பன்னீர் சுக்கா செய்வது எப்படி?

பன்னீர் சுக்கா செய்வது எப்படி?

how-to-make-paneer-sukka

சூப்பரான பன்னீர் சுக்கா செய்வது எப்படி?



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

SHARE MARKET TRAINING

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 



புலாவ், நாண், சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


பன்னீர் - 300 கிராம்


 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - அரை தேக்கரண்டி

கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

நெய் - 2 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கு

எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி


செய்முறை :


பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.


கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும்.


இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.


சூப்பரான பன்னீர் சுக்கா ரெடி.


பன்னீர் பீட்சா - Paneer Pizza. வீட்டிலேயே செய்யலாம்

 பன்னீர் பீட்சா - Paneer Pizza. வீட்டிலேயே செய்யலாம்
paneer-pizza.

 பன்னீர் பீட்சா - Paneer Pizza. வீட்டிலேயே செய்யலாம்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு பீட்சா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் வைத்து பீட்சா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகுத் தூள் - தேவையான அளவு

 காய்ந்த மிளகாய் - 4
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
சீஸ் - 50 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பன்னீர் - ஒரு பாக்கெட்
பீட்சா பேஸ் - ஒன்று



செய்முறை :

வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்).

பக்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும். பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

அதன் மீது சீஸைத் தூவவும். கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்களை கீழே பார்க்கலாம்.

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

முதல்படை வீடு - திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :

எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம்படை வீடு - மதுரை :

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படை வீடு - பிள்ளையார்பட்டி :

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு - திருநாரையூர் :

திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

அண்ணாமலையார் வரலாறு - விநாயகரின் முதல் படை வீடு

அண்ணாமலையார் வரலாறு -  விநாயகரின் முதல் படை வீடு
thiruvannamalai-arunachaleswarar-temple-history


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை சக்தி தலமாகவும் புகழ்கிறார்கள்.

தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது.

பொதுவாக முருகப்பெருமானுக்குதான் அறுபடை வீடுகள் இருப்பதை பார்த்துள்ளோம். விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பது சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. விநாயகரின் முதல் படை வீடான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் விநாயகர் சிலைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு விநாயகர் திருவண்ணாமலை தலத்தில் நிறைந்துள்ளார்.

திருவண்ணாமலை ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தில் செல்வ கணபதி, கம்பத்து இளையனார் சந்நிதிக்குள் இருக்கும் ஸ்ரீகணபதி, சர்வசக்தி விநாயகர் சன்னதி, கோபுரத்து இளையனார் சன்னதிக்குள் இருக்கும் ஸ்ரீவிநாயகர், கல்யாணசுந்தரேசுவரர் சன்னதிக்குள் இருக்கும் விநாயகர், உச்சிபிள்ளையார், வன்னிமர விநாயகர், தனி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் கும்பாபிஷேக விநாயகர் என 8 விநாயகர்களை காணலாம்.

4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீகணபதி மற்றும் கிளிக்கோபுரம் அருகே யானைதிறைக்கொண்ட விநாயகர் என 2 விநாயகர்கள் உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே பொட்டுகட்டும் விநாயகர், மகிழமரத்தடி விநாயகர், கல்யாண மண்டப விநாயகர், பிடாரிகோவில் விநாயகர், கொடிமரம் அருகே சம்பந்த விநாயகர், கொடிமர மண்டபத்தில் ஸ்ரீஉண்டி விநாயகர் என 6 விநாயகர்கள் உள்ளனர்.

2-ம் பிரகாரத்தில் நாயன்மார்கள் வீற்றிருக்கும் வரிசையில் கணபதி, சேத்திரகணபதி, விநாயகர், விநாயகர் என 4 விநாயகர்கள் இருக்கிறார்கள். கருவறையை சுற்றி முதல் பிரகாரத்தில் கோஷ்டத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். உண்ணாமலை அம்மன் சன்னதி வாசலில் விஜயராகவ விநாயகர் உள்ளார். அடுத்து மண்டபத்தில் விநாயகர், விநாயகர், ஸ்ரீகணபதி, விநாயகர், விநாயகர், விநாயகர், விநாயகர் ஆகிய 7 பேர் உள்ளனர். அம்மன் கருவறை கோஷ்டத்தில் தனங்களுடன் ஸ்ரீகணேவி காணப்படுகிறார்.

