குடித்தனம் போககூடாத மாதங்கள்

குடித்தனம் போககூடாத மாதங்கள்




ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற  ரணத்தைப் பார்க்கலாம்
இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.
இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
 பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.
 மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.
மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம்.

ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம்.




நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர்,

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.

உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.
இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் பண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.

கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.

ஆண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போகவான், பெண்கள் கூட்டம் தேடிவரும், பெண்கள் மூலம் உதவி உண்டு.

வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர்.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.

பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன்.

பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம் இல்லை

வெந்நீர் மருத்துவ பயன்கள் :- Hot Water Benefits

வெந்நீர் மருத்துவ பயன்கள் :- Hot Water Benefits




ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவதையும் என் அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது… என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா…? குட் குட்!

CIBIL - சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

CIBIL - சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

சிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்! #CIBIL




கடன் சம்பந்தப்பட்ட  விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

CIBIL என்றால் என்ன?

Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?

க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.

இதனால் என்ன பயன்?

நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.

கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.

என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?

க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.

ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும்.

சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?

சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?

சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.

சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?

க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.

கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?

ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.

சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?

இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.

ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.

அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?

குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்


நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மருத்துவர் சிவராமன் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை பட்டியலிட்டுள்ளார்.

‘’மனித தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது.

ஆனால், நாகரீகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும் மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம்.

மின்சாரம் கண்டுபிடிக்காத காலத்தில் நாம் அனைவரும் இரவு 7, 8 மணிக்கெல்லாம் தூங்க சென்றுவிடுவோம். ஆனால், மின்சாரம் வந்ததும் அதனை பயன்படுத்தி இரவுப் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறோம்.

ஒரு மனிதர் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறாக எண்ணி வருகின்றனர்.

நமது உடலமைப்பின்படி, இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும்.

ஏனெனில், சூரியன் உதிக்கும்போது அந்த வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். சூரியன் அஸ்த்தமனம் ஆன பின்னர் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும்.

இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 4 மில்லியன் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

முக்கியமாக, மேலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

இந்த மேலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது.

தற்போதைய காலத்தில் இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள் மற்றும் தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காது.

இதன் விளைவாக, புற்றுநோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த மேலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பது தான்.

இளம்வயதினருக்கு இப்பிரச்சனை உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.

முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

எனவே, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க இரவு 11 மணிக்கு முன்னதாகவே படுக்கைக்கு சென்று தூங்கிவிடுவது மிகவும் சிறந்தது’ என உளவியல் மருத்துவரான சிவராமன் தெரிவித்துள்ளார்.

எந்த வயது, எதில், எவ்வளவு முதலீடு செய்யலாம்

வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்

வீட்டில்  காட்சிப்  பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு அதுக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கடிகாரம் நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எந்த திசை சிறந்தது?

* கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. * வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். * கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.

கண்ணாடி வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
எந்த திசை சிறந்தது? * வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. * குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்

7 குதிரைகள் கொண்ட ஓவியம் பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

எந்த திசை சிறந்தது?

* குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. * அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. * இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.
மணி ப்ளாண்ட் இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது
ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.
எந்த திசை சிறந்தது? இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்

குறட்டைப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்

குறட்டைப்பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும்





குறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக காற்றானது எளிதில் செல்ல முடியாமல் தடை ஏற்படும் போது எழும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக குறட்டை விடுவார்கள். குறட்டை யை சாதாரணமாக விடக்கூடாது. அதை சரிசெய்ய முயலாவிட்டால், அதனால் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே குறட்டை பிரச்சனை உள்ளவர்கள், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.

இங்கு குறட்டை பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் 3 உணவுகள் குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். ஆலிவ் ஆயில்

 இந்த அற்புத எண்ணெயில் ஏராளமான நன்மைகள உள்ளது. அதில் ஒன்று குறட்டை பிரச்சனையைப் போக்கும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.
புதினா புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஏலக்காய் இந்த அரேபியன் மசாலாப் பொருளானது, சமையலில் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் வழங்குவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக ஏலக்காய் சளியை இளகச் செய்து, சுவாச பிரச்சனைகளைச் சரிசெய்யும்.  அதற்கு தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்லவோ அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, குடித்து வரவோ செய்யலாம்.

