சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்
* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும்.
* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும். இந்த இயற்கை முறைகளை பின்பற்றி சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்யலாம்.

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!!

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!!

கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.
தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிர்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.
--------------------------------------------------------------------------
அகத்தி மருத்துவம் !!!
சோரியாஸிஸ் குணமாக:
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.
======================================================
சோரியாசிஸ் குணமாகும் !!!
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்
‪#‎சோரியாசிஸ்‬ சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமா வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.
அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.
காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கத்தாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).
அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்
சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
முன்குறிப்பு :
சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.இந்த மருந்தினை பற்றி என்னுடைய முதல் பதிவில் இதுதான் மருந்து என்று கூறி இருக்கலாம்.ஆனால் அப்படி நான் கூறபோய் இதை பார்த்து நீங்கள் இது ஒரு விளம்பர தளம் என்று நினைத்து விட கூடாது அல்லவா!.அதனால் தான் சில அடிப்படை கருத்துகளை கூறிவிட்டு கூறலாம் என்று இருந்தேன்.இப்போது என்னை நம்பி பதிவிற்கு வந்து கேட்பதால் சொல்கிறேன்.இதை நீங்களே தயாரித்து கொள்ளலாம்.
சோரியாசிஸ் குணமாக:
சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.ஏன் என்றால் ஹோமியோபதியில் அந்த நோய்க்கு சம்பந்தபட்டவர் நேரில் வரவேண்டி வரும்.அதையும் மீறி நான் அதை பற்றிய பதிவாக இட்டால் அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.
வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் நான் இருப்பாதால் இங்கு வெட்பாலை செடி கிடைக்கும் இடம் தெரியும்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.
அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.
*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.
இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.

உளவியல் ஆலோசனை - சொல்லாத காதல்

உளவியல் ஆலோசனை - சொல்லாத காதல் !!!

வாழ்க்கையின் ஓட்டமும் உறவின் இயக்கமும் நம் மனத்தின் கட்டுகளுக்குள் அடங்காதவை. எந்தக் கணத்தில் அது எந்தத் திசையில் நகரும் என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையும் உறவும் ஆழ்மன சக்திகளின் வெளிப்பாடுகள். ஆழ்மனம் நம் மேல்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஆகவே வாழ்க்கை ஓட்டமும் உறவின் இயக்கமும்கூட நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் மேல்மனம் சார்ந்தவை. அதனால் மேல்மனத்தின் எல்லைகளுக்குள் வாழ்க்கையும் உறவுகளும் அடங்குவதில்லை. நம் மேல்மனத்தைத்தான் ‘நான்’ என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். இந்த நிலை இருக்கும்வரை வாழ்க்கையும் உறவுகளும் சிக்கல் நிரம்பியிருப்பது தவிர்க்க முடியாதது. ஆழ்மனத்தைப் பற்றிய பயங்களிலிருந்து விடுபட்டு நம் ஆழ்மனமும் நாம்தான் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையும் உறவுகளும் முழுமை அடைய முடியும். அவற்றின் இலக்கணங்களும் நமக்குப் புரியவரும்.

பொறியியல் பட்டம் பெற்ற நான் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். என் நெருங்கிய உறவினரின் மகளைச் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். வருடா வருடம் ஊர்த் திருவிழாவில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியது இல்லை. அவள் தற்போது என்ன செய்கிறாள் என்ற விவரத்தை அறிய உறவினர் ஒருவரிடம் விசாரித்தேன். உடனே தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக அவன் கூறினான். அந்தப் பெண்ணைப் பற்றி இனி நான் எதையுமே விசாரிக்கக் கூடாது என்றான். அது மட்டுமல்லாமல், தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் தெரு முழுவதும் கூறியுள்ளான். இப்போது என்ன செய்வதென்று புரியாமல் நான் இருக்கிறேன். அந்தப் பெண்ணிடம் சென்று என் விருப்பத்தைத் தெரிவிக்கலாமா? இல்லை விட்டுவிடலாமா? ஒரு பெண்ணால் எனக்கும் அவனுக்கும் இடையே மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறேன். நான் மிகுந்த மனக் குழப்பத்தில் உள்ளேன்.

