சமயபுரம் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள் - Samayapuram Mariyamman Temple

சமயபுரம் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள் - Samayapuram Mariyamman Temple


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சமயபுரத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

வசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.

இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

அன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.

எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

இங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.

அம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.

சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள். 

ஒரு மணி நேரம் ஓம் நம சிவாய நாமம் சொன்னால் - 1 hour Chanting "Om NamaShivaya"

ஒரு மணி நேரம்  ஓம் நம சிவாய நாமம் சொன்னால் - 1 hour Chanting "Om NamaShivaya"

ஒரு மணி நேரம்  ஓம் நம சிவாய நாமம் சொன்னால்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஒரு மணி நேரம்,

1. நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது .
2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது .
3. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது .
4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிக்ஷைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .
5. ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது .

6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .
7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
8. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது.
9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.
10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .

11. ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள்.
13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.
15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.

16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்.
17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
18. ஒரு மணி நேரம் பாண்டுரங்கன் உங்கள் கை யை பிடித்துக்கொண்டு இருக்கிறான் .
19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை கோவிந்தன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.

21. ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
23. ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
24. ஒரு மணி நேரம் பகவானையே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.

26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
27. ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
28. ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு பிரண்டவர் ஆகிறீர்கள்.
29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.

30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாமம் வேறு இல்லை பகவான் வேறு இல்லை ..அந்த ஒரு மணி நேரம் இறைவனே உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்...

பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும்...!!!

         

படியேறுங்க போதும் - உடற்பயிற்சி வேண்டாம் !

 படியேறுங்க போதும் - உடற்பயிற்சி வேண்டாம் !




அனைவருக்கும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாததால் அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.

நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.

மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சள் நீராட்டு விழா ஏன் பெண்கள் பருவமடைந்தவுடன் கொண்டாடப்படுகிறது?

மஞ்சள் நீராட்டு விழா ஏன் பெண்கள் பருவமடைந்தவுடன் கொண்டாடப்படுகிறது?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


       யோகக் கலாச்சாரப்படி "ஆண் " என்றால் "கொடுப்பதையும் " "பெண் " என்றால் "பெறுவதையும் "குறிக்கிறது.

அதன்படி நாம் காணும் இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இறைவன் என்னும் ஆணிடமிருந்து உடல், மனம், சூழ்நிலை, சுகதுக்கம் இவற்றைப் பெறும் பெண்களேயாகும்.

                இக்கருதுகோளை அடிப்படையாகக்கொண்டே நம்வாழ்வியலையும் புரிந்துகொள்ளும்படி ஞானிகள் நம் கலாச்சார வாழ்க்கைமுறையை அமைத்துக்கொடுத்தனர்.

அதாவது பெண்கள் ஒரு குடும்பத்தில் தாய், தந்தைக்கு மகளாக பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்து பூப்படைந்து பருவமெய்திய பின்னரே எதிர்பாலினமான ஆண்கள் மீது கவனம் திரும்பி பல உருவ மாறுதல்களையும், குணமாறுதல்களையும் அடைந்து காதல் திருமணமோ சம்பிரதாய திருமணமோ செய்து கொண்டு அதுவரை தான் வளர்ந்த, பிறந்த வீட்டைவிட்டு புகுந்த வீடுசென்று தன் எல்லாவற்றையும் புகுந்தவீட்டிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு பெரும் தியாக வாழ்வை வாழ்கிறாள்.

                                            அவ்வாறே மனித ஜீவாத்மாக்கள்  என்ற பெண்கள் சூரிய குடும்பத்தில் "சூரியன் "என்ற தந்தைக்கும் "பூமி "என்ற தாய்க்கும் மகளாக பிறக்கிறாள்.பின் உணவு சுகதுக்கம்,சூழ்நிலை, சொத்து, பணம் போன்ற விளையாட்டு சாமான்களுடன் சீரும் சிறப்புமாக தன் பிறந்தவீடாகிய பூமிப் பந்தில் சுகமாக வளர்கிறாள்.

பிறகு ஒருநாள் தகுந்த வளர்ச்சி நிலை அடைந்த பிறகு "ஞானம் "எனும் முக்கிமான பூப்பெய்தும் நிலையை அடைகிறாள்.இதையே நம் கலாச்சாரத்தில் "பூப்புனித நீராட்டு விழா " என்று அப்பெண்ணிண் முக்கிய காலகட்டமாக கொண்டாடுகிறார்கள்.