ஊஞ்சல் - Swing- ஆடுவது எதற்காக - தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஊஞ்சல் - Swing- ஆடுவது எதற்காக  - தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்



*முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.*

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

(This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

*பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.*

*சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.*

மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் !!!

மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில்  வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் !!!




மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாஸ்து தோஷம் வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும். அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

சனி தோஷம் சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்.


அலமாரி நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.

எதிர்மறை ஆற்றல்கள் மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம் ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

அன்யோன்யம் மற்றும் புரிதல் திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

அறுவகைச் சுவை என்ன என்ன?

அறுவகைச் சுவை என்ன என்ன?



நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது

திருமணத்தின் போது மோதிரம் போடுவது ஏன்?

திருமணத்தின் போது மோதிரம் போடுவது ஏன்???

Share Market Training : Whatapp Number : 9841986753
வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி? 


Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1,தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம்.

2,தோடு: எதையும் வெளியில் சொல்லாமல், காதோடு போட்டு வைத்துக்கொள்.

3,மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால்.

4,வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக.

5,ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக.

6,மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. இந்த ஆறு நகைகளையும் அணிந்தால் தான், ஒரு பெண்ணின், பெண் தெய்வங்களின் அலங்காரம் முழுமை அடைந்ததாக பொருள். இந்த பலன்களை, பெண்களாகிய நாம் நமக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

எந்த விரலில் அணியலாம் மோதிரம் அணிந்திருக்கும் பெண்களின்
கை தான் வீட்டில், குடும்பத்தில் ஓங்கியிருக்க வேண்டும்; செல்வாக்குடன் விளங்க வேண்டும். மோதிரம் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் நல்லது என்பதற்கு, நம் முன்னோர், சில, பல காரணங்களையும், ஆய்வாளர்கள் பல, சில காரணங்களையும் கண்டுபிடித்து, கடைபிடிக்க சொல்லியுள்ளனர்.

