பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!

பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 
7 வழிகள்!



1 ஒரு பங்கின் விலை தற்காலிகமாக ஏறுவதைப் பார்க்காமல் அந்த நிறுவனத்தின் தற்போதைய பலத்தையும், எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

2 ஒரு பங்கை வாங்கும் போது, அந்த நிறுவனத் தையே வாங்குவதாக நினைத்துச் செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். குறைந்தது 10 வருடங்கள் ஒரு பங்கை வைத்திருக்க வேண்டும். 10 வருடங்கள் வைத்திருக்க முடியாது என்றால், பத்து நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது.

3 முதலீடு செய்யும்முன் பலதரப்பட்ட பங்குகளை அலசி ஆராய வேண்டும். ஒரு தனிநபர் அவ்வாறு செய்வது கடினம். எனவே, தகுந்த முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து முதலீட்டு முடிவுகளை மேற் கொள்ள வேண்டும். முதலீட்டு ஆலோசகரை தேர்வுச் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

4 முதலீடுகளையும் அதன் வருமானத்தையும், குறித்த கால இடைவெளியில் அலசி ஆராய வேண்டும். முதலீடு களை நிர்வாகம் செய்யும் திறமை அவசியம் வேண்டும்.

5 சில பங்குகள் அதிக முதலீட்டாளர்களைக் கவரும்படியாக இருக்கும். அது மாதிரியான பங்குகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, அது மாதிரியான பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

6 ஒரு குறிப்பிட்ட பங்கிலிருந்து எவ்வளவு காலத்தில், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னரே முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் வரிக்குப் பிந்தைய வருமானம் 10 சதவிகிதமாவது இருக்க வேண்டும்.

7 ஒரு பங்கு 50% விலை இறங்கினால், மீண்டும் விலை உயரும் என்று சில முதலீட்டாளர் கள் காத்திருப்பார்கள். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லாபத்தில் உள்ள பங்குகளை விற்பார்கள். ஆனால், எந்தப் பங்கு நஷ்டத்தில் உள்ளதோ, அந்தப் பங்கை முதலில் விற்பதே புத்திசாலித்தனம்!

ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!

ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பதில் பெரியவர்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளும் கவனமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள். 'பட்டுப் பாவாடை போட்டு என் பொண்ணுக்கு அழகு பார்க்கணும்' என்று அப்பா சொல்ல, 'இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரிதான் நான் என் பொண்ணை வளர்ப்பேன். அவள் ஷார்ட்ஸ் போட்டுக்கட்டும்' என்று அம்மா சொல்ல, ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப உடை உடுத்துவார்கள், குட்டீஸ். அதன்பிறகு, ஆடைத் தேர்வில் அதகளப்படுத்துவார்கள். 'இந்த பேன்டுக்கு இந்த டாப் வேண்டவே வேண்டாம்', 'இந்த கலர் எனக்குப் பிடிக்கல' என்று அடம்பிடிப்பார்கள். ஆடைத் தேர்வில் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

* இப்போதெல்லாம் ஐந்து, ஆறு வயதைத் தாண்டியவுடன், குழந்தைகள் தங்களுக்கான ஆடையை அவர்களே தேர்வு செய்துகொள்கிறார்கள். இதனை வித்தியாசமாக  பார்க்காதீர்கள். அதேசமயம், 'பாரேன்! என் பொண்ணு, அவளுக்கு என்ன வேணும்னு எவ்ளோ தெளிவா இருக்கா’ என்று அவள் முன் பெருமையாகவும் மற்றவர்களிடம்  கூறாதீர்கள். அப்படிச் செய்தால், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்று அவள் நினைக்கத் துவங்கிவிடுவாள். இந்த மனோபாவம், அவள்  வளர்ந்த பிறகும் தொடர்ந்தால் அவளுக்குதான் சிக்கல்.  உங்கள் மகள் துணிக் கடைக்குச் செல்லும்போது, ‘நான்தான் எனக்கு டிரெஸ்  செலக்ட் பண்ணுவேன்’, ‘எனக்கு ரெட் கலர் டிரெஸ்தான் வேணும்’ என்று கூறினால், அனுமதியுங்கள். அதனை இயல்பாகக் கையாளுங்கள்.

* என்னதான் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சினிமா வாசத்திலிருந்து தள்ளி வைத்தாலும், அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் பெரும் பங்காற்றுகிறது  வெள்ளித்திரை. 'அந்தப்  பாட்டுல சமந்தா அக்கா போட்ட மினி ஸ்கர்ட் மாதிரி டிரெஸ் வேணும்மா’, ‘இந்த  கெட்ட-அப்ல நயன்தாரா செம்மயா இருக்காங்கம்மா; அதே  மாதிரிதான் எனக்கும் டிரெஸ் வேணும்' என்று குட்டீஸ் குதிப்பார்கள். அதுபோன்ற சுழல்களில், 'மினி ஸ்கர்ட் வேண்டாம்... ஆனா இதே டாட்டட் பேட்டர்ன்ல மிட் லெங்த் ஸ்கர்ட் வாங்குவோம்' என்று அதை ஒத்த நாகரிகமான ஆடைகளை வாங்கித் தரலாம்.

*பதின் பருவம் என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அல்ல... மிகவும் அடர்த்தியான கோடு! மனதில்  தோன்றும் அனைத்தையும் செய்து பார்க்க வேண்டும் எனத் துடிக்கும் வயது. குறிப்பாக, இந்த வயதிலுள்ள இளம்பெண்கள், தங்களை அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். 'மற்றவர்கள் வியக்கும்படி ஆடை அணிய வேண்டும்' என்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கும். அதனால்தான், எத்தனை ஆடைகள் இருந்தாலும், ‘எனக்குப் போடறதுக்கு டிரெஸ்ஸே இல்லம்மா’ என்று புலம்புவார்கள். இந்தச் சமயத்தில்தான், உங்களின் உதவி அவர்களுக்குத் தேவை. ஆடைகளின் டிரெண்ட் பற்றி நீங்கள் அப்டேட்டாகி, அவர்களுக்கு உதவுங்கள்.

* எந்த இடத்துக்கு எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து செல்வது என உங்கள் மகளுக்கு கற்றுக்கொடுங்கள். தோழியின் வீடு, பேர்த்டே பார்ட்டி என்று செல்லும் இடங்களுக்கு ஏற்ப நவீனமாக ஆடை அணிய வேண்டிய விருப்பமும் அவசியமும் அவர்களுக்கு இருக்கும். அதே சமயம், நம்முடைய கலாசாரத்துக்குத் தகுந்தபடி அவர்களை உடுத்தவும் பழக்குங்கள். உதாரணமாக, ஜீன்ஸ், டி-ஷர்ட் ட்யூஷனுக்கு ஓ.கே. அதே சமயம், கோயில், திருமணம் என்று செல்லும்போது சுடிதார், பட்டுப் பாவாடை என்று அணியப் பழக்கலாம். ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி. மறுத்தால் கால அவகாசம் கொடுத்து அமைதியான வழியில் புரிய வையுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் மகள் எந்த வயதில் இருந்தாலும், அவளுக்குப் பிடித்தமானதாக, வசதியாக உணரும் ஆடைகளை அணியும் சுதந்திரத்தை அவளுக்குக் கொடுங்கள்.  ஒருவேளை, செல்லும் இடங்களில் தன் ஆடைகளால் அவள் சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தால், அதற்குத் தீர்வு காண அவளுக்கு உதவுங்கள்.