இப்படி திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 30 விநாயகர்கள் இருக்கிறார்கள். மிகவும் சிறப்பு பெற்ற செல்வகணபதி, யானை திறைக்கொண்ட விநாயகர், சேத்திர விநாயகர், சம்பந்த விநாயகர் போன்ற விநாயகர்களின் சிறப்புகளை மட்டும் பார்க்கலாம்.

திருவண்ணாமலை கோவிலில் 30 விநாயகர்கள் இருந்தாலும் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைக்குரிய விநாயகராக கருதப்படுபவர் ராஜகோபுரத்தில் இருக்கும் செல்வகணபதி ஆவார். பொதுவாக ஆலயங்களில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் எந்த சன்னதியும் இருப்பதில்லை. ஆனால் திருவண்ணாமலை ராஜகோபுர நுழைவு வாயிலில் செல்வகணபதி வீற்றிருக்கிறார். இது திருவண்ணாமலை ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று என ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் போலீசார் பக்தர்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. அந்த பகுதியை கடந்ததும் இடது பக்கத்தில் பார்த்தால் செல்வகணபதியை காணலாம். இவர்தான் முதல் படைக்குரிய விநாயகர் ஆவார்.

இந்த விநாயகர் அவ்வையாரால் பாடல்பெற்ற சிறப்புக்குரியவர். இந்த விநாயகர் மீது அவ்வையார் பாடிய பாடல்.....

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துக்குள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

இந்த பாடல் விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் அவ்வையார் ஒரு உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார். நாம் முக்தி பாதைக்கு செல்ல வேண்டுமானால் வினைகளை அகற்ற வேண்டும். அந்த வினைகளை தீர்க்கும் முழு முதற்கடவுளாக செல்வகணபதி திகழ்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை-தீமை போன்றவற்றால் உருவாகும் வினைகளும் நீங்கும்.

பிறவி எடுக்கக் காரணமாக உள்ள அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் விலகும். சகல வினைகளும் தீர்ந்து போகும். ஞானம் கைமேல் கனியாக வரும் என்று அவ்வையார் கூறியுள்ளார். அதனால்தான் இந்த விநாயகரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடு விநாயகராக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

இவரை வழிபட்டு தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆத்ம ஞானம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலைக்கு முக்தியை தேடி வருபவர்களுக்கு அதற்கான பாதையை இந்த விநாயகர் தான் அமைத்து கொடுக்கிறார் என்பது ஐதீகம். எனவே இந்த செல்வ கணபதி மிக மிக முக்கியமானவர். ஆனால் திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் இவரது சிறப்பை அறியாமல் உணராமல் உள்ளது வேதனையாகும்.

நமது முன்னோர்கள் இந்த கணபதியை சிறப்பு செய்து இருந்தாலும் திருவண்ணாமலை ஆலய நிர்வாகம் இந்த விநாயகருக்கு ஏனோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருவண்ணாமலை தலத்தின் அதிகாரப்பூர்வ பிரதானமான விநாயகர் என்ற அந்தஸ்து சம்பந்த விநாயகருக்கே வழங்கப்பட்டுள்ளது. சம்பந்த விநாயகர், கொடி மரம் அருகே தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

மூலிகை பொருட்களால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிவந்த நிறத்தில் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. 1262-ம் ஆண்டு வீரவல்லாள மன்னன் காலத்து கல்வெட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சம்பந்தாண்டார் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர் இந்த விநாயகர் சன்னதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பெயரால் சம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். பலரையும் கொடுமை செய்தான்.

இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். அதுபோல திருவண்ணாமலை தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் இந்த சம்பந்த விநாயகரை பூஜித்த பிறகுதான் விழா தொடங்கும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரவு 7.30 மணிக்கு விநாயகர் புறப்பாடு இந்த சன்னதியில் இருந்துதான் புறப்படும். இந்த சன்னதி அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி முன்பு நின்றுதான் அந்த கால மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு உள்ளது.