தொடக்கத்திலிருந்து இதுவரை எல்லாமே உங்களுக்குள்ளே மட்டும்தான் நடந்துவந்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவளைப் பார்த்துவந்திருக்கிறீர்கள். ஆனால் பேசியது இல்லை. கடைசியில்கூட அவளைப் பற்றி வேறு யாரிடமோ விசாரித்திருக்கிறீர்கள். அவர் உங்களை இன்னும் குழப்பிவிட்டிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதும் உங்களுக்குத் தெரியாது. அவளைக் காதலிப்பதாகத் தெரு முழுவதும் அவர் சொல்லியிருப்பதுகூட உண்மைதானா என்று தெரியாது. இதில் அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றிக்கூட அந்த உறவினர் சொல்வதுதான் உங்களுக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு முற்றிலும் தெரியாது. இதுதான் நிலைமை.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தப் பெண் விஷயமாக அந்த உறவினருடன் மனக்கசப்பு வந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறீர்கள். அதுவும் உங்கள் மனத்தில்தான்.

இப்படி உங்கள் வாழ்க்கையை நீங்கள் உங்கள் மனத்தில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு எந்த முடிவும் எடுக்காமல் இருங்கள். இப்போது நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது மேலும் குழப்பத்துக்குள்தான் உங்களை இட்டுச் செல்லும். முதலில் உங்கள் மனத்தில் உங்களைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் ஓரளவுக்காவது தெளிவு வரட்டும். அதன் பிறகு ஆழமாகச் சிந்தித்து முடிவெடுங்கள்.

நான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்க்கிறேன். என் பெற்றோர் எனக்குப் பார்த்து, நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் நிச்சயமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. எனவே கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறோம் அவ்வப்போது சந்திக்கவும் செய்வோம். இப்படியாக எங்கள் வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் நெருக்கமானபோதுதான் அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவந்தது. அந்த நாளுக்குப் பிறகு என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். அதன் பின்தான் அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதே எனக்குப் புரியவந்தது. பெற்றோருக்குக் கட்டுப்பட்டுத்தான் அவள் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்திருக்கிறாள். ஆனால் நான் அவளை ஆழமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து இப்போது மீண்டும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறாள். ஆனால் இப்போதும் அவளுடைய பெற்றோர்தான் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன். நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை. நான் என்ன செய்ய?

‘நான் அவளுடைய பண்பை நேசிக்கிறேன். அவளுடைய அத்தனை குணங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை இழக்க நான் தயாராக இல்லை,’ என்கிறீர்கள். உங்கள் இதயம் அவள் வேண்டும் என்று சொல்கிறது. உங்கள் மனம், அவளுக்கு உறவுகொள்ள விருப்பமில்லை என்னும் உண்மையை எதிர்கொண்டு நிற்கிறது. அவள் திருமணமே வேண்டாம் என்றுதான் நினைக்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தினால்தான் திருமணத்துக்கே சம்மதித்திருக்கிறாள். இந்த நிலையில் நீங்கள் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும்? அவளுடைய பண்புகளுக்காகவும் குணங்களுக்காகவும் அவளை ஏற்றுக்கொண்டு வாழ நீங்கள் தயாரா? எவ்வளவு நாட்கள் இந்த மாதிரி வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் உணர்ச்சிகளும் சிந்தனைப் போக்கும் எனக்குப் புரிகிறது. திருமணம் வாழ்நாள் முழுவதும் இருக்கப் போகும் உறவு. அதில் உணர்ச்சிபூர்வமான முடிவுகளுக்கு இடம் உண்டா? அவளை இழக்க நீங்கள் தயாராக இல்லை. ஆனால் இதில் அவளுடைய விருப்பம் என்ன? அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? உறவு என்பது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

இவ்வளவு விஷயங்கள் பற்றியும் நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் உணர்ச்சிகளின் அடிப்படையில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கவனத்துடன் செயல்படுங்கள்.

தலைமுடிப் பராமரிப்புக்கு சில யோசனைகள்

தலைமுடிப் பராமரிப்புக்கு சில யோசனைகள்… !

எலுமிச்சம் பழம் அளவு மருதாணி இலை விழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து, ஒரு நாள் வெயிலில் காய வைத்துவிட வேண்டும். பிறகு அடுத்த நாள் அதை நன்கு காய்ச்சி, மணல் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து எடுத்து கொண்டு தினமும் தலைக்கு தடவி வர முடி கருமை பெற்று நன்கு வளரும்.

தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு உபயோகிக்காமல் சிகைக்காய் தூள் தேய்த்துக் குளிக்க வேண்டும். முடி மினுமினுப்பாக மாறும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காக்கைக் கொல்லி விதையை அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, பேன் தொல்லை நீங்கும்.

சாமந்திப் பூவை சூட்டிக் கொள்ள தலைமுடி உதிர்வு நிற்கும். பேன், பொடுகு தொல்லையும் நீங்கும்.

30 செம்பருத்திப் பூவை எடுத்து வந்து, நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாதுகாத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி வர, முடி நன்கு வளரும்.

1 கப் புளித்த தயிரில் நான்கு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர, முடி நன்கு செழித்து வளரும். மூன்று நாள்களுக்கு ஒருமுறை என்று நான்கு நாள்கள் குளித்தால் போதுமானது.

அதிமதுரப் பொடியைப் பாலில் குழைத்துக் கொதிக்க வைத்து நன்றாய் தளதள என்று கொதித்ததும் இறக்கி ஆற வைத்து இளம் சூட்டில் தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இதுபோன்று செய்து வர தலைமுடி உதிர்தல் நின்று நன்கு செழித்து வளரும். வழுக்கைத் தலையிலும் முடி வளரும்.

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்.. !!!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை…

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்…

நகை
பணம்
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது…

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்…

உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை…

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்…

தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது…

சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு…

தாய்
தந்தை
குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

அறிவின் முதிர்ச்சி !!! விவேகானந்தர்

அறிவின் முதிர்ச்சி !!! விவேகானந்தர்

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி…..

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு.

கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ளசிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், க்ர்ப்பபையிலுள்ள
வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியும் அதன் மூலம் கிடைக்கும் பயன்களும் - திருமந்திர பாடல்கள் இணைப்பு
பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க யோகம் பகுதியின் நான்கம் பிரிவில் வெளிப்படுத்திய மூச்சுப் பயிற்சி தொடர்பான சிறு விளக்கம் கீழே பதிவாகியுள்ளன.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்.
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.
சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.
சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.
ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.
இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது.
அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.
இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.
இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.
செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது.
அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும்.
வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.
சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.
எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.
காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.
அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது.
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.
அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ?
நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும்.
மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது.
இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு.
எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.
ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம்.
ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.
எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.
அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.
மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.
நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.
ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.
பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்.
உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.
"மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.
திருமூலர் மூச்சுப் பயிற்சி பற்றி திருமந்திரத்தில் கூறியுள்ள வற்றை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

உளவியல் சொல்லும் உண்மைகள்

உளவியல் சொல்லும் உண்மைகள்..!
1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்...!
பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்..
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்..
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்..
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்.அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்..
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்..
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்..
தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ....

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?
1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.
2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
6.உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
7.உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
8.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

9.மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
12.அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
14.தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு  சாப்பிட கூடாதவை


நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருலைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்
அளவோடு சாப்பிடலாம்
அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்தி பருப்பு
மக்காச்சோளம்
அளவில்லாமல் சாப்பிடலாம்
கீரை
தக்காளி
காராமணீ
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பிர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி

தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்

தோல் அரிப்புக்கு அற்புதமான 6 வீட்டு வைத்தியங்கள்!!!

ஒரு நமைச்சல்,உண்மையில் சில எரிச்சலூட்டும் விரும்பத்தகாத பொருளுடன் தொடர்புக்கு எதிரான உடலின் பாதுகாப்பு யுக்தியாகும். ஆனால் அரிக்கும் தோல் என்பது மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினைகளில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு சொரிகிறீர்களோ அவ்வளவு அதிகமாக அரிப்பு ஏற்படும்.
நீங்கள்அரிப்பதைத்தொடர்ந்தால், அது தோலில் இடைவெளி ஏற்படுத்துவதுடன் பிறகு தொற்றுக்கும் வழி வகுக்க்கலாம்.இங்கே சில எளிதாக வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்கள், உங்கள் அரிப்ப் ஆரம்பிக்கும் போது அதை குறைப்பதற்க்காக சொல்லப் பட்டுள்ளன,

