்.?

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் இராவணன் என்பதை சற்று மறந்து, அவனுக்கே ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன். என்றார் சுக்கிரன்.

மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல்தான் என்று வைத்தியர்கள் சொல்வதாக சிறைக்காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்.

“சுக்கிரசாரியாரே… உங்களுக்கு தெரியாதா? எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால் அதை “யுத்த கிரகம்“ என்பார்கள்.அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனையை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்… மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள்.

அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் இராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்.“ என்றார் சனிஸ்வரர்.


"அசுர தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?” என்றார் குரு பகவான்.


"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கினால், இராவணனின் வாரிசு பிழைக்கும்“ என்று கூறி கொண்டு தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார் சனிஸ்வர பகவான்.

அந்த குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார் சனிஸ்வரர்.

"ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்நது யத்த கிரகமாக இருந்தாலும், குளிகன் பிறந்ததால், இனி இந்த மணிநேரம் பிரச்சனையில்லை.

வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், இந்த குழந்தை பிறந்த இதே நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.இனி பயம் இல்லை மண்டோதரிக்கு.“ என்றார் சனிஸ்வரர்.

"நமக்கும்தான்“ என்றார் சுக்கிரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும்.

கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.

குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்வதால் எந்த தடையும் இல்லாமல் சுபமாக முடியும்

நெய் (GHEE) - வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்

நெய் (GHEE) - வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள்.

ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.

அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.
சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.

நெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட். ஆகவே இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.
நெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.

பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.

நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு தலைமுடி மென்மை மற்றும் பட்டுப் போன்று ஆவதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பாலில் இருந்து பெறப்படும் நெய்யை சாப்பிட அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நெய்யில் லாக்டோஸ் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்

கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.

கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம்.


     பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்  
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.

அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.

அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.

இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?

அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.

கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா?

கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.

இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.

சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.

கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.

அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.

வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம்

வயிறு வலி பிரச்சனை எப்படி தெரிஞ்சுக்கலாம்


     பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்  
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கணையம்,
சிறு நீர்பை, கர்ப்பப்பை, விந்துபை, சினைப்பை
என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கிறது.

வயிறு வலிக்கிறது என்று சொன்னால் எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு கஷ்டம். ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?

இதோ சிம்பிள் டிரிக். வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும், இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.
அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்.

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்.

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு டாக்டரை பாருங்க.

கண்கள் பற்றி உளவியல்(Psychology) அறிந்து கொள்ளலாம்

கண்கள் - உளவியல்

கண்கள் பற்றி உளவியல்(Psychology) அறிந்து கொள்ளலாம்


         பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் எப்படி சம்பாதிக்கலாம்  
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1). *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2). *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3). *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4). *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.

5). *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,
ஆசைப்படுகிறது.

6). *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது.

7). *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8). *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

9). *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10). *கண்கள்* படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.

11). *கண்கள்* மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

12). *கண்கள்* எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13). *கண்கள்* கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

14). *கண்கள்* கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

15). *கண்கள்* இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16). *கண்கள்* இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

17). *கண்கள்* வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

18). *கண்கள்* வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

19). *கண்கள்* உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.

20). *கண்கள்* ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.

21). *கண்கள்* மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

22). *கண்களை* கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

23). *கண்களை* கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.

24). *கண்கள்* மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25). *கண்* புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

26). *கண்* புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.

27). *கண்களும்* புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.

28). ஒரு *கண்* திறந்திருந்தால் சேட்டை.

29). இரண்டு *கண்களும்* மூடி இருந்தால் தூக்கம்.

30). *கண்கள்* திறக்கவில்லையென்றால் மரணம்.

12 Types Of Pain That Are Directly Linked To Emotional States

12 Types Of Pain That Are Directly Linked To Emotional States


              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


 Emotions do Affect Chronic Pain.
Chronic pain, beside physical injury, may be caused by stress and emotional issues.

Let’s take a look at what pain in a particular area of your body indicates:

*Head*
Headaches can be caused by stress life. If someone has chronic headaches she/he needs to grab some time for themselves on daily basis. Relaxing may help you to relieve your body from the head pain.

*Neck*
Neck pain implies the need to forgive. It may be to forgive yourself or to forgive some other person. It is very important to focus on things that you love about yourself or what others love in you.

*Shoulders*
Pain in the shoulders is sign that person carries a heavy emotional burden. Shoulders carry everything. To solve this problem share the load with friends or family.

*Upper Back*
Upper back pain manifests lack of emotional support. Probably the person is holding back feelings or doesn’t feel appreciated. Just talk about your feelings with your partner or close friend.

*Lower Back*
Pain in the lower back shows that person has financial worries. Sit down and focus on managing money.

*Elbows*
Elbow and arm pain signifies a lack of flexibility. Try not to resist the natural changes in your life.

*Hands*
Pain in the hands may be caused by a lack of friends. Try to meet new people.

*Hips*
Fear of change, moving or waiting on a big decision can cause the hip pain. Make the changes step by step.

*Knees*
Pain in the knee is a sign of high self-esteem. Maybe you should try to do some volunteering work and remember no one is perfect.

*Calves*
Calf pain is caused by stress, emotional tension or jealousy. Maybe it is time to let go the jealousy or any big stressor in your life.