திருவண்ணாமலை யில் அண்ணாமலையார் முன்பு நின்று எந்த அரசரும் பதவி ஏற்றது இல்லை. அதுபோல இந்த தலத்தில் பூரண கும்ப மரியாதையோ, பரிவட்டம் கட்டுவதோ நல்லதல்ல என்ற கருத்து உள்ளது. காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான பயம் இருப்பதால் சம்பந்த விநாயகர் முன்பு வந்து அனைத்தையும் செய்து கொள்வார்கள்.

அந்த காலத்தில் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் சம்பந்த விநாயகர் முன்புதான் சத்தியம் வாங்குவார்களாம். இதனால்தான் இன்றளவும் சம்பந்த விநாயகர் தனித்துவத்துடன் திகழ்கிறார். இவரை போலவே யானைதிறைக் கொண்ட விநாயகருக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. கிளிக்கோபுரம் அருகே சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் இந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

சிவகங்கை தீர்த்தம் அருகில் உள்ள சர்வசக்தி விநாயகருக்கும் தனி சிறப்பு உள்ளது. இவரை நகரத்தார்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆலயத்தின் 2-ம் பிரகாரத்தில் மேற்கு திசையில் தென்மேற்கு மூலையில் உள்ள சேத்திர விநாயகரும் குறிப்பிடத்தக்கவர். கண்டராதித்த சோழ மன்னனின் மனைவி செம்பியன் மாதேவியால் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டார்.

ஒரு தடவை கும்பாபிஷேகத்தின்போது அண்ணாமலையாருக்கு அடுத்தப்படியாக இந்த விநாயகருக்குதான் முதலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விநாயகர் பலகை கல்லில் செய்யப்பட்டவர் ஆவார். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே உள்ள பொட்டுக்கட்டும் விநாயகரும் வரலாற்று சிறப்புடையவர். அந்த காலத்தில் இவர் முன்னிலையில் தேவதாசிகள் தங்களை கோவில் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொள்வார்கள். இந்த அர்ப்பணிப்புக்கு பொட்டுக்கட்டுதல் என்று பெயர். எனவே இந்த விநாயகருக்கு பொட்டுக்கட்டும் விநாயகர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மட்டுமின்றி ஊருக்குள்ளேயும், மலை சுற்றும் பாதையிலும் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். ஊருக்குள் தேரடி வீதிக்கும் கொசமட தெருவுக்கும் இடையே ரேடியோகிரவுண்டு பகுதியில் முத்தம்மை விநாயகர் உள்ளார். அருணகிரிநாதர் தாயார் முத்தம்மை இந்த விநாயகரை வணங்கியதால் இதற்கு முத்தம்மை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

அதுபோல கிரிவல பாதையில் தலைதிருக தனம் கொடுக்கும் விநாயகர், இடுக்கு பிள்ளையார் என்று நிறைய விநாயகர்கள் இருக்கிறார்கள். இப்படி திருவண்ணாமலை தலத்தின் பிரிக்க முடியாத அம்சமாக விநாயகர் திகழ்கிறார். அவரைப் போன்றே திருவண்ணாமலை முழுக்க லிங்கங்களும் நிறைந்துள்ளன.  

புரட்டாசி மாத விரத வழிபாடு

புரட்டாசி மாத விரத வழிபாடு
purattasi-viratham.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.

ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.


பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

திருநாங்கூர் கருட சேவை

திருநாங்கூர் கருட சேவை
thirunangur-garuda-sevai


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.

108 வைணவ திவ்யதேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் 5 திவ்யதேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்யதேசம் என்று வழங்குவர். அவையாவன:-

திருக்காவளம்பாடி

 திருஅரிமேயவிண்ணகரம்
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய்கோவில்
திருமணி மாடக்கோவில்
திருவைகுந்த விண்ணகரம்

- இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.

திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி

ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய் வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.

கருட வழிபாட்டு நாள்

கருட வழிபாட்டு நாள்
garuda-worship-date


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். பெருமாள் கோவில்களில் கருவறை எதிரே கைகூப்பிய நிலையில் இவரைக் காணலாம். வளர்பிறை பஞ்சமி திதி இவரை வழிபட நல்ல நாள்.

பாம்பு கனவில் வந்தாலோ அல்லது கண்ணில் பட்டாலோ கருடனை வழிபட்டு பரிகாரம் தேடலாம். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். அநேக கோவில்களில் பெருமாள் எதிரே இருக்கும் கருடாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் மற்றும் ஆண்டாளின் அருகில் இருக்கிறார்.