இதைக்குறிக்கவே "புண்ணியம் செய்தோருக்கு பூ உண்டு நீருண்டு " என்று குறிப்பிடுகிறார்கள்.

நம் கலாச்சாரத்தில் "மலர் " "பூ " என்ற வார்த்தைகள் இறைவனைப்பற்றிய ஞானமடைதலைக்குறிக்கிறது (பருவமடைதல்) .

                      "வாக்குண்டாம் நல்ல மனமுன்டாம் மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துய்ப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு "என்ற ஔவையார் எனும் பெண்பால் ஞானப்புலவரின் வாக்குகள் மேற்குறிப்பிட்ட கருத்தை நன்கு புலப்படுத்துவதை காணலாம்.

     இதில்வரும் வாக்குண்டாம், நல்ல மனமுன்டாம், மாமலரால் நோக்குண்டாம் என்ற வரிகளுக்கு ஞானம் எனும் மலரால் கணபதியாகிய இறைவனை அடைவதற்கு ஏற்றவாறு நல்ல மனமும் நல்ல சொற்களும் உண்டாகும், இறைவன்மேல் ஒரு காதல் நோக்கமும் உண்டாகும் என்று அர்த்தம்

. பூப்படைந்தவுடன் அதாவது "மஞ்சத்தண்ணீர் " விழாவிற்கு பின் அந்த பெண் தன் சொத்து, வீடு, பணம், இன்பதுன்பம் போன்ற விளையாட்டு சாமான்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு "மேனி நுடங்காமல் "அதாவது எந்த கர்மாவும் செய்யாமல் "சும்மா "இருந்து தன் காதலனாகிய இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.ஆனால் அந்த பெண்ணை பாசமாக வளர்த்த பூமித்தாய் பல கட்டுபாடுகளை விதிக்கிறாள்.

அனைத்து கட்டுப்பாடும் தன் நன்மைக்கே என உணர்ந்து தன் பழைய விளையாட்டு புத்தியையெல்லாம்விட்டு வெளியே அதிகம் தலைகாட்டாமல் வீட்டின் உள்ளேயே அகமுக நாட்டமாக தன் காதலனாகிய இறைவனையே சிந்தித்தவண்ணமாக வளர்கிறாள்.--நாளை தொடரும்.

       

முல்தானி மெட்டி மாஸ்க் - Multani Mitti Face Mask

முல்தானி மெட்டி மாஸ்க்  - Multani Mitti Face Mask

சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி?
multani-mitti-face-pack

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

* ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். * இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

* 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் - Girl's Inferiority Complex

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் -
Girl's Inferiority Complex

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும்.

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை…

5. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..

குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் - Kids Thumb Sucking Habit

குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள் -
Kids Thumb Sucking Habit


குழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.

 அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும். 

வெண்டைக்காய் சூப் - Ladies Finger Soup

வெண்டைக்காய் சூப் - Ladies Finger Soup


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இன்று வெண்டைக்காயில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் - 7,
உப்பு - சிறிது,
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்.

அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் - சிறிது,

செய்முறை

கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.

வெண்டைக்காய் சிப்ஸ் - Ladies Finger Chips

வெண்டைக்காய் சிப்ஸ் - Ladies Finger Chips


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.

தேவையான பொருட்கள் :

பிஞ்சு வெண்டைக்காய் - 20,
கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
கடலை மாவு - 3 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.

ராகு - கேது தோஷமும் - பரிகாரமும் - Rahu Ketu - Pariharam

ராகு - கேது தோஷமும் - பரிகாரமும் - Rahu  Ketu - Pariharam
Rahu- ketu - Pariharam

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் அந்த தோஷத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ராகு தோஷமும்.. பரிகாரமும்..

* ராகு 2-ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.

* ராகு 4-ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.

* ராகு 7-ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.

* கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

* அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்பக் கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.

* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.

கேது தோஷமும்.. பரிகாரமும்..

* திருமணத் தடையை ஏற்படுத்துவார்.

* குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.

* பழிச்சொல்லுக்கு ஆளாக்குவார்.

* கேது 12-ல் இருந்தால் மோட்சம் தருவார்.

* விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

* காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். 

கிரகங்களாக மாறிய ராகு - கேது வரலாறு - Rahu-Ketu-History

கிரகங்களாக மாறிய ராகு - கேது வரலாறு - Rahu-Ketu-History
Rahu-Ketu-History.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அமிர்தம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது சில பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அதில் காமதேனு என்ற பசு, உச்சை சிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர்களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார். திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார்.

இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர். அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தைக் காத்து அருளும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, ‘நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்’ என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.

அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள். பின்னர், ‘முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?’ என்றாள்.

அசுரர்கள் அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம் என்றனர்.

அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது. மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களைப் போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். அவனைக் கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.

அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான் சுவர்பானு. தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதினான். ஆனால் அவனைக் கவனித்த சூரியனும் சந்திரனும் அவன் ஒரு அசுரன் என்பதை மோகினிக்கு உணர்த்தினர்.

இதையறிந்த மோகினி, அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள். உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. மேலும் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன.

அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்த மோகினிக்கு, சுவர்பானு உருமாறி வந்த காரணம் கிடைத்து விட்டது. அதைச் சுட்டிக் காட்டி அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க மறுத்து விட்டாள். இதனால் சுவர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களின் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான்.

பிரம்மதேவரோ, ‘நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு ‘ராகு’ என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு ‘கேது’ என்றும் பெயர் அமையும்’ என்றார் பிரம்மதேவர்.

இதையடுத்து பிரம்மனிடம் மேலும் சில வேண்டுதலை வைத்தான் சுவர்பானு. ‘சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்’ என்றான் சுவர்பானு.

பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து ‘நவக்கிரக பரிபாலனத்தில் இணையும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்’ என்று பிரம்மன் அருள்புரிந்தார்.

அப்போது ராகு-கேதுவின் முன்பாக மகாவிஷ்ணு தோன்றினார். அவர் பிரம்மனிடம், ‘ராகுவையும், கேதுவையும் உடனடியாக நவக்கிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் அசுரன் ஒருவனை அப்படி ஈடுபடுத்துவது சரிவராது. அது அசுரர்களின் பலத்தை அதிகரிக்கும். கடைசி அசுரனான ராவணன் அழியும் வரை, கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகு மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலமாக கற்றுணர்ந்து கொள்ளட்டும். ராவணன் அழிவுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ராகு ஞானகாரகனாகவும், கேது மோட்சகாரகனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சத்தை பெற அனுக்கிரகம் செய்யட்டும்’ என்றார்.

அதன்படியே ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு.

அஷ்ட மகாலட்சுமி ஸ்லோகம் - Ashta Maha Lakshmi Slokas

அஷ்ட மகாலட்சுமி ஸ்லோகம் - Ashta Maha Lakshmi Slokas

காரியங்களை நிறைவேற்றும் மகாலட்சுமி ஸ்லோகம்
maha-lakshmi-slokas


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும்.

நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.

1. தனலட்சுமி

பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!

2. ஆதிலட்சுமி

சோதிமிக வுடையாள் சோம்பலற்ற மனமுடையாள்
தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார்மிகத்தாள்
பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள்
ஆதியிலும் ஆதியனே ஆதித்திரு போற்றியம்மா!

3. தான்யலட்சுமி

எண்கரத்தின ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே
பண்புடைய பகவதியே பலக்கதைகள் பெற்றவளே
கண்படைத்த பயனாகக் களிப்படைய வந்தவளே
மண் செழிக்கத் தானிய நல் மணிதந்தாய போற்றியம்மா!

4. வீரலட்சுமி

சூலமொரு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள்
காலனவன் கால்நடுங்கு கதிர் ஒளியின் சக்கரத்தாள்
நீலத்திரை அமுதத்தாள் நீங்கா நற்புகழுடையாள்
மாலவனார் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா!

5. கஜலட்சுமி

தடாகத் தாமரையாள் தண்மைமிகு தவவடிவாள்
அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள்
விடாநற் றனமழையாள் விளங் கானைத் துடியடியாள்
படாகக் கரியிவர்வாள் பண்ணடிகள் போற்றியம்மா

6. சந்தான லட்சுமி

அன்புடையாள் அறுகரத்தாள் அன்னையிலும் அன்னையவள்
இன்புடையான் கேடகத்தான் இடர்நீக்கு வாளுடையாள்
மன்புகழின்மலர்க்கதர்தே மகவுடனே அமுதுடையாள்
சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா

7. விஜய லட்சுமி

வாளுடன் சாரங்கம் வார்புகழின் சுதர்சனமும்
ஆளுடைய கேடயமும் ஆண்டாருளும் எண்கரத்தி
நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தாமணித்த
தான் மலரும் தனிவெற்றித் தாயே நீபோற்றியம்மா

8. ஐஸ்வர்ய லட்சுமி

நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள்
நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா

பாமா ருக்மணி போட்டி

பாமா ருக்மணி போட்டி
krishna-bhama-rukmani

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள். ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

அப்படி நடந்த நிகழ்ச்சி களில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகார மும் ஒன்றாகும். ஒரு முறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத் திற்கு சத்யபாமாவுடன் சென்றான். இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான். ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத் தவில்லை.

அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான். நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, “நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய். அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான். நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார்.

ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்க வில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள்.

உடனே கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேண்டும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்பினான். ஆனால் இந்திரனோ, பாரிஜாத மரத்தை தர முடியாது என்று மறுத்து விட்டான். அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.

ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.

வெள்ளிக்கிழமை தொடங்க வேண்டிய சந்தோஷி மாதா விரதம்

வெள்ளிக்கிழமை தொடங்க வேண்டிய சந்தோஷி மாதா விரதம்
santoshi-mata-viratham


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது. இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும்.

சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும்.

சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த   கடலையும், வெல்லமுமே ஆகும். விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். சந்தோஷிமாதா படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய   வேண்டும். படத்தின் முன் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.

கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த   கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர   பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும்.

கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த விரதத்தில் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது.

இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் அபசாரம் ஆகிவிடும்.

கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு

கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
krishna-janmashtami

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த உணர்த்தும் ஆன்மிக நிகழ்ச்சியை விரிவாக பார்க்கலாம்.

ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார். அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர். தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள்.

பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தியங்களை எல்லாம் ஏற்று அமுது செய்து அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, ‘கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அழித்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டான்.

இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன. இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின.

பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்படுவதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘இந்த நிலைக்கு இந்திரனே காரணம். ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்‘ என்று மலையை பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார். இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளித்தார். அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான். மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான். மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தவன் தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.

சித்தர் அகத்தியர் - ரகசிய மோட்ச தீப வழிபாடு

சித்தர் அகத்தியர் - ரகசிய மோட்ச தீப வழிபாடு


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.

பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.

தேவையானவை:-
*******************

வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21

செய்யும் முறை:-
*******************

எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும்.

பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும்.

நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).

இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும்.

இது கட்டாயம்.
****************

ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும்.

உடையாத நீளமான நகங்கள் (Long Nails) வேண்டுமா?

உடையாத நீளமான நகங்கள் (Long Nails) வேண்டுமா?
simple-steps-you-need-to-stretch-long-nails


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும்.

கால் விரல்களில் சிலருக்கு சொத்தை ஏற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையானவை :

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்
லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் - சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.

குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா?

குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறா?
women-wear-postpartum-belt

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, பெல்ட் போடுவார்கள். குழந்தை பிறந்ததும் பெல்ட் போடுவது தவறானது.

கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை… உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவடையும். குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.

இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும்கூட சொல்கிறார்கள். பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடுவதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது. தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப்படியே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.

குழந்தை சரும நோய்கள் - Child Skin Problem

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சரும நோய்கள்
common-children-skin-problems


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகளை பார்க்கலாம்.

குழந்தை தோலின் இந்த பலவீனமான தன்மை காரணமாக, பல்வேறு வகையான தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த நோய்களை பற்றி தெரிந்துகொள்வது சிறந்தது. எனவே அந்த நோய்களை பற்றியும் குழந்தைக்கு அவை வந்தால் செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும் நோயின் தீவிரத்தையும், அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமெனவும் அறிவீர்கள். பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 7 சரும பிரச்சனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேர்க்குரு:

இது முகம், கழுத்து, பின்புறம், அல்லது அடிவயிற்றில் அதிகமாக காணப்படும். இது மில்லியாரியா என்றும் அழைக்கப்படுகிறது, சிறிய சிவப்பு புடைப்புகள் வடிவத்தில் இது காட்சியளிக்கும். சூடான வானிலை அல்லது சூடான ஆடைகள் போன்ற பல்வேறு காரணங்களாலும் உங்கள் குழந்தையின் உடல் சூடு காரணமாகவும் இது ஏற்படுகிறது. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது உங்கள் குழந்தையை வெப்பத்திலிருந்து வெளியேற்றுவது அல்லது உங்கள் குழந்தையின் உடலுக்கு ஒட்டாத சில தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும். இது வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.