நம்முடைய நான்காவது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும். அதற்கு பெயரே, மோதிர விரல் தான். நம் ஐந்து விரல்களுமே, நம் ஐந்து சொந்த பந்தங்களை குறிக்கின்றன.
சுண்டு விரல்: நம் பிள்ளைகளை
மோதிர விரல்: வாழ்க்கை துணையை
நடு விரல்: நம்மையே குறிக்கும்.
ஆள்காட்டி விரல்: நம் சகோதரர்களை
பெரு விரல்: பெற்றோரை
சுண்டு விரலில்: மோதிரம் அணிவது வழக்கத்தில் இல்லை, அணிந்தாலும் இதய சக்தி ஓட்டம் தடைப்படும்.
மோதிர விரலில்: ஒவ்வொருவரும், கண்டிப்பாக ஒரு வளையமாவது
அணிந்திருக்க வேண்டும். இதய நோய், வயிற்றுக் கோளாறுகளை தடை செய்யும். இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.
நடு விரலில்: பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை. இஸ்லாமியத்தில் நடுவிரலில் மோதிரம் அணிவதை, தடை செய்துள்ளதாக ஹதீஸ் தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் நபர்களின் முகத்தை வைத்து, குணாதிசயங்களையும்; நடை, உடை பாவனைகளை வைத்து குணத்தையும்; உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து, சாமுத்திரிகா லட்சணத்தையும் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். தற்போது கை விரல்களையும், அதில் அணியும் மோதிரங்களையும் வைத்தும், ஆராய்ச்சி செய்து நபர்களின் குணாதிசயங்களை கூற முடியும் எனக் கூறப்படுகிறது.
நம் நாட்டு கலாசாரப்படி, மோதிரம் மாற்றிக் கொள்வது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தானே தவிர, அதுவே திருமணம் முடிந்ததற்கு அத்தாட்சி கிடையாது.
ஆள்காட்டி விரலே சிறந்தது
மாணிக்கம், முத்து, கோமேதகம், மரகதம், வைரம், வைடூரியம், பவளம் என, இத்தனை அதிர்ஷ்ட கற்களையும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தில் பதித்து, மோதிரமாக, பெண்கள், இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது, உடம்புக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, நல்லது நடக்கும்படியாக நம்
செயல்பாட்டினை வைத்திருக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.
புஷ்பராகம், கனக புஷ்பராகம் கற்கள் பதித்த வெள்ளி மோதிரம், ஆள்காட்டி விரலிலும், நீலம் கற்களை பதித்த வெள்ளி, பிளாட்டினம் மோதிரத்தை நடு விரலிலும், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரத்தை, சுண்டு விரலிலும் அணிகிற வழக்கமும், இப்போது பரவியுள்ளது.
உடம்பில் எந்த நகையாக இருந்தாலும், இந்துக்கள் தங்கத்தில் அணியவே விரும்புகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில், வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் ஏற்றது என்பது ஒரு காரணம் என வைத்துக் கொண்டாலும், தங்கம் எப்போதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நம் பெண்களிடம் உள்ளது.
நீள விரலின் மகிமை
ஆள் காட்டி விரலை விட, மோதிர விரல் நீளமாக இருந்தால், ‘ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்’ என்ற மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.
மோதிர விரலின் நீளம், அளவை வைத்து, இதயநோய், புற்று நோய், சளித்தொல்லை போன்ற நோய்கள் உள்ளனவா என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும்.
ஆள்காட்டி விரல், மோதிர விரல், இரண்டுக்கும் உள்ள உயரம், இடை
வெளியின் விகிதம் வைத்து, பாலின ஹார்மோன்களை கூட, கணக்கிட்டு கூறமுடியும் என்கிறது ஜெனிவா பல்கலைக் கழகம்.
ஆண்மையின் அடையாளத்தை நிர்ணயிக்கும், ‘டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் அளவு மிகுந்தால், மோதிர விரல் நீளமாகவும், பெண்மையை நிர்ணயிக்கும், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் இருந்தால், ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்குமாம்.
பொதுவாக ஆள்காட்டி விரலை விட, மோதிர விரல், நீளமாக உள்ள ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.மோதிரம் விரலில், மோதிரம் அழுத்தும் இடத்திலிருந்து, நரம்பு நேரிடையாக இதயத்தை போய் சேர்கிறது.
ஐரோப்பிய நாடுகளில், திருமணத்திற்கு முன், இடது கை விரலில் போட்டிருக்கும் மோதிரம், திருமணத்திற்கு பின், வலது கை விரலுக்கு மாற்றப்படுமாம்.
மோதிர விரல் என, பெயர் சூட்டப்பட்டுள்ள நம் கையின் நான்காவது விரலில், திருமணத்தின் போது கண்டிப்பாக மோதிரம் போட வேண்டும். இது, வரதட்சணையாக மாமியார் போட்டாலும் சரி; நமக்கு நாமே போட்டுக் கொண்டாலும் சரி. நம் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே, நான்காவது விரலில் தான் உள்ளது.
ஆண், பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. நான்காவது விரலில் தான், திருமண மோதிரம் போட வேண்டும் என்பதற்கு, ஒரு நம்பிக்கை கதை உண்டு.
விரல்களை பிரித்தால்…
இரு உள்ளங்கைகளையும், நேருக்கு நேராக இருக்கச் செய்யுங்கள். நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள். ஏனைய விரல்களை நிமிர்த்து ஒட்ட வையுங்கள். இப்போது பெருவிரலை பிரித்துப் பாருங்கள் சுலபமாக பிரிக்க முடியும். அதாவது உங்கள் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், உங்களுடன் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம். பெரு விரலை திரும்ப ஒட்ட வைத்துவிட்டு, ஆள்காட்டி விரலை பிரியுங்கள்.
உங்களின் சகோதரர்கள், உங்களுடனேயே இருப்பர் என சொல்ல முடியாது என்று பொருள். சுண்டு விரலும், இதே மாதிரி எளிதாக பிரியும். உங்கள் பிள்ளைகளும் உங்களுடனேயே இருப்பர் என நம்ப முடியாது என்பதாக அர்த்தம்.
கடைசியாக, மோதிர விரலை இதே மாதிரி பிரிக்க முயலுங்கள்… கொஞ்சம் கடினம்; உடனே பிரிக்க இயலாது. இதே போல், கணவன், மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, திருமண சடங்குகளில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இது வேடிக்கையான, ஆனால், கொஞ்சம் யோசிக்க வைக்கிற, ஓர் உதாரணம்.
பார்க்க நவ நாகரிகமாக இருந்தாலும், அப்படி இரண்டு விரல்களை சேர்த்து இறுக்கி, மோதிரம் அணிவது, நரம்புகளை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு பெண், தன் வாழ்நாள் முழுவதும், நகை களை சேர்த்து, பாதுகாத்து வைக்க வேண்டிய சூழ்நிலை, இப்போது உள்ளது. கல்வி, உழைப்பு, திறமை, அறிவு ஆகியவை கைகூடும்போது, இந்த தங்க நகைகளை பற்றிய சிந்தனையும், இவ்வளவு வரவேற்பும், பெண்களிடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?




சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.


சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

"ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா'என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதைஅடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா'என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமிகடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.

ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன்என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள். 

மண் குளியல் - இயற்கை வாழ்வியல்

 மண் குளியல் -  இயற்கை வாழ்வியல்



*மண் குளியல்*

*(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம்.*

 *மண் குளியல் எடுக்க வேண்டிய  நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.*

*இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு  தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.*

*(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.*

*(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.*

*(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.  புண்களிலும் பூசலாம்.*

*(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.*

*(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.*

*(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.  சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை.  மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து  மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.*

*(8) கழிவுகள் இம்முறையில் வெமருத்தம்.  வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.  பிரஷ்ஷாக இருக்கும்.*

*(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன்  தரும்.*

*(10)  அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.*

        *நீராவிக் குளியல்*

 *மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள்  வெளியேறுவது மிகவும் குறைவு.*

 *இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை,  நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.*

*பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது.  குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும்.*

 *நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3  (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர்  உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.*

 *நன்றாக வியர்க்க வேண்டும்.   சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.*

        *முதுகு தண்டு குளியல்*

*இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும்.*

 *பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.  முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன்  தரும்.*

*இடுப்புக் குளியல்*

*இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.  அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.  பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது.*

 *பாதி பாத்திரத்தில்  நீரை நிரப்பி அதில் அமரவும்.  கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும்.*

 *கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம்.  இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும்.*

 *ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும்.   40 நிமிடங்கள் வரை அமரலாம்.  15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.*

 *ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.  இது  வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது.  தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.*

*கண் குவளை*

*இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  அல்லது ஒரு  நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.*

*இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி.  பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.  இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.*

*இந்த குவளையில் கண்ணை  வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக  இருக்கும்.*

  *இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.*

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?


✨ ஏன் ஏற்படுகிறது?

✨  எப்படி குணமாக்குவது?_


      வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

       இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.

    நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”
என்றார்.

      உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும்.

      பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும்.

      அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.

      பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்?

      108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும்.

    அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது.

        இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

     ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.

      உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரி செய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

     பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும்.

    பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள்.

       அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும்.

      அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

     உடலில் உருவான
நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

      🌱வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது.

🌱 இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன.

🌱அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது.

🌱 இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

🌱இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.

🌱பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான்.

🌱அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.

🌱 நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள்.

🌱 ஏன் எனில் உங்களின் இரத்த அழுத்தத்திற்கும், இரைப்பைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்

உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்





உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்
ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals - கல் உப்பு ) பயன் படுத்தப்படுகின்றன. இது ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. தினமும் உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப் படுகிறது. ஐந்து ஸ்பூன் சுத்தி கரிக்கப் படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத் துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறைச் சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.

குளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம் -


நாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை / கழிவறையாகும்.� இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன.� எனவே குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.� கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை / கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும்.� இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது.� உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.