*Ankles*
Pain in the ankle means that you need more pleasure in your life. Try to enjoy the little things and every moment in your life.

*Feet*
Foot pain occurs if you fight with depression. Depression is a specific disease, but for a start try to find a new hobby or just adopt a pet.

Friends this concept is scientifically proven so before adopting medicine or concern for the doctor, give some time and observe your thought ...it heals you automatically😊👍🌹

கிராம்பின் மருத்துவ குணங்கள்

கிராம்பின் மருத்துவ குணங்கள்

              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

Bananas Fight Arthritis

Bananas Fight Arthritis


              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


This is a great food to fight arthritis.  Bananas fight arthritis and reduce the symptoms associated with it. It improves the overall health of the person.

  It contains high levels of potassium which necessary for the proper functioning of cells.
  It contains vitamins such as vitamin C, vitamin B6 and folate which help to improve the immune system of the body.
  The fiber present in banana helps in the proper digestion of the food and helps to maintain the general health of the person.


For people with arthritis, consuming a banana a day will not necessarily keep the doctor away, but it just might help minimize some of the severe symptoms of this potentially debilitating disease. Although arthritis typically requires medication to control and slow disease progression, regularly including nutrient-rich foods like bananas in your diet may also play an important role in helping your body fight the effects of this common health condition.

Background
Arthritis is an inflammatory condition that causes chronic swelling and pain in the joints. Three of the most common forms of arthritis include rheumatoid arthritis, osteoarthritis and gout. Rheumatoid arthritis, which develops in people of all ages, results when your body attacks its own tissue, specifically in the joint areas. Osteoarthritis occurs in older individuals, producing pain and limiting range-of-motion as a result of regular wear-and-tear on cartilage. Gout occurs when crystals collect and cause inflammation around the joints in your toes

Relationship
Bananas contain a healthy dose of vitamin B-6, folate and vitamin C, and serve as a prime food for arthritis-ridden people, says Dr. Virginia Byers Kraus, Duke University School of Medicine associate professor and coauthor of “The Everyday Arthritis Solution.” Vitamin C helps arthritis sufferers by aiding the body’s production of collagen -- a building block for joints; it also helps eradicate joint-destroying free radicals. Increase your body’s intake of B vitamins, which include both vitamin B-6 and folate, because arthritis-caused inflammation depletes your body’s supply of these vitamins at a record rate, especially if you have rheumatoid arthritis, says Krauss.

Considerations
Even though bananas help boost your body’s level of arthritis-fighting nutrients, do not rely on them for your body’s sole dietary source of important inflammation-fighting nutrients. Other essential nutrients for arthritis sufferers include omega-3 fatty acids, vitamin E, calcium and vitamin D. Helpful dietary sources of these nutrients include a variety of brightly colored fruits and vegetables, as well as salmon, shrimp, dairy products and nuts. Depending on the medications you take to control your arthritis symptoms, talk to your doctor about taking various supplements to help ensure that your body maintains an adequate supply of these and other important nutrients.

Cautions
Some natural health advocates recommend the use of bananas as a natural treatment for arthritis pain, sometimes even suggesting that arthritis sufferers consume a bananas-only diet for up to three or four days to lessen arthritis inflammation and accompanying symptoms. Never try to go on a banana diet or otherwise halt your consumption of a well-balanced diet without first consulting your primary care physician. Doing so may result in depleting vital nutrients in your body, which could actually worsen your arthritis symptoms and possibly even lead to other health problems.

நோய்கள் உருவாகும் இடங்கள் - நோய்கள் குணமாகும் இடங்கள்

நோய்கள் உருவாகும் இடங்கள் -  நோய்கள் குணமாகும் இடங்கள்



              தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

                                         

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???🙏🙏

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்


பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை. அதற்காகவே  கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப்  பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்?

முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.

உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன; எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்; எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

1. முட்டை:

முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது.

2. பீன்ஸ்:

பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல வகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

3. பசலைக் கீரை:

பசலைக் கீரையில் அதிகளவு  இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது. இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

4. ஓட்ஸ்:

ஓட்ஸில் வைட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரத் தேவையான சத்துக்கள்.

5. சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை. இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன. இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

6. சூரிய காந்தி விதைகள்:

சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுள்ளது; இதை மற்ற பருப்புகள்போலவே மென்று தின்னலாம். சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

7. கேரட்:

வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும்ம் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.  தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

8.நட்ஸ் & டிரைஃப்ரூட்ஸ்

இவற்றில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும்.  ீ பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை. 

Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses - Join whatsapp 9094047040

Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses - Join whatsapp 9094047040

Rupeedesk offers unique stock market training
Share Market courses in Chennai for people who are interested to trade independently and successfully.
              
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Stock Market Training | Share Market Training | Classes | Institute | Chennai | Courses
Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753
How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்  

* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி?

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!



* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

Stock Market Training - Chennai

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Free Nifty Option Tips

Free Nifty Option Tips|Option Tips|Nifty Option Tips,Nifty Call Option,Nifty Put Option,Free Nifty Option tips ,Nifty Options Tips,Nifty Call Option and Nifty Put Option with 90% accuracy Free Stock and Nifty Tips, Live Option Market Quotes,Online Option Trading Tips,Stock,rupeedesk Option Tips, Prices,Nifty Option Quotes.(Contact: 9094047040/9841986753/ 044-24333577.