நமக்குதான் ஆடை ஓர்  அடையாளம். ஆடைக்கு நாம் அடையாளம் அல்ல! 

குழந்தை வளர்ப்பின் 10 அவசிய வழிகாட்டுதல்கள்

குழந்தை வளர்ப்பின் 10 அவசிய வழிகாட்டுதல்கள்


இன்றைய குழந்தைகளுக்கு 'அட்வைஸ்' என்பதே ஆகாத விஷயமாக இருக்கிறது. முந்தைய தலைமுறையினர், அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிக்கோள் அமைத்து வாழ்க்கை நடத்தியவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டம் அமைகிறது. பிரச்னைகள் வந்தால், 'பார்த்துக்கொள்கிறேன்' என தைரியமாகச் சொல்ல முடிகிறது. புதிதாக வந்து இறங்கும் டெக்னாலஜி எல்லாம் ஓரிரு நாட்களில் அப்டேட் இல்லாததாகிவிடுகிறது. அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்றே சொல்ல முடிவதில்லை.

எதிலும் பர்ஃபெக்ட் பார்க்கவே கூடாது. எனக்கு பிடித்ததைச் செய்வேன். என்னால் முடிந்ததைச் செய்வேன் என்ற ஐடியாலஜியில் கண்கட்டவைக்கின்றனர். அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும்போதே காதைப் பொத்திக்கொண்டு ஓட்டம் எடுக்கின்றனர். 'எதிர்காலம் பற்றிய எந்த இலக்குமே இல்லாமல் இருக்கானே' என்ற பதைபதைப்பு பெற்றோர் மனதில் உருவாகக் காரணமாக இருக்கும் குழந்தைகளை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதைச் சொல்கிறார், சேலம் சரவணக்குமார்.

சேலம் சரவணக்குமார்* குழந்தைகளிடம் வார்த்தையால் பேசக் கூடாது. செயலால் பேச வேண்டும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் எழ வேண்டும் எனில், அதற்கு முன் பெற்றோர் எழுவதை வழக்கப்படுத்தவும்.

* எந்த ஒரு இடத்துக்குச் செல்லும்போதும் பெற்றோர் குறித்த நேரத்துக்குச் செல்வது நேரமேலாண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்.

* தன் பொருளாதார நிலை, குடும்ப நிலை என்ன, பெற்றோர் தங்களது கனவு என்ன, இன்னும் ஐந்து ஆண்டில் நான் என்னவாகப்போகிறேன். அதற்காக நான் இப்போது எப்படி உழைக்கிறேன் என்பதை அட்வைசாக இல்லாமல், தங்களது அனுபவத்தின் வழியே குழந்தைகளுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தனது கனவு என்ன என்று குழந்தைகளுக்குள் ஒரு தேடல் துவங்கும்.

* குழந்தைகளுக்கான குறிக்கோள், நோக்கம் என்பதை விளையாட்டின்மூலம் புரியவைக்கலாம். விளையாட்டில் அவர்கள் இலக்கை எட்டி வெற்றியின் ருசியைப் புரிந்துகொள்கின்றனர். 'ஐந்து ஆண்டுகளுக்கு பின் நீ எப்படி இருப்பாய்' என்ற கோல் சார்ட் தயார்செய்யச் சொல்லுங்கள். அதில் குழந்தைகளின் கனவுகள் படங்களாகவும், வண்ணங்களாகவும் இடம்பெறும். அதை, அவர்கள் பார்வையில் படும்படி மாட்டிவைக்கலாம். தினமும் அதைப் பார்க்கும்போது அந்தக் கனவுக்காகவும் உழைக்கத் துவங்குவார்கள்.

* குழந்தைகளிடம் அடுத்த ஐந்து ஆண்டில் இந்தச் சமூகம் உன்னை எப்படிப் பார்க்க வேண்டும்., இன்னும் 10 ஆண்டுகளில் இந்த சமூகத்திடம் உன்னை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை எழுதிக் காட்டச் சொல்லவும். இதற்காகவே வீட்டில் ஒரு போர்டு, சாக்பீஸ் வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் மனதைப் புரிந்துகொள்ள, கனவுகள் சிறகடிக்க வாய்ப்பு உருவாகும்.

* வீட்டில், குழந்தைகள் முன் செய்தித்தாள் படிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம் பெற்றோருக்கு வேண்டும். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாதல் ஆகியவற்றை அவர்களுக்குப் புரிந்த மொழியில் விவாதிக்க வேண்டும். அதுபற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தச் சமயத்தில் என்ன செய்திருக்கலாம் என்பதையும் கருத்துக் கேட்பதுபோல விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.

* மாதம் ஒரு முறை குழந்தைகளிடம் உள்ள தேவையற்ற பொருள்களைப் பட்டியலிடச் சொல்லுங்கள். அவற்றைப் பயன்படும் குழந்தைகளுக்குத் தர  குழந்தை-அம்மாஊக்கப்படுத்தலாம். ஆதரவற்ற இல்லங்களுக்கு அழைத்துச்செல்வதன் வழியாக குழந்தைகள் நிலை குறித்து உணர்த்தலாம். ஆசைக்காகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் மாறி, உதவும் எண்ணம் உருவாகும்.

* உணவை வீணாக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக உணவு உற்பத்திசெய்யப்படும் விவசாய நிலத்தைப் பார்வையிடச் செய்யலாம். உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம், தண்ணீருக்கு மக்கள் படும் அவலத்தையும் உணர்த்துங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள்.

* ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைக் குழந்தைகள் விரும்பிக் கேட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள், அது தயாரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்கள் நாளடைவில் ஏற்படுத்த இருக்கும் விளைவுகளையும் விளக்கலாம்.

* இன்றைய குழந்தைகளிடம், பொதுவாக எதையும் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதும். அட்வைஸ் செய்வதும் அபத்தமானது. எதையும் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பளிக்கலாம். விளக்கமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். அந்தந்த விஷயங்கள் பற்றி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த எளிமையான 10 வழிகள்!



''பள்ளிப் பாடப்புத்தகங்களை படிப்பதையே சிரமமாக நினைக்கும் குழந்தைகளுக்கு, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது சவாலான விஷயம்தான். ஆனால், பெற்றோர் கொஞ்சம் மனதுவைத்தால், அந்த ஆர்வத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த முடியும்'' என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர், ப்ரீத்தா நிலா. அதற்கான 10 வழிகளையும் கூறுகிறார்.

