கூந்தல் அழகை பாதுகாக்கும் எண்ணெய்கள்

கூந்தல் அழகை பாதுகாக்கும் எண்ணெய்கள்
hair-problem-control-oils

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

அழகான கூந்தலுக்கு எண்ணெய் மிக மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

* அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்தான் நல்லது. உச்சந்தலையில் ஒரு கை வைத்து, கால் மணி நேரம் ஊறவிட்டால், உச்சந்தலை நன்கு குளிர்ந்துவிடும். உச்சந்தலைக் குளிர்ந்தால், உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கூந்தல் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். நல்லெண்ணெயை லேசாகச் சுடவைத்து, ஒரு பூண்டு பல், இரண்டு மிளகு போட்டு பொரிய விடுங்கள். இது ஆறியதும், கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, ஷாம்புவோ அல்லது சீயக்காயோ பயன்படுத்தி தலைக்குக் குளித்து விடுங்கள்.

* தலைக்கு ஆலிவ் ஆயில் தடவி குளிப்பவர்கள் கவனத்துக்கு... இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை எங்குத் தடவினாலும், அந்தப் பகுதியைக் கறுப்பாக்கும் தன்மைகொண்டது. அதனால், சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆற வைத்து தலைமுடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள்.

* அடுத்தது, தேங்காய் எண்ணெய். பிராண்டட் எண்ணெயிலும் கலப்படம் இருக்கிறதெ பயப்படுபவர்கள், வீட்டிலேயே இதை தயாரிக்கலாம். கொப்பரைத் தேங்காய்களை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துப் பிழிந்து,  வடிகட்டி, இரும்பு வாணலியில் காய்ச்சுங்கள். சடசடவென வெடித்து தண்ணீர் ஆவியாகி, எண்ணெய் திரண்டு வரும்போது, அடுப்பை அணைத்து ஆறவிடுங்கள். இந்த எண்ணெயை ஒருநாள் விட்டு ஒருநாள் வேர்க்கால்களில் மட்டும் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் உடையாமல், சிக்கு விழாமல் இருப்பதற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம்.

* பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமின்றி, ஸ்கால்புக்கும் நல்லது. கூந்தலைப் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும் பாதாம் எண்ணெய். இந்த ஆயிலைத் தலை முழுக்கத் தடவி, இரவு முழுக்க ஊறவிடுங்கள். காலையில் முகத்தில் எண்ணெய் வழிவதுபோல உணர்ந்தீர்கள் என்றால் மட்டும், தலைக்குக் குளியுங்கள். இல்லையென்றால் அப்படியே விட்டு விடலாம். இந்த மிக்ஸ்டு ஆயில் பொடுகுத் தொல்லை வராமல் தடுக்கும். 

உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்

உடல் எடையை குறைக்க முடியாததற்கான காரணங்கள்
why-you-are-not-losing-weight


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம்.

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

* சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

* எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

* பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

* உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

* சுத்திகரிக்கப்பட்ட (மைதா) மாவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

சளி - இருமல் பிரச்சனைக்கு எளிய பயனுள்ள கைவைத்தியம்

சளி - இருமல் பிரச்சனைக்கு எளிய பயனுள்ள கைவைத்தியம்
Simple-home-medicine-for-cold-and-cough


  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம். அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவை சளி, இருமலை அதிகரித்து விடக்கூடும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.

உணவு வெஜிடபிள் அவல் மிக்ஸ் -Aval Vegetable Salad

உணவு வெஜிடபிள் அவல் மிக்ஸ் -Aval Vegetable Salad
சர்க்கரை நோயாளிகளுக்கான மதிய உணவு வெஜிடபிள் அவல் மிக்ஸ்
aval-vegetable-salad



           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் மதிய உணவாக வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாப்பிடலாம். இன்று இந்த உணவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அவல் - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
கோஸ் - சிறிய துண்டு
குடை மிளகாய் - பாதி
தக்காளி - 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
சீரகத்தூள் - தேவையான அளவு
பிளாக் சால்ட் - சிறிதளவு.

செய்முறை :

அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறிய அவலை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, குடை மிளகாய், கோஸ், இஞ்சி, துருவிய கேரட், தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கவும்.

சூப்பரான வெஜிடபிள் அவல் மிக்ஸ் ரெடி.

பலன்கள்:  சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

பிரெட் பக்கோடா - Bread Pakora

பிரெட் பக்கோடா - Bread Pakora



           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரெட் - 5 துண்டுகள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி துண்டு - சிறிய துண்டு
மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

ப.மிளகாய்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பிரெட் பக்கோடா ரெடி. 