#தேங்காய் எண்ணை

அது உலர் சருமத்தாலோ அல்லது பூச்சி கடியினாலோ, அரிப்பிற்கு என்ன காரணமாக இருந்தாலும், தேங்காய் எண்ணை அற்புதங்களைச் செய்ய முடியும்.அதை உபயோகிக்க சிறந்த வழி, நேரடியாக அதை கைகளில் தேய்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட பகுதிகளில் பூசுவது தான். பரவலான் அரிப்பு உணர்வை உடல் முழுவது உணர்ந்தால், குறிப்பாக குளிர் காலங்களில், ஒரு குளியல் தொட்டியில் மிதமான நீரில் ஊறி, பின்னர் உங்களை தட்டி உலர்த்தி பின்னர் உடல் முழுவதும் தடவவும். தேங்காய் எண்ணையின் பலன்களைப் பற்றி மேலும் படியுங்கள்

#பெட்ரோலியம் ஜெல்லி

உங்கள் தோல் மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருந்தால், மிகச் சிறந்த வழி பெட்ரோலியம் ஜெல்லி. அதில் எந்த தீங்கு விளைக்கும் ரசாயனங்களும் இல்லை, இயற்கையான குணத்திலேயே தோலை மென்மையாகும் செய்கை உள்ளது. அதனால், அது உங்கள் நமைச்சல் விடுவிப்பதுமட்டும் இல்லாமல்,தோல் எரிச்சலைக்குறைவாக ஆககவும் உறுதி அளிக்கிறது..எல்லாவற்றையும் விட சிறந்தது, பாதுகாப்பானது மட்டுமல்லாமல் செலவும் இல்லாததால், எவ்வளவ் தடவை அதைத் தடவுகிறோம் என்று கவலைப் பட வேண்டாம். பெட்ரோலியம் ஜெல்லியை நல்ல சருமத்திற்கும் முடிக்கும் உபயோகிக்க 8 வழிகள் இங்கே.

#எலுமிச்சை
வைட்டமின் சி மற்றும் வெளுக்கும் பண்புகள் நிறைய உள்ளடக்கியஎலுமிச்சை, நமைச்சலுக்கு சிறந்த வைத்தியங்களில் ஒன்று.எலுமிச்சையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் உணர்ச்சியில்லாமல் திறன் உள்ளது மற்றும் வீக்கம் எதிராகவும் மற்றும் உணர்ச்சியில்லாமல் செய்யும் திறன் உள்ளது. ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதைப் பிழிந்து சிறிது சாறை எடுத்து அரிக்கும் இடத்தில் தவி, அதை காற்றில் உலர விட்டால் நீங்கள் விரைவில் நிவாரணத்தைப் பார்க்கலாம்

#சமையல் சோடா
ஒரு சிறிய பகுதியில் அரிப்பால பாதிக்கப் பட்டால் அதை சமையல் சோடாவுடன் சமாளிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து அதை அரிக்கும் பகுதியில் தடவவும். எனினும் இந்த மருந்தை உங்கள் சருமம் விரிசல் விட்டிருந்தால் உபயோகிக்க வேண்டாம். உடல் முழுவதும் அரிப்பு பரவியிருந்தால், ஒரு கப் சோடாவை ஒரு டப் மிதமான நீரில் அரை மணி நேரம் ஊறி, அதை காற்றில் உலர்த்தவும். இங்கே சமையல் சோடாவை அழகுப் பொருளாக உபயோகிக்க, உங்களுக்கு உதவும் விரைவான வழிகாட்டி

#துளசி இலை
துளசி இலைகள் நிறைய தைமால், யூஜினால் மற்றும் கற்பூரம் நிறைந்தத்தால், தோல் எரிச்சலைக் குறைக்கும் திறன் கொண்டுள்ளது..சில துளசி இலைகளை எடுத்து கழுவி, அதை பாதிக்கப் பட்ட பகுதியில் தேய்க்கவும். அல்லது சில இலைகளை நீரில் மூடிய பாத்திரத்தில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து, பின் அதில் ஒரு ப்ருத்து பந்தையோ அல்லது துணியையோ அழுத்தி, அதை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கவும்.