* சிறு வயது முதலே குழந்தைகளுக்குப் பிடித்த விலங்குகள், பழங்கள், பொதுஅறிவு தகவல்கள் உள்ளிட்டவற்றை எளிமையான படக்கதைகளாக சொல்லிக்கொடுப்பது, அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். ஆரம்பக் கட்டத்திலேயே கருத்துள்ள விஷயங்களைப் படிக்கச் சொன்னால், குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதனால், அவர்களுக்குப் பிடித்தமான ஸ்பைடர்மேன், கார்ட்டூன் படங்கள், பிக்சர் கார்டுகள் வாயிலாக வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பியுங்கள். பின்னர், அவர்களாகவே ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தினமும் இரவு நேரங்களில் நேரம் ஒதுக்கி, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்தக் கதைகள், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு, விலங்குகள் பற்றியதாகவும் குழந்தைகளை மையப்படுத்திய நீதிக் கதைகளாகவும் சொன்னால், அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக பாவனைகளுடன், கை கால் நடன அசைவுகளுடன் கதைகளைச் சொல்லும்போது, குழந்தைகள் தினமும் ஆர்வமுடன் கதைகளைக் கேட்பார்கள்.

* நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து பிடித்த விஷயங்களைப் படித்து, படித்ததை மற்றவர்கள் முன்னிலையில் ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால், ஆர்வமாகப் படிப்பார்கள். இதனால், ஒருவர் கற்றுக்கொண்ட விஷயம், எளிதாக மற்றவர்களுக்கும் தெரியவரும். இத்தகைய கூட்டுமனப்பான்மை, அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக ஆகும்போது, குரூப் ஸ்டெடி போன்ற விஷயங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். தயக்கம், தடுமாற்றம் போன்ற குணங்களையும் விரட்டி அடிக்கும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாட்டு, அறிவியல், பொதுஅறிவு, சுற்றுலா என ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகைய துறை சார்ந்த, அத்துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் பற்றிய புத்தகங்கள், அவர்களின் வரலாறு சொல்லும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

* அழகாகக் காட்சிப்படுத்துவதும், அலங்கரிப்பதும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். வீட்டிலேயே அழகான வடிவில் ஒரு ரேக் அமைத்து அதில் குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தினால், புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே வரும். மேலும், குழந்தைகள் ஒரு புத்தகத்தைப் படித்த பின்னர், அவர்கள் படித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும்போது உற்சாகமாவார்கள்.

* தினமும் வாசிப்பு நேரம் எனக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்து, மற்றவர்களிடம் பகிரலாம். குழந்தைகள் படித்ததில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். அப்படிச் செய்யும்போது அப்பா, அம்மாவே படிக்கிறார்கள். நம்முடன் சந்தோஷமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என ஆர்வமுடன் குழந்தைகளும் படிப்பார்கள்.

* தினமும் காலை நேரங்களில் செய்தித்தாளை படித்து முடித்ததும், முக்கியமான செய்திகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். பல விஷயங்களையும் அவர்களிடம் விவாதிக்கலாம். தொடர்ந்து குழந்தைகளை செய்தித்தாளைப் படித்து தங்களிடம் விவாதிக்குமாறு சொல்லலாம்.

* செய்தித்தாள்களில் பார்த்த, பயனுள்ள, பிடித்த படங்களுடன் கூடிய விஷயங்களைக் கத்தரித்து, தனி நோட்டில் ஒட்டிவைத்து, அவ்வப்போது பார்க்கச் சொன்னால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியே நல்ல விஷயங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள்.

* ஓய்வு நேரங்களில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு, சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் பார்த்த, ரசித்த, பிடித்த பயண விஷயங்களைக் கதையாகவோ, கவிதையாகவோ எழுதச் சொன்னால், ஆர்வமாக எழுதுவார்கள். அந்த எழுத்து, பயண அனுபவங்களைப் பெற்றோர் படித்து, ஊக்குவித்து அதுசார்ந்த புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லலாம்.

* ஓய்வு நேரங்களில் அல்லது மாதம் ஒருமுறையாவது நூலகம் அழைத்துச்சென்று பெற்றோரும் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். குழந்தைகளையும் நூலக உறுப்பினராக்கி, அவர்களுக்குப் பிடித்த நூல்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கப் பழக்கப்படுத்தலாம்.

''மேற்கண்ட 10 வழிமுறைகளையும் குழந்தைகள் கடைப்பிடிக்க, பெற்றோர் நேரம் ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும். தற்போது, பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகளும் கேட்ஜெட்டில் அதிகம் நேரம் செலவழிக்கிறார்கள். அது, குழந்தைகளின் கண்பார்வைத் திறனை பாதிக்கும். எனவே, பெற்றோர்கள் சுயகட்டுபாட்டுடன் இருந்து, குழந்தைகள் கண் எதிரில் புத்தகம் படித்தால்தான் அவர்களும் புத்தகத்தின் பக்கம் திரும்புவார்கள்

பரிசு - குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?

பரிசு... குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?



''பரிசு... பொருளாக, வார்த்தையாக, சிறிது நேரம் உடன் செலவிடுவதாக என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய பரிசுகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும். குழந்தைகளையோ மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசெல்லும்'' என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. பெற்றோர் கொடுக்கும் பரிசு, குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் விளக்குகிறார்.

''பரிசு என்றாலே, குழந்தைகள் முகம் புன்னகையில் மலரும். சந்தோஷத்தில் அவர்கள் உள்ளம் தவழும். பரிசுகள் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும். கடையில் வாங்கிக்கொடுப்பதைத் தாண்டி, அதிக பொருட்செலவு இல்லாமல், பெற்றோர்கள் தங்கள் கைகளால் செய்துக்கொடுக்கும் பரிசுகளைக் குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். அது, காகிதத்தில் வரைந்த ஓவியம், களிமண்ணால் செய்த சிறு பொம்மை, அட்டைப்பெட்டியில் செய்த வீடு என எதுவாகவும் இருக்கலாம். சிறு உண்டியல் கொடுத்து சேமிக்கக் கற்றுக்கொடுப்பது, வண்ணப் பென்சில்கள், அழிப்பான் வாங்கிக் கொடுப்பது, குழந்தைக்குப் பிடித்த துறை சார்ந்த முன்னேற்றத்துக்கு உதவும் பொருளாக என இருக்கலாம். இவற்றை கொடுக்க அதிக பொருட்செலவோ, நேரமோ தேவையில்லை.

