அஷ்டமி விரதம் - Ashtami Viratham

 அஷ்டமி விரதம் - கஷ்டங்களை போக்கும்
 அஷ்டமி விரதம் - Ashtami Viratham
ashtami-vratham

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'அஷ்டமி திதி விரதம்' ஆகும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது 'அஷ்டமி திதி விரதம்' என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் 'கோகுலாஷ்டமி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

வைகாசி 'அஷ்டமி விரதம்' சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.