பைனாபிள் புலாவ் - Pineapple Pulao.

பைனாபிள் புலாவ் - Pineapple Pulao.
குழந்தைகளுக்கு விருப்பமான பைனாபிள் புலாவ்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு கலந்த சாதமாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று பைனாபிள் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்

 அன்னாசிப் பழத் துண்டுகள் (தோல் சீவி நறுக்கியது) - 1 கப்
அன்னாசி பழச்சாறு - அரை கப்
வெங்காயம் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் - தலா அரை டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 1
முந்திரி, பாதாம் - தலா 10
எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - முக்கால் கப்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பைனாப்பிள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் அரிசியைச் சேர்த்து நன்றாகப் புரட்டுங்கள்.

உப்பு, சர்க்கரை, அன்னாசிச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடுங்கள்.

இரண்டு விசில் வந்தவுடன் இறக்கிவிடுங்கள்.

விசில் போனவுடன் நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துப் போட்டுக் கிளறுங்கள்.

வெங்காயப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

பைனாபிள் புலாவ் ரெடி.

பாசுமதி அரிசி கீர் - Basmati Rice Kheer

பாசுமதி அரிசி கீர் - Basmati Rice Kheer
சூப்பரான பாசுமதி அரிசி கீர்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பல்வேறு வகையான கீர் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசுமதி அரிசியை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
பாசுமதி அரிசி - 2 கைப்பிடி
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
பாதாம் பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை :

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியைச் சேர்த்து மீதமான தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.

பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள்.

அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்குங்கள்.

சூப்பரான பாசுமதி அரிசி கீர் ரெடி.