பெற்றோர் கொடுக்கும் பரிசுப் பொருட்களின் விலையை மதிப்பீடு செய்யும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்காது. அன்பையும் பாசத்தையும் மட்டுமே பார்ப்பார்கள். அதனால், என்ன பரிசு, எவ்வளவு விலையுள்ள பரிசு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால், அந்தப் பரிசு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிய பங்கை ஆற்றும் வகையில் இருக்க வேண்டும். அன்பான ஒரு கைகுலுக்கல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், சிறிது நேரம் குழந்தைகளோடு செலவிடுவது ஆகியவையும் உயர்ந்த பரிசுகளே. இதனால், சிறு தாவரங்கள், செடிகள், பறவைகள் போன்ற உயிர்ப்புள்ள செயல்பாடுகள் மீது குழந்தைகள் அளவற்ற அன்பைச் செலுத்துவார்கள்.

தன் வளர்ப்பால் செடியில் ஒரு பூ மலர்வது, குருவி முட்டையிட்டு குஞ்சுப் பொறிப்பதைப் பார்ப்பதும் அர்த்தமுள்ள செயல்பாடுகளைச் செய்ய குழந்தைகளைத் தூண்டும். தன் பொழுதுபோக்கும்கூட பயனுள்ள விதத்தில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும். குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் பிடிக்கும் என்றால், அவர்களை நல்வழிப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். வாசிப்பு பழக்கமே இல்லாத குழந்தைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம். சகோதர, சகோதரிகள் அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆளுக்கு ஒரு புத்தகம் படித்து, தான் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பழக்கப்படுத்தலாம். இவையெல்லாம் கூட்டுமனப்பான்மையை வளர்க்கும். ஒருவர் கற்ற அறிவு, மற்றவர்களிடம் பரவ வழிசெய்யும்.

பரிசுப் பொருள்கள் குழந்தைகளை வளர்ச்சிப்படுத்தும். அதேசமயம் அந்தப் பரிசு வெற்றிக்கு மட்டுமே கொடுப்பது, குழந்தைகளால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செய்யவும் வழிவகுக்கலாம். அதனால், வெற்றிக்கு ஆடம்பர பரிசும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கு ஊக்கமில்லா அமைதியான நிசப்தமும் வேண்டாம். காரணம் பார்த்து குழந்தைகளுக்குப் பரிசுக் கொடுப்பதைத் தவிர்த்து, அடிக்கடி பரிசுக் கொடுக்கலாம். அந்தப் பரிசு குழந்தைகளின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே சமநிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற பரிசுதான் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது; மகிழ்ச்சியையும் குறைக்காது. இதனால், குழந்தைப் பருவத்தை அவர்களால் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் கழிக்க முடியும்'' என்கிறார் பிரீத்தா நிலா.

மற்ற குழந்தைகளுடன் தன்னையும், தனக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களையும் ஒப்பீடு செய்து பார்க்காத வகையில் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டியது பெற்றோர் கடமை. பரிசு வாங்கி மகிழ்ச்சி அடைவது போலவே, 'வெற்றிபெற்ற, சோர்வடைந்த நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரிசுக் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தினால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். 

அடிப்பது தீர்வல்ல - குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

அடிப்பது தீர்வல்ல... அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?



அன்பாக சிரித்து மகிழும் குழந்தைகள்

''குறும்புகளும், தவறுகளும் செய்றது குழந்தைகளின் இயல்பு. அதுக்காக பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதும், கடுமையான வார்த்தைகளால திட்டுறதும் தீர்வாகாது.  மாறாக, குழந்தைகளோட சின்ன மனதுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லி அவங்களை நல்வழிப்படுத்தணும்" என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. அதை செயல்படுத்த அவர் தந்த ஆலோசனைகள் இங்கே.

''குழந்தைங்க தப்பு செய்யும்போது பெற்றோர்கள் அடிச்சா, தான் செஞ்ச தவறை அவங்க உணர மாட்டாங்க. தன் அப்பா, அம்மா தன்னை அடிச்சுட்டாங்க என்பதுதான் அவங்க மனசுல நிக்கும். அதனால, அவங்க செஞ்ச தப்பு என்ன, அதோட பிரீத்தா நிலாவிளைவுகள் என்னனு அவங்களுக்குப் புரியவைக்காம அவங்களை அடிக்கிறது, அவங்க நடவடிக்கையில் எந்த பலனையும் தராது.

இன்றைக்கு பெற்றோர் இருவருமே வேலைக்குப் போறாங்க. வேலை சூழல்ல நிறைய டென்ஷன். அது வீடு வரைக்கும் தொடரும். அந்த நேரத்துல குழந்தைங்க இயல்பா செய்ற சின்ன தப்பும், கோபத்தில் இருக்கும் பெற்றோருக்கு குற்றமா தெரியும். குழந்தைங்க மேல கோபத்தைக் கக்குவாங்க. இதனால சில பெற்றோரைப் பார்த்தாலே குழந்தைங்களுக்கு பயம் வரும். இந்தப் புள்ளியில் இருந்துதான் அவங்க பெற்றோரை விட்டு விலகியே இருக்க ஆரம்பிப்பாங்க.

குழந்தைங்கள நல்வழிப்படுத்தணும். அதேசமயம் குழந்தைங்களை முடிஞ்ச வரைக்கும் அடிக்கவும், திட்டவும் கூடாது. எப்படி? குழந்தைங்க ஏதாச்சும் தப்பு செய்றப்போ, அதை அவங்களுக்குப் புரியவெச்சு, சின்னதா ஏதாச்சும் தண்டனை கொடுக்கலாம். உதாரணமா, வீட்டுல சாக்பீஸ்ல ஒரு வட்டம் போட்டு, அதுக்குள்ள அவங்களை குறிப்பிட்ட நிமிஷம் வரை நிக்க வைக்கலாம். அப்போ அவங்ககிட்ட யாரும் பேசாத தனிமையை அவங்களுக்குக் கொடுக்கலாம். பொதுவா எந்த ஒரு குழந்தையும் தனிமையில இருக்கவும், ஒரே இடத்தில நகராம இருக்கவும் விரும்பாது. ஒருவேளை தான் தண்டனை வாங்கின தப்பை மறுபடியும் செய்யுற சூழல் வந்தா, 'அய்யோ அன்னைக்கு இதுக்குதானே பனிஷ்மென்ட் வாங்கினோம்'னு ஞாபகம் வந்து, அதைச் செய்ய மாட்டாங்க.

குழந்தை சேட்டை செஞ்சாலும், நாலு பேர் மத்தியில அதைச் சுட்டிக்காட்டி திட்டுறதைத் தவிர்க்கணும். தனியா கூப்பிட்டு கண்டிப்பதும், தவறை விளக்குறதும் நல்ல பலன் கொடுக்கும். பொதுவா இப்போதெல்லாம் பெற்றோர்கள், குழந்தைங்ககூட அதிக நேரம் செலவிடுவது இல்லை. அதுதான் இன்றைக்கு குழந்தைங்க செய்ற பெரும்பாலான தவறுக்குக் காரணம். குழந்தைங்களுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியாது. அவங்க வயசுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுத்துதான் புரியவைக்கணும்.