#ஆப்பிள் சாறு காடி
பலர் வினிகரை உச்சந்தலையில் பொடுகுகிற்காக உபயோகிக்கிறார்கள். அதே தர்க்கத்தில் தான் இது அரிக்கும் தோலிலும் வேலை செய்கிறது. இது ஒரு நல்ல கிருமி நாசினிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு நடவடிக்கை உள்ளது, அதனால் இத் ஒரு ந்ல்ல அரிப்பு எதிர்ப்பு முகவராக இருக்கிறது. ஒரு சிறிய பருத்தி பந்து அல்லது துணியை சிறிது ஆப்பிள் சாறு வினிகரில் தோய்த்து அதை அரிப்புள்ள பகுதியில் தட்டவும். அல்லது உடல் முழுவதும் ஒரு பொதுவான அரிப்பை உணர்ந்தால், ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை உங்கள் குளிக்கும் நீரில் சேருங்கள். ஆப்பின் சாறு வினிகரின் வியக்கும் ஆரோக்கிய பலன்கள் இங்கே

#கற்றாழை
அதன் அனைத்துஈரப்பதச்செயலால்,கற்றாழைமிகவும் பயனுள்ளதோலை மென்மையாக்கும் முகவர்களில் ஒன்றாகும்.நீங்கள்அரிக்கும்இடத்தின் மேல்ஜெல் தேய்க்கும் போது, அது அந்தப் பகுதியில் எரிச்சலைக் குறைத்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஒரு செடியிலிருந்து ஒரு கற்றாழை இலையை உடைத்து, அதை நீள்வாட்டில் கத்தியை உபயோகித்து வெட்டி ஒரு ஸ்பூனை உபயோகித்து உள்ளேஜெல்லிபோன்ற பொருளை வெளியே கரண்டி எடுக்கவும். இதில் சிறிதளவு ஜெல்லை அரிக்கும் பகுதிகளில் தடை அதை சில நிமிடங்கள் விட்டு விடவும். உங்கள் தோலுக்கும் முடிக்கும் கற்றாழை எப்படி சிறந்தது என்று படிக்கவும்.
நீங்கள் அரிப்பான தோலால் அவதிப் பட்டால், உங்களை சொரிந்து கொள்வதற்கு பதிலாக இந்த வீட்டு வைத்தியங்களை முயலவும்.அந்த அரிப்பு தானாகவே குறைவதை நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்த பொருட்கள் பயன்படுத்தியும் உங்களுக்கு நிவாரணம் இல்லையென்றால், எதனால் இந்த அரிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். செயற்கை பொருளால் செய்யப்பட்ட சில ஆடை ஒவ்வாமை, அல்லது ஒரு உணவு ஒவ்வாமை சில நேரங்களில் அரிப்பு அறிகுறிகளை அமைக்கலாம். ஆனால் இந்த அரிப்பு பகுதிகளில் நிற மாற்றம் அல்லது வ்டுக்கள் ஏற்படுதல் அல்லது அந்த பரப்பு பளபளப்பாதல் அல்லது அரிப்பு கடுமையாக உங்கள் தூக்கத்தை தொல்லை செய்வதாக இருந்தால், சரியான் சிகிச்சைக்கு ஒரு மருத்துவரை தொழில்முறை கருக்த்து கேட கண்டிப்பாக பார்ப்பதை உறுதி செய்யவும்.

உங்கள் உடலின் விலை என்ன?

உங்கள் உடலின் விலை என்ன?

ஒவ்வொரு ஆண்டும் ‘உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது' என்கிற செய்திகள் வரும். அப்போதெல்லாம் அந்த உறுப்புகள் எல்லாம், யார் மூலம், யாரிடமிருந்து, எப்படி, எவ்வாறு, எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டன, முறைப்படி அவை வாங்கப்பட்டனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை யாரும் எழுப்புவதில்லை. குறைந்தபட்சம், இன்னாருக்கு இன்னார் தானம் கொடுத்தார் என்ற தகவலையாவது மருத்துவமனைகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனவா? இல்லை.

நீங்கள் என்ன விலைக்குப் போக லாயக்கு?