ஆதிமூலமே, என்று அழைத்த கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைத் தீர்க்க பெருமாள் கருடன் மீது விரைந்து வந்து அருள் செய்தார். பக்தர்களின் துயர் போக்கிட எப்போதும் விரித்த சிறகுகளுடன் கருடாழ்வார் வைகுண்டத்தில் காத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

சாளக்கிராமம்

சாளக்கிராமம்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் #FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் #கல் அச்சு.

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே காண்போம்:

1.சாளக்ராமம்  தோன்றிய கதை:—

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள்.

அங்கு #விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார்.

பெண்ணே நீ #கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

இந்தக்தையின் #உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

#வீடுகளில் வைக்கும் முறை:

பொதுவாக, வீடுகளில் வைத்து வழி படுவதற்குரிய சாளக்கிராம கற்களை, வழிபாட்டுக்கு தகுந்த பெரியோர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதியாகும்.

சாளக்கிராமம் பற்றிய தனித்தன்மைகளை அறிந்தவர்களிடம், அவற்றின் வண்ணம், ரேகைகள், குறிகள் ஆகியவை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகு, அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது என்பதே பல நன்மைகளை தரக்கூடியதாகும்.

சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை #சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல #செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம்.

சாளக்கிராம பூஜை செய்வது எளிதானது. குளித்து முடித்து, #தூய ஆடை அணிந்து பக்தியுடன் மரப்பெட்டியில் வைக்கப்பட்ட சாளக்கிராமத்தை எடுத்து, சிறிய அளவில் அபிஷேகம் செய்து, ஊதுபத்தி காட்டி, இனிப்பை நைவேத்தியமாக படைத்து, நமக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

#துளசி இலை சமர்ப்பிக்கலாம்.

வெளியூர் செல்ல வேண்டிய சமயங்களில் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி, அதன்மீது சாளக்கிராமத்தை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள்.

அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம்.

அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.

லட்சுமி நாராயண #சாளக்கிராமம்: ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது

லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது

ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது

வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது

ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது

தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது

ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது

ரணராக சாளக்கிராமம்: விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது

ஆதிசேட சாளக்கிராமம்: பதினான்கு சக்கரங்களும் கொண்டது

மதுசூதன சாளக்கிராமம்: சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்

சுதர்சன சாளக்கிராமம்: ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது

ஹயக்ரீவ சாளக்கிராமம்: மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது

வாசுதேவ சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது

பிர்த்யும்ன சாளக்கிராமம்: சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது

அநிருத்த சாளக்கிராமம்: விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது

சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .

தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள்.

தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள்.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

7 தலைமுறைகள் !

ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் .

சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .

அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .

தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்;

பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்;

முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் --

ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .

நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்;

ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்;

ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .

எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன .

எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .

நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் --

இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு

பெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு
Dry-eye-damage-to-women


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.

* கண் எரிச்சல்,
* கண்ணில் உறுத்துதல்,
* கண் இமைகள் கனத்து இருத்தல்,

 * கண்களில் சோர்வு,
* கண் சிவத்தல்,
* கண் வலி,
* அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
* கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.

இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,

* லென்ஸ் அணிபவர்கள்,
* ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
* சர்க்கரை நோய்,
* தைராய்டு குறைபாடு,
* வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
* சில வகை மருந்துகள்,
* முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும்.  வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

* அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
* கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
* தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
* காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
* வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
* புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
* புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
* கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
* கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
* கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

(ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.

* பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.

* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.

* ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.

கர்ப்ப காலத்தில் வரும் மஞ்சள் காமாலை - காரணமும் - தீர்வும்

கர்ப்ப காலத்தில் வரும் மஞ்சள் காமாலை - காரணமும், தீர்வும்
jaundice-during-pregnancy


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

கர்ப்ப காலங்களில் உணவின் மேல் நாட்டம் கொண்டு அதிகம் சாப்பிடுவதால் செரியாமை, ஏற்பட்டு அதானால் பித்த நீர் மிகுந்து, காமாலை நோய் தோன்றுகிறது.