தினமும் தூங்க வைக்கிறப்போ குழந்தைங்க அன்னைக்கு என்னவெல்லாம் நல்லது செஞ்சாங்க, கெட்டது செஞ்சாங்கன்னு கதைகள் மூலமா, குழந்தைங்களை அதில் மறைமுக கதாபாத்திரங்களாக்கிச் சொல்லலாம். குழந்தைங்களுக்கு கதை ரொம்பப் பிடிக்கும். அது மூலமா நல்லது, கெட்டது சொல்றப்போ நிச்சயமா புரிஞ்சுக்குவாங்க.

ஒரு குழந்தை ஏதோ ஒரு தப்பை தொடர்ச்சியா செய்தா, அதோட விளைவை அது இன்னும் உணரலைன்னு அர்த்தம். அதனால அந்த தப்போட தீவிரத்தை அதுக்குப் புரியும்படியா எடுத்துச்சொல்லி, 'இப்போ நீ குட் பாயா இருக்க. இந்த தப்பும் செய்யாம இருந்தா உன்னை எல்லோரும் வெரி குட் பாய்ன்னு சொல்லி பாராட்டுவாங்க'ன்னு சொல்லி குழந்தையை மெல்ல மெல்ல நேர்வழிப்படுத்தலாம்.

'இன்னைக்கு ஒரு சேட்டை கூட செய்யல... பெஸ்ட் கிட்'னு சொல்லி, தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் குழந்தையின் கையில் ஸ்கெட்ச் கொண்டு ஸ்டார் போடலாம். சமர்த்தாக இருந்த நாளில், 'இன்னைக்கு உனக்கு அஞ்சு ஸ்டார்ஸ்' என்றும், 'இன்னைக்கு நீ ரெண்டு தப்பு செஞ்சேயில்ல... அதனால மூணு ஸ்டார்ஸ். நாளைக்கு சமர்த்தா இருந்து அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கணும் சரியா' என்றும் ஆர்வத்தைத் தூண்டலாம். தன் கையில இருக்கும் ஸ்டாரை நண்பர்கள், உறவினர்களிடம் குழந்தை காட்டி பெருமைப்படும். தொடர்ந்து, 'நீ வாரம் முழுக்க, மாசம் முழுக்க அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கினா, உன்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன்'னு சொல்லி, அதன்படி நடந்துகொள்ளலாம். இதெல்லாம் அன்பின் பாதையில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிகள்.

மாறாக, குழந்தை செய்யும் தவறை கண்டிச்சு, கண்டபடி அடிச்சு, திட்டும்போது குழந்தை மனசில் இறுக்கம்தான் அதிகமாகும். மேலும், பெற்றோரின் அந்த கோபத்தையும் அது கத்துக்கும். அதனால பள்ளியில் சக நண்பர்களுடன் ஏதாவது சண்டை வந்தா, தனக்குப் பிடிக்காத ஒன்றை நண்பர் செய்தா, தன் பெற்றோரின் நடவடிக்கை போலவே தானும் நண்பரை அடித்தோ, கடுமையான வார்த்தைகளால பேசவோதான் அந்தக் குழந்தை முயலும்.

அதனால, குழந்தைகளின் வழியிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்துவதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறை!'' 

நுரையீரல் புற்றுநோய்... எளிதாக அறியலாம் அறிகுறிகள்!

நுரையீரல் புற்றுநோய்... எளிதாக அறியலாம் அறிகுறிகள்!



இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், இது எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான். கவனம்... நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்று மாசும் ஒரு காரணம்.

இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், இது எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான். கவனம்... நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்று மாசும் ஒரு காரணம்.

புற்றுநோய்

இதைத் தவிர புகைப்பிடிப்பவர்களுக்கும் அப்புகையை அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்படித் தொடர்ந்து 10 ஆண்டுகள் புகைபிடித்தால், அவரது உடல்நிலை, 20 ஆண்டுகளாக புகைபிடிப்பவரின் உடல்நிலைக்குச் சமமாகிவிடும். இதுபோன்ற நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.

இதில், நாம் ஆறுதல் அடையக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்!

புற்றுநோயின் அறிகுறிகள்...

* தொடர்ச்சியாக தொண்டைவலியோ, உணவை விழுங்கும்போது தீவிரவலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக (Dysphagia) இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது. இது, மிகவும் அபாயமான அறிகுறியும்கூட. புற்றுநோய் தொண்டையிலிருந்து உணவுக்குழாய் வரை பரவும்போது, இதுபோன்ற வலிகள் ஏற்படும்.

* தொடர்ச்சியாக உடல்வலி இருப்பின் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியே. புற்றுநோய் செல்கள் எலும்புகளில் பரவி, அவற்றை வலுவிழக்கச் செய்வதால் வலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

* சிலருக்கு மார்பகத்தில் நீண்ட நேரத்துக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு நுரையீரலைச் சுற்றி கூர்மையான வலி அவ்வப்போது ஏற்படும். இதனுடன் சேர்ந்து முதுகு, தோள்பட்டையிலும் வலி உண்டாகும்.

* திடீரென அசாதாரணமான, அதிகளவு எடை இழப்பு ஏற்படும். பொதுவாகவே உடல் எடை அதிக அளவில் குறைவதென்பது, `உடல் ஆரோக்கியமாக இல்லை’ என்பதைக் குறிக்கும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுவே முக்கிய அறிகுறி. ஏனெனில், புற்றுநோய் உண்டாக்கும் செல்கள், உங்கள் உடம்பில் உள்ள ஆற்றலைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் தேவையின்றி சத்துக்களை வெளியே தள்ளுகின்றன.

* நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் விசில் அடிப்பதுபோன்ற சத்தத்தை உணர்கிறீர்களா? இதற்கு சுவாசப் பாதையிலுள்ள வீக்கம் அல்லது அடைப்பு காரணமாக வரும் மூச்சுத்திணறலே காரணம். பொதுவாக மாசு, அலர்ஜி, தூசியின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஓர் அறிகுறியே.

* உங்களின் குரல் கரகரப்பாக மாறி இருக்கிறதா? அப்படி என்றால் உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதைச் செய்த பிறகும் உங்கள் குரல் அப்படியே இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள். ஒருவேளை, குரல் வளையில் உள்ள நரம்புகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உங்கள் குரல் வளையை இது குலைத்துவிடும்; குரல் வளத்தையும் பாதித்துவிடும்.

சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மைத் விலக்கி வைத்திருக்கும். இதன் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்

குழந்தைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்



















குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!



'மலச்சிக்கல்' என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளிக்குச் செல்லும் போதும், வெளியிடங்களுக்குச்  செல்லும் போதும் காலையிலேயே மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளால், அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தாத பெற்றோர்களால் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஹரிணி அளிக்கும் டிப்ஸ்....

* காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரைப் பருகக் கொடுக்கலாம்.

* இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 10 உலர் திராட்சையை ஊற வைத்து காலையில் ஊறிய உலர் திராட்சையைப் பிழிந்து, அத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கச் செய்யலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் 10 உலர் திராட்சையை உண்ணச் செய்து ஒரு டம்ளர் வெது, வெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம்.

* மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யா, பனங்கிழங்கு போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம். இது மலச்சிக்கலை அறவே தீர்க்கும்.

* மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக பாதாம்பருப்பு, பேரீச்சை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா போன்றவற்றை ஊற வைத்தோ அல்லது அப்படியோ சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.

* துவரம்பருப்பு வேக வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு சாதத்தில் பருப்பை நெய் விட்டு பருப்பு சாதமாக கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கலாம்.

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* சூடான, காரமான, புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* பரோட்டா, பீட்சா, பர்க்கர் போன்று மைதாவில் செய்யப்படும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தாலே உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு பை பை சொல்லிவிடலாம்.

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?



நமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...

* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும்.

* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.  பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும்.

* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம்  மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும்.  இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும்.

* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது.

* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள்.

* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும்.

* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும்.

* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம்.

* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.

இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே! 

அமாவாசை வழிபாடு !!!

அமாவாசை வழிபாடு !!!



வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.

இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள்......
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

புண்ணிய நதியில் நீராடல்......
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

முன்னோரின் ஆசி.......!!!
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந் நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.

சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் அமாவாசை முக்கியமானது.

தெரிந்து கொள்வோம் வாங்க!

தெரிந்து கொள்வோம் வாங்க!



1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு சவுதி அரேபியா, பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?...

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார்.

***

*இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.

***

*பேப்பர் கிளிப்பை மூன்று பேர் கண்டு பிடித்தனர். 1899-ம் ஆண்டு வில்லியம் மிடில்புரூக்கும் 1900-ம் ஆண்டு பிராஸ்னனும் 1901-ம் ஆண்டு ஜோகன் வாலெரும் கண்டுபிடித்தனர். மூவருமே தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெற்றனர். இதனால் பேப்பர் கிளிப்பை யார் கண்டுபிடித்தது என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

ஆனால் மூன்றாவதாக கண்டுபிடித்த ஜோகன் வாலெர்தான் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்தவர் என்று அங்கீகாரம் தரப்பட்டது. காரணம்,1899-ம் ஆண்டே ஜோகன் வாலெர் பேப்பர் கிளிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அவர் பிறந்த நாடான நார்வேயில் அப்போது காப்புரிமைச் சட்டம் கிடையாது. இதனால் அவர் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை கோரினார். இது தவிர மற்ற இருவரையும் விட வயதில் ஜோகன் இளையவராக இருந்தார். அவர் பிறந்த ஆண்டு 1866. இதனால் ஜோகன் வாலெரே பேப்பர் கிளிப்பின் கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

***

*ஒவ்வொரு ஆண்டும் உலகில் 19 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன. 6.5 ரிக்டர் ஸ்கேல் அள விற்கு அதிகமாக ஏற்படும் பூகம்பங்கள் மனிதர்களின் உயிருக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கக் கூடியவை. 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 7.4 ரிக்டர் ஸ்கேல் ஆகும். இதில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதே ஆண்டு தைவான்,மெக்சிகோ ஆகிய நாடுகளில் 7.6 ரிக்டர் ஸ்கேல் அளவு பூகம்பம் தாக் கியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற் பட்ட பூகம்பம் 8.7 ரிக்டர் ஆகும்.

ஆனால் இதையெல்லாம் விட மிகப்பெரிய பூகம்பம் 1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்டது. இது 9.5 ரிக்டர் அளவாக பதிவானது.

***

*பறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.

பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.

குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய் கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.

***

*ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார்.

1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.

***

*ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நீர் வாழ் உயிரி கள் அருங்காட்சியகம் ஒன்றில் முதல் முறையாக எறும்புத் தின்னி குட்டி போட்டுள்ளது. அந்தக் குட்டிக்கு இப்போது 5 மாதங்கள் ஆகிறது. காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் இதைப் பார்ப்பதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அந்தக் குட்டிதான் தனது இரண்டு கால்களால் இப்படி நடந்து வருகிறது.

ஜப்பானிய மொழியில் எறும்புத் தின்னிகளுக்கு `தமாண்டுவா' என்று பெயர். ஜப்பானிய நீர்வாழ் உயிரிகள் அருங்காட்சியகம் அல்லது விலங்கியல் பூங்கா ஒன்றில் எறும்புத் தின்னி குட்டி போட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

***

*ஆர்டிக், அலாஸ்கா (அமெரிக்கா), கனடா, ரஷியா, இங்கிலாந்து, நார்வே, கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் துருவக் கரடிகள் அதிகம் காணப்படுகின்றன. ஆண் துருவக் கரடி 10 அடி உயரம் வரை வளரும். எடை 650 கிலோ இருக்கும். பெண் துருவக் கரடி 7 அடி உயரம் வரை வளரும். எடை 300 கிலோ வரையே இருக்கும்.

25 வருடங்கள் வரை இவை வாழும். நீண்ட தூர நீச்சலில் துருவக் கரடிகள்தான் சாம்பியன் என்று சொல்லலாம். ஏனெனில் ஓய்வெடுக்காமல் ஒரே வீச்சில் 161 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தும். கடல் நீருக்குள் வாழாத ஒரு விலங்கு இவ்வளவு தூரம் நீந்துவது ஆச்சர்யமானது. தற்போது 40 ஆயிரம் துருவக் கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

***

*சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதற்கும் பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற் கள் முளைத்து விடுகின்றன.

ஒரு பல் விழுந்தால் அந்த இடத்தில் இன்னொரு பல் உட னடியாக முளைத்துவிடுவதே இதற்குக் காரணமாகும்.

இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதல் கீழ்தாடை பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அப்படியே மேல் தாடைக்கு அந்த இரையை தூக்கி வீசும். இப்படியே மேலும் கீழும் தூக்கி வீசித்தான் இரையை அது தின்னுகிறது. எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் அதை 10 நிமிடத்திற்குள் மென்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானது அதன் பற்கள்.

*கழுதைப் புலி ஒரு வேடிக்கையான விலங்கு. இறந்து போன விலங்குகளின் இறைச்சியைத்தான் இது விரும்பித் தின்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள࠯?. உண்மையில் கழுதைப் புலிகள் 95 சதவீதம் தனது இரையைத் தானே வேட்டையாடி வயிற்றை நிரப்பிக் கொள்கிறது. பெரும்பாலும் இது இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும். பெரிய விலங்குகளை அடித்துச் சாப்பிடவேண்டும் என்றால் தனது கூட்டத்தினரோடு செல்லும். மான்,வரிக்குதிரை, காட்டெருமை ஆகியவை இதன் விருப்பமான இரைகளாகும்.