‘சற்றேறக்குறைய இருநூறு பவுண்டுகளுக்குக் கீழே. எடை, பழுப்பு நிற முடி, நீலக் கண்கள், நல்ல பற்கள். என்னுடைய தைராய்டு சுரப்பிகள், ரத்த நாளங்கள் சரியாக இயங்குகின்றன. ஆறடி உயரம், முறையாக இணைக்கப்பட்ட திசுக்கள். எனது சிறுநீரகங்களும், இதயமும் சீரான முறையில் இயங்குகின்றன. அநேகமாக நான் 2,50,000 டாலர்களுக்கு (சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம்) மதிப்புடையவன் ஆகிறேன். நான் அமெரிக்கனாக இருப்பதால், எனக்கு இன்னும் கொஞ்சம் அதிக விலை கிடைக்கலாம்'.

இப்படித்தான் தொடங்குகிறது ‘சிவப்புப் புத்தகம்' (தி ரெட் மார்க்கெட்) எனும் புத்தகம். உலகம் முழுவதும் நடைபெறும் மனித உடல் உறுப்பு கடத்தல், வியாபாரம் குறித்து ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். எழுதியவர் ஸ்காட் கார்னி எனும் புலனாய்வுப் பத்திரிகையாளர்.

கிட்னிவாக்கம் தெரியுமா?

அமெரிக்காவில் மானுடவியல் படித்துவிட்டுப் பேராசிரியராகப் பணிபுரிய 2006-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்காட். அப்போது அவருடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்பு ஸ்காட் கார்னிக்கு வேறு ஒரு உலகத்தைத் திறந்து காட்டியது. அதனுள் நுழைந்தபோதுதான், உலகில் நடைபெறும் உடல் உறுப்பு தானங்களுக்குப் பின் உள்ள கறுப்புப் பக்கங்கள் அவருக்குத் தெரியவந்தன. அதை ஆவணப்படுத்தும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.

இந்தியாவில் இருந்த காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை சென்னையிலும் அவர் இருந்திருக்கிறார். அப்போது ‘சுனாமி நகர்' எனும் பகுதியில் வறுமையில் வாழ்ந்துவந்த பலர் தங்களின் ‘கிட்னி'யை விற்றுப் பிழைப்பு நடத்தினர். இதனால் அந்தப் பகுதி ‘கிட்னிவாக்கம்' என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அந்தப் பிரச்சினையும் இந்தப் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

வியாபாரத்திலிருந்து சேவைக்கு

1901-ம் ஆண்டு கார்ல் லேண்ட்ஸ்டீனர் என்பவர் ரத்தப் பிரிவுகளைக் கண்டுபிடித்தார். இதன் காரணமாக, முதல் உலகப் போரின்போது காயமடைந்த வீரர்களுக்கு மற்றவர்களுடைய ரத்தம் செலுத்தப்பட்டு, பிழைக்க வைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது ரத்த வங்கிகள் வந்துவிட்டன. ஆனால், அந்தக் காலத்தில் ரத்த வங்கித் தொழில், பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது.

1970-ம் ஆண்டு ரிச்சர்ட் டிட்மஸ் எனும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்தான் ‘ரத்த தானம்' என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்தார். அதன் அடுத்த கட்டமாக 1984-ம் ஆண்டு அமெரிக்கச் செனட்டில் ‘மனித உடல் உறுப்புகளை வெறுமனே உதிரி பாகங்களாகப் பார்க்கக் கூடாது' என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாபெரும் அறிவிப்புக்குப் பின்னால் இருந்தவர் யார் தெரியுமா? புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து உலகில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று அமெரிக்க முன்னாள் துணை அதிபராகவும் பதவி வகித்த அல் கோர்.

மருத்துவச் சுற்றுலா ரகசியம்

இன்றைக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் ‘உடல் உறுப்பு தானம்' சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளைச் சட்டப்பூர்வமாக இன்னொருவருக்குப் பொருத்த, மிகுந்த செலவாகும். மேலும் காத்திருப்புப் பட்டியலின்படிதான் உறுப்பு பொருத்தப்படும். உங்களின் சுற்று வருவதற்குள் நோய் முற்றிப்போய், இறந்துபோகக்கூட வாய்ப்பிருக்கிறது.