டெவில் சிக்கன்- Devil Chicken செய்வது எப்படி?

டெவில் சிக்கன்- Devil Chicken செய்வது எப்படி?
devil-chicken


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்
பஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)
குடை மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)
இஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்
முட்டை - 1
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தாள், தக்காளியை பெடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.

இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.

இத்துடன் கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான டெவில் சிக்கன் ரெடி.

பன்னீர் பாஸ்தா - Paneer Pasta.

பன்னீர் பாஸ்தா - Paneer Pasta.
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா


  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேக வைத்த பாஸ்தா - 200 கிராம்
பன்னீர் - 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
இஞ்சி - அரை டீஸ்பூன்
பூண்டு - அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும்.

இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியதும் பன்னீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும்.

வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும்போது கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும்.

What Factors Determine Interest Rates - K Karthik Raja Stock Market Training

What Factors Determine Interest Rates - K Karthik Raja Stock Market Training

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


What Factors Determine Interest Rates - K Karthik Raja Stock Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

https://kkarthikrajasharemarkettraining.business.site/
https://share-market-training.business.site/

Balance Sheet Items -Assets - Liabilities - Equity - K Karthik Raja's Share Market Training

Balance Sheet Items -Assets - Liabilities - Equity  - K Karthik Raja's Share Market Training

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

Balance Sheet Items -Assets - Liabilities - Equity  

Balance Sheet Items -Assets - Liabilities - Equity  - K Karthik Raja's Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Stock Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்
murugan-worship

  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/
முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். முருகப்பெருமானின் 16 வகையான திருக்கோலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

கந்தசாமி: பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும்.

ஆறுமுக தேவசேனாபதி: சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக் கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சுப்பிரமணியர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடை கழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘சுப்பிரமணியர்’ ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர் களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர்.

கஜவாகனர்: திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக் கோபுரத்தில், யானை மீது இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை ‘கஜவாகனர்’ என் கிறார்கள். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

சரவணபவர்: சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத் தலங்களில் ‘சரவணபவர்’ திருவுருவை காணலாம். இந்த வடிவத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.

கார்த்திகேயர்: கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது. இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.

குமாரசாமி: கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலிலும் இந்த திருவுருவை தரிசிக்க முடியும்.

சண்முகர்: திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். இவரை வழிபட்டால் சிவன்- சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார்.

சேனானி: தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும்.

பிரம்மசாஸ்தா: காஞ்சீபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகை செயல்களிலும் தேர்ச்சி பெறலாம். கல்வியில் வெற்றி கிட்டும்.

வள்ளிகல்யாணசுந்தரர்: திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.

பாலசுவாமி: திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. இவர், அங்கக் குறைபாடுகளை அகற்றுபவராக இருக்கிறார். மேலும் நீண்டநாள் நோய் விலகும்.

சிரவுபஞ்சபேதனர்: திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.

சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர். 

சென்னையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் - வணங்குவதற்குரிய பாசுரங்கள்

சென்னையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் - வணங்குவதற்குரிய பாசுரங்கள்
Ashtalingam-slokas


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

திருவண்ணாமலை திருத்தலத்தில் அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும். அதேபோல் சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்து சென்னை மக்களுக்கும் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.

வேதங்கள் நான்கும் வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், ‘வேற்காடு’ என்று பெயர் பெற்ற திருவேற்காடு தலத்துக்கு, அகத்தியர் ஒரு முறை வருகை தந்தார். அப்போது, சிவபெருமானை அவர் பாடிப் பணிந்ததன் பேரில், அவருக்கு சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சியளித்தார். அகத்தியர் வேண்டிய உடன் காட்சி தந்த சிவபெருமானிடம், அன்னை உமாதேவி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

‘மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் கேட்ட உடன் உங்கள் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், உலக மக்களுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?’ என்றார்.

அதன் காரணமாகவே, அனைத்து மக்களும் வழிபட்டு எளிதில் ஈசனின் அருள்பெற திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் உமாதேவியுடன் இணைந்து அஷ்ட லிங்க மேனிகளை இறைவன் வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.

அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.