உடல் முழுக்க பெரும் திட்டுக்களைக் கொண்ட கழுதைப் புலியும் உண்டு. இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. காடுகளில் வாழும்போது இவை 40 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் மிருககாட்சி சாலைகளில் வளர்த்தால் 20 வருடங்கள் வரையே வாழும். கழுதை என்ற பெயருடன் இருப்பதால் இது கழுதையின் உறவு இனமும் அல்ல. புலி என்ற பெயர் இருப்பதால் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் கிடையாது. இது எலி பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

***

*நீர்யானைகள் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் பெரிதும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்கு களில் யானைக்கு அடுத்து இதுதான் மிகப்பெரிய விலங்கு. பெரும்பாலும் ஏரிகளில்தான் இவற்றைப் பார்க்க முடியும். ஆனால் நதி, நீரோடைகளில் வாழ்கிற நீர்யானைகளும் உண்டு. இந்த நீர் யானைகளை குள்ள நீர்யானைகள் என்பார்கள். இவை 1.5 மீட்டர் நீளமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்டவை. இவற்றின் மொத்த எடை 300 கிலோவுக்குள் இருக்கும். இவை லைபீரியா நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பெரிய நீர் யானைகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை. தோள் பட்டை வரை 1,4 மீட்டர் உயரம் கொண்டது. அதிக பட்சம் வளரும் நீர்யானை 4 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

நீர் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 வரையிலான நீர் யானைகள் இருக்கும். இவை கொட்டாவி விட்டால் அது டேஞ்சர் என்று அர்த்தம். அது எதிரியைத் எந்த நேரத்திலும் தாக்கலாம்.

***

*சராசரி மனிதர்களைப் போல் 3 மடங்கு உயரம் வளரும் ஒட்டகச்சிவிங்களால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆழ்ந்த தூக்கம் என்றால் அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிகக் குறைவுதான். நின்று கொண்டே அவற்றால் தூங்க முடியாது. இதனால் அவ்வப்போது தூங்கி எழுந்து கொள்ளும். தரையில் நான்கு கால்களையும் பரப்பி வைத்து தலையைக் கீழே வைத்த நிலையில்தான் ஒட்டகச் சிவிங்கிகள் தூங்க முடியும். அந்தத் தூக்கமும் கூட சில நிமிடங்கள்தான். குட்டி பிறந்த ஒரு சில மணி நேரங்களில் எழுந்து நிற்க முடியும். தாயுடன் குட்டி 15 மாதங்கள் வரைசேர்ந்தே வாழும்.

சிங்கமும், சிறுத்தையும்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு கிலி தருபவை. தனியாக இருந்தால் இந்த இரண்டு மிருகங்களும் தங்களை வேட்டையாடித் தின்று விடும் என்பதால் புத்திசாலித் தனமாக வரிக்குதிரை மான் போன்ற பிராணிகளின் கூட்டத்தினருடன் சேர்ந்தே காணப்படும்.

***

*பூச்சிகளின் உடலிலிருந்து `பெரமோன்' என்னும் மணம் தரும் பொருள் தோன்றுகிறது. இப்பொருள் தரும் மணத்தின் மூலம் அவை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. பெரமோன் ரசாயனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள. இந்த மணத்தின் மூலம் வரும் ஆணைகளை பூச்சிகள் மீறுவதே கிடையாது.

வண்ணத்துப் பூச்சிகள், விட்டில்கள்,சிலந்திகள், தட்டான் பூச்சிகள், சில வகை வண்டுகள்,கொசுக்கள், முதுகெலும்பற்ற சில விலங்கினங்கள் ஆகியவை பெரமோன் மணத்தின் மூலம்தொடர்பு கொள்கின்றன. இத்தகைய ரசாயன சமிக்ஞைகள் பல மீட்டர் தூரத்திற்குக் கூட பரவும் சக்தி கொண்டது.

***

*தாமஸ் ஆல்வர் எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரத்து 39 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவரின் 12-ஆவது வயது முதல் எடிசனுக்கு காதும் கேட்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

***

* எல்லா வகைப் பறவைளுக்கும் இறக்கை இருந்தாலும் சில வகைகள் பறக்க முடிவதில்லை. கோழிகள் பறக்க முடியாத பறவை இனத்தைச் சேர்ந்தவை. பறக்க முடியாத பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி. இரண்டாவது மிகப் பெரிய பறவை எமு. நிïசிலாந்தில் காணப்படும் கிவி பறவையாலும் பறக்க முடியாது.

*எறும்பில் பல இனம் உண்டு. ஒவ்வொரு வகையிலும் மூன்று சந்ததிகள். பார்த்தால் எறும்பு மாதிரி இருக்காது. நீண்ட பெரிய வயிறு இருக்கும். இதுதான் எறும்பு. ஒரு புற்றில் ஒரு ராணிதான் இருக்கும். இரண்டாவதாக வீரர்கள். இதன் வேலை புற்றைக் காப்பாற்றுவது. இவைதான் நம்மை நறுக்கென்று கடிப்பது. இதன் வாயில் பார்மிக் அமிலம் இருப்பதால், தோலில் பட்டதும் அரிப்பு எடுக்கும். மூன்றாவது வேலைக்கார எறும்புகள். இதுதான் எண்ணிக்கையில் அதிகம்.

இரை தேடுவது, முட்டைகளை எடுத்துச் செல்வது, புற்றை விரிவாக்கம் செய்வது என்று சகல வேலைகளையும் யார் கட்டளையும் இல்லாமல் செய்யும். இவை மனிதர்களை கடிப்பதில்லை. பாவம் வாயில்லா பூச்சிகள்.

*1960-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கடல் பொறியியல் வல்லுனர்கள் பிக்கார்ட்,லெப்டினன்ட் வெல்ஸ், ஆகிய இரண்டு பேரும் கடலில் 35 ஆயிரத்து 800 அடி ஆழத்தில் வாளைமீன்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதை படம் பிடித்து வந்துள்ளனர். அது நாள்வரை பெரும்பாலான கடல் ஆய்வாளர்கள் ஆயிரத்து 800 அடி வரை மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்று நம்பி இருந்தனர்.

உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரையின் பெயர் பாலபெல்லா. இதன் உயர் 75 செ.மீட்டர். மிகப்பெரிய குதிரையின் பெயர் ஷயர். இதன் எடை 910கிலோகிராம். குதிரைக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை நினைவில் வைத்திருக்குமாம் குதிரைகள்
*அண்டார்டிக் பகுதியில் காணப்படும் நீலத் திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் கலோரி சத்து தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தேவை 2,500 கலோரிதான். இதற்காக நீலத் திமிங்கலம், கிரில் எனப்படும் கடற்பாசியை விழுங்கி விடுகிறது. இந்தக் கடற்பாசியில் 56 சதவீதம் புரதச் சத்து இருக்கிறது.