அதிக தூக்கமின்மை, வயிற்றில் புண், இரத்த அழுத்தம், அதிகம் வெயிலில் அலைந்து திரிவது, வேளாவேளைக்கு உணவு அருந்தாமை, மற்றும் பலவித மனக் கவலை போன்றவற்றாலும், முக்குற்றங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று நிலைகளில் பித்த நீரானது அதிகப்படும்போது அது இரத்தத்தில் கலந்து காமாலை நோயாக மாறுகிறது.

உஷ்ணச்சூடு இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது. மேலும் மலச்சிக்கல், மன அமைதியின்மை, வீண்பயம், திடீர் உணர்ச்சிவசப்படுதல், கோபம் இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோய் உண்டாவதற்கு வாய்ப்பாகிறது.


அதோடு கர்ப்ப காலங்களில் உணவின் மேல் நாட்டம் கொண்டு அதிகம் சாப்பிடுவதால் செரியாமை, ஏற்பட்டு அதானால் பித்த நீர் மிகுந்து, காமாலை நோய் தோன்றுகிறது. இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் பித்தம் அதிகரிப்பதோடு இரத்த அணுக்களும் குறைந்து உடலை மஞ்சள் காமாலை நோய் தொற்றுகிறது.



மேற்கண்ட காரணங்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் ஏற்பட்டு தாயையும், சேயையும் பாதிக்கிறது. பித்த நீர் மிகுவதற்கு முக்கியக் காரணம் ஈரல்தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈரல் பாதிப்புற்றால் குழந்தைகள் நலமின்றி பிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஈரல் பாதிப்பை ஈரல் உணக்கநோய் என்று கூறுவர்.

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கு ஈரலைப் பலப்படுத்துவதற்கான மருந்துகள் உட்கொள்ளும் போது மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கிறது. பிற மருத்துவ முறைகளிலும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் இல்லாததால் ஈரல் உணக்க நோயை குணப்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ஈரலைப் பலப்படுத்தினாலே மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பழ வகைகளை சாறு எடுத்து அதிகமாக உட்கொள்வது நல்லது. அதிக காரம், புளிப்பு, இனிப்பு போன்றவற்றை தவிர்த்து மிதமான காரம், புளிப்பு, இனிப்பு கலந்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஓய்வு அவசியம்.

மெதுவான நடைப்பயிற்சி, அதனுடன் முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள் செய்து வந்தால், காமாலை நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றுக்கொள்ளலாம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து பித்தநீர் அதிகரிப்பைத் தடுத்துவிடலாம். 

குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?

குழந்தைகள் கோபத்தை குறைப்பது எப்படி?
children-anger-how-to-control.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? அப்ப கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...

உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...

* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.


குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...

* பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.

* விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.

* சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

* நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.

* வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.

* மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும். 

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்

1 வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகள் தருவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அத்தகைய உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குழந்தைகள் பிறந்து முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம்.

குழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம்.


1 வயது வரை குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…

* குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது. பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

* குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

* தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.

* இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.

* காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். 

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை

குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை
children-Pranks-parents-how-to-handle.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. குழந்தைகளின் சேட்டையை இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.

குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ…

இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.


குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

What-happens-to-vitamin-D-deficiency



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

SHARE MARKET TRAINING

Whatapp Number : 91-9094047040 / 91-9841986753

    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம். வைட்டமின் டி குறைபாட்டால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்.


வெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் என்றால் எல்லோருக்கும் தெரியும் அது ‘வைட்டமின் டி’ என்று. எலும்பு உறுதி, மூட்டுவலி என எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மட்டும் அல்ல, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம்.


இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இதனால், உடலில் சேமித்துவைக்கப்பட்டு, தேவையானபோது பயன்படுத்தப்படும். மற்ற வைட்டமின்களைவிட ‘டி’ மிகவும் ஸ்பெஷலானது. இது ஒரு ப்ரோ ஹார்மோனாகவும் செயல்படுகிறது. பல்வேறு நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களில் வைட்டமின் டி குறைபாடும் ஒன்றாக இருக்குமா என உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.