குழந்தை முகப்பரு:

இந்த சிறிய முகப்பருக்கள் அதிகளவு எரிச்சலூட்டும் என்று யார் அறிவார்கள்? இது நீங்கள் நினைப்பதை விட சாதாரணமானது. இது பொதுவாக சிறிய பருக்கள் அல்லது வெள்ளை நிறத்தில், உங்கள் குழந்தையின் முகம், கழுத்து மற்றும் கன்னத்தில் ஏற்படும். இவற்றை அவற்றின் ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்தப்பட வேண்டும், முடிந்தளவு இரசாயனம் கலக்காத குணப்படுத்த கூடிய எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.

அம்மை:

தடுப்பூசி போட்டாலும் உங்கள் குழந்தைக்கு அம்மைநோய் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பருவத்தில் இது வருவது சாதாரணம் தான். அதுமட்டுமல்லாமல் இதனை மருத்துவரீதியாக எளிதில் குணப்படுத்தலாம். அம்மை நோய் பொதுவாக சிவப்பு கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் வடிவில் வெளிப்படுகிறது. இது காய்ச்சல், பசியின்மை, குமட்டல், மற்றும் தசை வலிகள் ஆகியவற்றால் கூட ஏற்படலாம். இது ஒரு தொற்றுநோயாகும். ஒருவருக்கு ஏற்கனவே அம்மை வந்து குணமாகி இருந்தால் மீண்டும் அம்மை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எக்ஸிமா:

எக்ஸிமா என்பது தோலின் சில பகுதிகளில் மட்டும் அரிப்பு, கொப்புளங்கள், இரத்த கசிவு போன்றவை ஏற்படும் நிலையாகும். இது கைகள், முகம், கழுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் ஏற்படலாம். இது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே ஏற்படலாம் மற்றும் சூடான வானிலை, குளிர் காலநிலை, சில சோப்புகள், சில துணிகள், போன்ற பல காரணிகள் இது ஏற்பட காரணமாகின்றன. இதை குணப்படுத்துவதற்கு ஈரத்துணியை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும், பின் தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை பயன்படுத்தலாம்.

குளிர் புண்கள்:

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர் புண்கள் மிகவும் பொதுவானவை. இவை வாய்வழி பகுதியில் கொப்புளங்கள் வடிவில் உருவாகின்றன, அவை பின்னர் வலுவான புண்களாக மாறும். இது வீங்கிய ஈறுகளில் தொடங்கி வாயின் அனைத்து பகுதிகளையும் தாக்கும். இதனால் வீக்கம் ஏற்படுவதுடன் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த புண்கள் 5-10 நாட்கள் வரை நீடிக்கும். பின்னர் அவை மறைய தொடங்கும். இதனால் பசியின்மை, தாகமின்மை ஏற்படலாம், ஆனால் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கை, கால் மற்றும் வாய் நோய்

இந்த நோய் கொப்புளங்கள், தொண்டை புண், மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பெயரில் குறிப்பிடுவதுபோல், கொப்புளங்கள் உடலின் கை, கால் மற்றும் வாய்க்குரிய பகுதிகளில் உடைந்து போகின்றன. மேலும் இவை குழந்தைகளின் கீழ்புறத்தை நோக்கி பரவுகின்றன. இந்த புண் வந்தால் சாப்பிடுவதும், குடிப்பதும் மிகவும் சிரமமாகிவிடும். குழந்தைகள் மருத்துவரை விரைவில் அணுகி சரியான மருந்துகளை உபயோகியுங்கள், குழந்தையின் உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

விழி வெண்படல அழற்சி:

குழந்தைகளுக்கு பெருமளவில் ஏற்படும் நோய் இதுவாகும். இது பாக்டீரியா, ஒவ்வாமை, அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும்  நோய்த்தொற்று ஆகும். இதனால் கண்ணீரில் இளஞ்சிவப்பு நிற ஒட்டும் தன்மை கொண்ட நீர் வெளியேறும். இதனால் கண்கள் சிவப்பாகவும் விழித்திரை மஞ்சள் நிறத்திலும் மாறும். இந்த தொற்றுநோயிலிருந்து குழந்தையை பாதுகாக்க விரைவில் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.