*உலகெங்கும் ஏப்ரல் முதல் தேதியை எல்லாநாடுகளும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் அன்றைய நாள் மீன்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

*பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே அவை நெடுநேரம் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் வியர்த்துக் கொட்டுவதில்லை.

*பென்சிலின் என்னும் உயிர் காக்கும் மருந்து பென்சிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.

பெனிசிலியம் அழகிய அங்ககப் பொருட்களின் மீது வளரும்.

பாலினம் இல்லாத இனப் பெருக்கத்தின் மூலம் புதிய பெனிசிலியம் உருவாக்கப்படுகிறது.

பெனிசிலியம் ஆல்கா பிரிவினத்தைச் சார்ந்ததாகும்.

பெனிசிலியம் பாலாடைக் கட்டி தயாரிக்க பயன்படுகிறது.

பெனிசிலியம் எக்ஸ்பேன்சம் என்னும் பூஞ்சை ஆப்பிள், திராட்சையில் அழுகலை ஏற்படுத்தக் கூடியவை.

*இந்தியாவில் முதன் முதலில் தபால் தலை 1852-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தபால் தலைகள் வட்டவடிவில் இருந்தன.

முள்ளம் பன்றி காட்டுப்பிராணி. இதன் உடம்பு முழுவதும் விரைப்பாக நிறுத்தும் சக்தியை இதன் தசைகள் பெற்றுள்ளன. இவை பகல் நேரங்களில் புதர்களிலும் மரப் பொந்துகளிலும் ,பாறை இடுக்கு களிலும் மறைந்திருக்கும். இரவு நேரங்களில் வெளிப் பட்டு இரை தேடச் செல்லும். பகை மிருகங்கள் தாக்க வந்தால் உடம்பிலுள்ள முட்களை விரைப்பாக நிமிர்த்தி, பந்து போல் உருண்டையாக்கிக் கொள்ளும். பாம்புக்கடி விஷம் முள்ளம் பன்றியை ஒன்றும் செய்யாது. இது சுண்டெலி, தவளை போன்ற பறவைகளின் முட்டைகளைத் தின்னும்.

காண்டா மிருகம் மிகவும் பெரிய உருவமுடையது. 1.7 மீட்டர் உயரமும், 2 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. 50 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒற்றைக் கொம்பை உடையது. (இரட்டைக் கொம்பு கொண்ட காண்டா மிருகங்களும் உண்டு) இதன் தோற்றம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறதே தவிர இது சாந்தமான மிருகம். சைவப் பிராணி. தழையையும் புல்லையுமே உணவாகக் கொள்கிறது. இதன் கொம்பு அடர்த்தியான ரோமங்களால் ஆனவை. இந்த கொம்பு எதிரிகளை விரட்டவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. காண்டா மிருகத்துக்கு கால்களில் மூன்று விரல்கள் உள்ளன.

பறவை இனத்தில் மூன்றில் ஒரு பகுதி பாடக் கூடிய பறவைகள். அவைகளில் வானம்பாடி, இரவுப் பறவை ஆகியவை சிறந்த பாடும் பறவைகளாகும். ஐரோப்பாவில் பல வகையான பாடும் பறவைகள் உள்ளன.

பாடும் பறவைகள் பொதுவாக மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே பாடுகின்றன. வழி தவறிச் சென்ற பறவைகளை அழைப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன. தன் எல்லைக்குள் மற்ற பறவைகள் வரக் கூடாது என எச்சரிக்கை விடுப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன.

விலங்குகள், பூச்சிகள், ஒரு வித வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் செய்திகளைத் தெரிவிக் கின்றன. இந்த வாசனைப் பொருளை `பெரமோன்'கள் என்றழைக்கிறார்கள்.

மான்கள் இனத்தில் ஒன்றான சிவப்பு மான், தன் கண்களுக்கு அருகே சுரக்கும் ஒரு வித நீரை புதர்கள் மீதும், மரங்களின் மீதும் வீசித் தெளித்து அதன் மூலம் அவற்றின் எல்லையை வரையறுத்துக் கொள்கின்றன.

குழந்தைகள் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக உடல் நலமாக உள்ள குழந்தைகள் எப்போதும் துருதுருவென்று இருக்கும். தூங்கும் நேரம் தவிர, எஞ்சிய வேளைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டும் வேறு ஏதாவது செய்து கொண்டும் இருக்கும்.இவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கும்போது மிகுந்த ஆற்றல் செலவாகிறது. இதனை ஈடு செய்ய எளிதாக ஆற்றலையளிக்கும் சர்க்கரைப் பொருட்கள் தேவைப்படுகிறது. சுவை மிகுந்த இனிப்புப் பண்டங்களில் கார்போஹைடிரேட் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இவற்றை பெரிதும் விரும்புகின்றன.

பாபா வெஸ்ட்ரே ஐலண்ட் என்கிற அமெரிக்கப் பயணிகள் விமானம் வெஸ்ட்ரே ஐலண்டுக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையிலுள்ள ஒன்றரை மைலுக்காக பறக்கிறது. பயண நேரம் இரண்டே நிமிடங்கள்தான்.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டாலிம் என்ற பொருள் சர்க்கரையை விட 5 ஆயிரம் மடங்கு இனிப்பானது.

தெருவிளக்கைக் கண்டு பிடித்தவர், முதன் முதலில் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர், வாடகை நூலகத்தை ஆரம்பித்தவர், ஆடும் நாற்காலி, ஸ்டவ், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், செய்தித்தாளை தபாலில் அனுப்பும் முறை, தெருவை சுத்தம் செய்யும் பிரிவை துவக்கியவர், நவீன தாபல்நிலையத்திட்டத்தை உருவாக்கியவர்- இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், பெஞ்சமின் பிராங்க்ளின்.

இத்தாலியிலுள்ள ரெல்ரேன்கோ என்னும் சிறு நகரத்தில் ஒரு நாய் ஆறு குட்டிகளைப் போட்டது. அவற்றில் 5 கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது. இதுதான் உலகின் முதல் பச்சை நிற நாய்க்குட்டி. 25 நாட்களுக்குப்பின்னர் நாய்க் குட்டியின் நிறம் தனி பச்சை நிறமாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்தான் அமெரிக்காவிலிருந்து 17-ம் நூற்றாண்டு வாக்கில் கொண்டு வந்தனர்.

அது மட்டுமல்ல, போர்ச்சுகீசியர்கள் பொடி போடும் பழக்கத்தையும் தங்களுடன் கொண்டு வந்தனர். புகையிலைச் செடியும் அமெரிக்காவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயும், பைப் பிடிப்பவர்களுக்கு உதட்டுப் புற்று நோயும், சுருட்டு பயன்படுத்துபவர்களுக்கு நாக்கில் புற்றுநோயும் ஏற்படும்.