நம் உடலில் உள்ள எலும்புகளில் பல கோடி புது செல்கள் தினமும் அழிந்து,  புது செல்கள் பிறக்கின்றன. குழந்தைப் பருவத்தில், சிறியதாக இருக்கும் எலும்புகள், வயது அதிகரிக்கும்போது பெரிதாகிறது. எலும்பின் இந்த வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியத்தை எலும்புகள் கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி இல்லை என்றால், கால்சியம் கிரகிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், எலும்புகள் பலவீனம் அடையும். வைட்டமின் டி உடலில் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து அதிக அளவிலும், சில வகை உணவில் இருந்து சிறிதளவும் கிடைக்கிறது.


வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?


எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து கிடைக்காததால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், எலும்பு முறையற்ற வகையில் வளரும். சில இடங்களில், விநோதமாக நீட்டிக்கொண்டும், சில இடங்களில் சுருங்கியும் காணப்படலாம்.


குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் இந்த நோய்க்கு ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர்.


பெரியவர்களுக்கு, எலும்புகள் முறையில்லாமல் வளரும் நோயான ஆஸ்டியோமலேசியா, எலும்பு அடர்த்திக் குறைதல் நோயான ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய்கள் வரும். எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் வர வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.


ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும் ஹார்மோன் இன்சுலின். இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால், இன்சுலின் சுரப்பில் பிரச்சனை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.


அண்மை - ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

அதிகாலையில் எழுவது எப்படி?

அதிகாலையில் எழுவது எப்படி?
how-to-rise-early-morning.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான முடிவை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான்.

நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடும்.


அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு, அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்பி விடுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல், எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திருக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது, அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

தினமும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும்.

அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் உடல் இயக்கம் பாதிக்கப்படும். இதனால் மீண்டும் நீங்கள் உங்கள் அலாரத்தை தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும்.

அலாரம்தான் ஒரே வழி என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ். பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல் இருக்கக் கூடாது. அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழி.

இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திருக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கமின்றி, காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம். எனவே, காலையில் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.

சோர்வுக்கான காரணங்களும் - தீர்வும் - Reasons-for-fatigue-solution

சோர்வுக்கான காரணங்களும் - தீர்வும் - Reasons-for-fatigue-solution

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

எப்பவும் சோர்வா இருக்கு என்று நினைக்கிறீங்களா? கீழ்கண்ட விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கிறீங்களா என்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

புகை பிடிப்பவராக இருந்தால் உடனடியாக அதனை நிறுத்துங்கள். நிறுத்திய நிமிடத்திலிருந்து அநேக நன்மைகளை உடலில் உணர்வீர்கள். என்னவோ தெரியலை. எப்பவும் சோர்வா இருக்கு என்று நினைக்கிறீங்களா? கீழ்கண்ட விஷயங்களில் நீங்கள் சரியாக இருக்கிறீங்களா என்று உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிக சர்க்கரை எடுத்துக் கொள்கின்றீர்களா?

சிலருக்கு எதற்கெடுத்தாலும் சர்க்கரை வேண்டும். அத்தோடு ஸ்வீட்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்ற பழக்கம் இருக்கும். இத்தகையோர் எப்பவுமே சோர்வாகவே இருப்பார்கள். இவர்களுக்கு சர்க்கரை, இனிப்பு பண்டங்கள் மைதா வேண்டும். இதனைச் செய்தாலே அவர்கள் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஆகிவிடுவர்.

 நீங்கள் தேவையான அளவு உடற்பயிற்சி செய்கின்றீர்களா? உடற்பயிற்சி என்ற பெயரில் சிறு பிள்ளைகள் போல் கையை காலை நீட்டுவது, வாரம் ஒரு முறை 10 நிமிடம் நடப்பது போன்றவை எல்லாம் உடற்பயிற்சி ஆகாது.

அன்றாடம் குறைந்தது 30 நிமிடங்கள் நடங்கள். யோகா செய்யுங்கள். கண்டிப்பாய் சக்தி கூடும். காலை உணவை தவிர்ப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவே இருப்பார்கள். அத்துடன் நெஞ்செரிச்சல். வயிற்றுப்புண் என பாதிப்புகள் தொடரும். மேலும் காலையில் காபி, டீ என மதியம் வரை வயிற்றில் ஆசிட் ஊற்றுவதும் உடலை வெகுவாய் பாதிக்கும். நெடுநேரம் உணவின்றி இருப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைத்துவிடும்.