வழிபாட்டு முறை

பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு. அந்த லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

இந்திர லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். இது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இங்குள்ள இறைவன் ‘இந்திர சேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் கோவில் கொண்டுள்ளார். அங்கே நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

‘தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க’

அக்னி லிங்கம்

இரண்டாவதாக வழிபட வேண்டிய அக்னி லிங்கம், திருவேற்காட்டிற்கு தென்கிழக்கில் உள்ள வள்ளிக் கொல்லைமேட்டில் இருந்து சுமார் 3½ கி.மீ. தொலைவில் நூம்பல் என்ற இடத்தில் இருக்கிறது. ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால், இந்த தலத்துக்கு ‘நூம்பல்’ என்று பெயர். இங்குள்ள சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடினால் எதிரிகள் தொல்லை, வழக்குகள் மற்றும் வெப்பம் தொடர்பான பிணிகள் அகலும்.

‘பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே’

எம லிங்கம்

மூன்றாவதாக வணங்க வேண்டிய எம லிங்கம், நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ள செந்நீர்க்குப்பத்தில் இருக்கிறது. இத்தல இறைவன் மரகதாம்பிகை தேவி சமேத கயிலாசநாதர். இவருடைய சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வணங்கினால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்கு சம்பந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

‘மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க’

நிருதி லிங்கம்

நான்காவதாக வணங்க வேண்டியது நிருதி லிங்கம். செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே பாலீஸ்வரர் என்ற பெயருடன், பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற நாமத்துடன் இறைவன் அருள்கிறார். சுமார் 2,300 ஆண்டுகள் முற்பட்ட இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும்.

‘வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்’

வருண லிங்கம்

ஐந்தாவது வழிபட வேண்டிய இந்த லிங்கம், செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரராக இறைவன் அருள்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட பாசுரத்தை மனம் உருக பாடி வழிபாடு செய்தால், வீடு கட்டுவதில் உள்ள தடை தாமதங்கள் விலகும்.

‘திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க’

வாயு லிங்கம்

ஆறாவது லிங்கமான வாயு லிங்கம், திருவேற்காட்டீஸ்வரர் சன்னிதிக்கு வடமேற்கு திசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது. விருத்தாம்பிகை தேவி சமேத வாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

‘கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க’

குபேர லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் ஏழாவது குபேர லிங்கம். பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரங்களை பாடி வணங்கினால், பொன்னும், நவ மணிகளும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

‘கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிறமேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க’

ஈசான லிங்கம்

அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இது. வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.

‘அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தி
திங்களிற் றவன மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பெங்கும் காக்க’

கருடன் பறக்கும் போது வணங்கும் ஸ்லோகம்

கருடன் பறக்கும் போது வணங்கும் ஸ்லோகம்
garuda-slokas

  

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.

கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும். கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

“குங்குமங்கித வர்ணாய
குந்தேற்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
பட்சிராஜாயதே நமஹ”

ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி

ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி
lakshmi-108-potri


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீலட்சுமி போற்றி சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் பெறலாம்.

எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

ஓம்  திருவே  போற்றி
ஓம்  திருவளர் தாயே போற்றி
ஓம்  திருமாலின் தேவி  போற்றி
ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
ஓம்  திருஞான வல்லி  போற்றி
ஓம்  திருவருட் செல்வி  போற்றி
ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
ஓம்  தீபசோதியே  போற்றி
ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
ஓம்  தூப ஜோதியே  போற்றி
ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
ஓம்  அன்னையே அருளே  போற்றி
ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
ஓம்  இச்சை கிரியை  போற்றி
ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
ஓம்  இகபர சுகமே  போற்றி
ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
ஓம்  எண்குண வல்லி  போற்றி
ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
ஓம்  கற்பக வல்லி  போற்றி
ஓம்  காமரு தேவி  போற்றி
ஓம்  கனக வல்லியே  போற்றி
ஓம்  கருணாம் பிகையே  போற்றி
ஓம்  குத்து விளக்கே  போற்றி
ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
ஓம்  மங்கல விளக்கே  போற்றி
ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
ஓம்  நவரத்தின மணியே  போற்றி
ஓம்  நவநிதி நீயே  போற்றி
ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
ஓம்  கஜலட்சுமியே  போற்றி
ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
ஓம்  தனலட்சுமியே  போற்றி
ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
ஓம் விஜயலட்சுமியே  போற்றி
ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
ஓம்  வரலட்சுமியே  போற்றி
ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
ஓம்  பூதேவி தாயே  போற்றி
ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
ஓம்  சீதேவி தாயே  போற்றி
ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
ஓம்  மதிவதன வல்லி  போற்றி
ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
ஓம்  கமலக்கன்னி  போற்றி
ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
ஓம்  வேத வல்லியே  போற்றி
ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
 பெரியர்க் கருள்வாய்  போற்றி
ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
 கருள்வாய்  போற்றி
ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
 கருள்வாய்  போற்றி
ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே
போற்றி போற்றி போற்றி