முழுதானிய உணவு. புரதம்-முட்டை, பால்வகை, கொட்டை வகை உணவுகளுக்கு மாறுங்கள். சோர்வு பறந்து ஓடி விடும். நகராது ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து இருப்பது. உங்களது சக்தியினை வெகுவாய் இழக்கச் செய்யும். அசையாமல் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது இருதயத்தினை வெகுவாய் பாதிக்கும். ஒரு மணிக்கொருமுறை 3-5 நிமிடங்கள் வரை நடங்கள். உடலில் ஆக்ஸிஜன் சக்தி கூடும். சோர்வு நீங்கும்.

* அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளதா? அளவான ஓரிரு முறை காபி குடிக்கும் பழக்கம் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். மதியம் 2 மணிக்கு பிறகே காபி, டீ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதிக காபி, அடிக்கடி காபி, டீ இவை இரண்டும் உங்களை மிகவும் சோர்வாக்கி விடும்.

* மிகவும் குறைவாகவே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கண்டிப்பாய் மிகவும் சோர்வாகத்தான் இருப்பீர்கள். சிலருக்கு தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடியுங்கள் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும். இத்தகையோர் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் கண்டிப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கொரு முறை கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோர்வு நீங்கும். மேலும் உடலில் தேவையான நீர் சத்து இல்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.

* நன்கு நிமிர்ந்து அமருங்கள். கோணல் மாணலாக மடங்கி அமர்வது உடலில் சோர்வினை ஏற்படுத்தும். எனவே நிமிர்ந்து அமருங்கள்.

* ஸ்நாக்ஸ் என்ற பெயரில் அதிக சர்க்கரை, கேக், மைதா, எண்ணெயில் பொரித்தது என சாப்பிடாதீர்கள். கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை, கொட்டை வகைகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். கல்லீரலின் முக்கியத்துவம் கருதியும் அது உடலுக்கு செய்யும் நன்மைகள் கருதியும் இவற்றினை மருத்துவ உலகம் மிகவும் வலியுறுத்தி வருகின்றது.

இந்த கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது சில அறிகுறிகளை காண்பிக்கும்.

* படபடப்பு, * சரும அலர்ஜி, * எதிலும் அதிக கவனம் செலுத்த முடியாமை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். மேலும்

* எப்பொழுதும் சோர்வு, * எந்த வேலையும் செய்யமனம் இல்லாமை, * தலைவலி, * மூட்டுகளில் வலி, * தசைகளில் வலி, * அதிக வியர்வை, * கொழுப்புகளை செரிப்பதில் கடினம், * வயிற்றுவலி, * வயிற்று போக்கு, * மலச்சிக்கல், * மனச்சோர்வு, * எடைகூடுதல், * சிறிது கூட ரசாயனங்களை ஏற்க முடியாமை, * வாய்துர்நாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொழுப்பில்லாத உணவு, காய்கறி உணவு இவற்றினை எப்பொழுதுமே கடைபிடிப்பது நல்லது.

மருத்துவ உலகில் அனைத்து மருத்துவர்களும் அதிசயப்படும் ஒரு விஷயம் உள்ளது. எந்த நோயையும் விட ஆண்களும், பெண்களும் தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு அதிகம் கவலைப்படுகின்றனர். மிக அதிகமாகவும் செலவழிக்கின்றனர். முடி கொட்டுதல், தேய்தல் தலையில் சில இடங்களில் முடியின்மை இவைகளும் பல காரணங்களையே சொல்கின்றன.

* சரும பாதிப்பு, தலையில் கிருமி தாக்குதல், பொடுகு, சரும அலர்ஜி, அரிப்பு இவை முடி கொட்ட முக்கிய காரணம் ஆகின்றன.
* ஹார்மோன்கள் சீராக சுரக்காது இருப்பது.
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள் காரணம்.
* சத்துணவு இன்மை

* அதிக ஸ்ட்ரெஸ்
* பல ரசாயன கலவைகளை தலையில் உபயோகித்தல்
போன்றவையும் முடி கொட்ட முக்கிய காரணங்கள் ஆகின்றன.