இதன் காரணமாக, பல வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ‘மருத்துவச் சுற்றுலா'வாக வருகிறார்கள். இங்கு அவர்கள் சட்டபூர்வமாக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் அல்லது கள்ளச் சந்தை மூலம் தேவையான உறுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டுக்குமே ஒப்பீட்டளவில் செலவு குறைவு என்பதுதான், இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

‘உடல் உறுப்பு தானங்கள் எல்லாம் சட்டபூர்வமாகத்தானே நடைபெறுகின்றன. அதனால் என்ன பிரச்சினை?' என்ற கேள்வி வரலாம். சட்டபூர்வமாக்குவது இந்தத் தொழிலில் உள்ள வியாபாரிகளின் (மருத்துவர்கள், இடைத்தரகர்கள்) நோக்கத்தை மாற்றவில்லை. மாறாக, அவர்கள் செய்யும் கள்ளத்தனங்களை (வறுமையில் இருக்கும் ஒருவருக்குப் பணத்தாசை காட்டி அவரின் உடல் உறுப்புகளை விற்கச் செய்வது) சட்டபூர்வமாக்குகிறது.

165 ஆண்டு தொழில்

இந்தியாவில் இதுபோன்று உடல் உறுப்பு கடத்தல் பத்து அல்லது இருபது ஆண்டு காலமாகத்தான் நடைபெற்றுவருகிறது என்று நினைத்தால், அது பெருந்தவறு. இந்த விஷயம் 1850-லிருந்தே நம்மிடையே இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைக் கல்லூரிகளில், மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் எல்லாம் இந்தியாவிலிருந்து ‘சப்ளை' செய்யப்பட்டவை. இதற்காக, இடுகாடுகளிலிருந்து புதைக்கப்பட்ட உடல்களையெல்லாம் தோண்டி எடுத்து, எலும்புகளை மட்டும் பிரித்தெடுக்கவே மேற்கு வங்கத்தில் அந்தக் காலத்தில் பல தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பலருக்கும் தெரியாத விஷயங்கள்: - ஒருவருக்குத் தேவைப்படும் உறுப்பு, எங்கு, யாரிடமிருந்து, எப்படிப் பெறப்படுகிறது என்ற தகவல்கள் இல்லாததுதான்!

ஒருவருக்குத் தேவையான உறுப்பை இன்னொருவரிடமிருந்து வாங்கித் தரும் இடைத்தரகர்களை ஒழிக்க வெளிப்படைத் தன்மைதான் சரியான வழி. ஒருவருக்குச் சிறுநீரகங்கள் வேண்டும் என்பதற்காக, எங்கோ ஒரு நாட்டில், வறுமையில் உள்ள ஒருவர் கடத்தப்படுவதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ இதில் சாத்தியம் குறைவு.

பிசினஸ் போய்விடும்

ஆனால், ஒரு துர்பாக்கியம் என்ன தெரியுமா? உறுப்பு தானம் வேண்டுபவரும், உறுப்பு தானம் செய்பவரும் சந்தித்துக்கொள்ள நினைத்தாலும், பெரும்பாலான நேரங்களில் அதைத் தடுப்பது மருத்துவமனைகள்தான். ஏனென்றால், அப்படிச் செய்தால் அவர்களுடைய ‘பிசினஸ்' போய்விடுமே!

அப்படியே சந்திக்க வைத்தாலும், தானம் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் இரண்டு பேருமே பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஆனால் ஆய்வுகளின்படி பார்த்தால், இவ்வாறு சந்திக்க வைப்பது அறுவை சிகிச்சையின் ‘சக்சஸ் ரேட்'டை அதிகரிக்கச் செய்கின்றன என்பதுதான் உண்மை.

அறுவை சிகிச்சை தேவையா?

இவையெல்லா வற்றையும்விட இந்தப் புத்தகம் நமக்குத் தரும் முக்கியமான செய்தி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை என்பதுதான்.

ஒருவர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கூடுதலாகச் சில காலம் மட்டுமே வாழ முடியும். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வேறு பிரச்சினைகள் வரலாம். மாறாக, அறுவைசிகிச்சை செய்துகொள்ளாமல் மருந்து, மாத்திரைகளையே தொடரலாம்.

‘நாம் மரவுரி தரித்த காலத்தில் மனிதச் சதை மீது நமக்கிருந்த பசியைவிட, இந்தக் காலத்தில் அந்தப் பசி மிகவும் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் 2011-ம் ஆண்டு ‘ஹஷெட் இந்தியா' பதிப்பகம் வெளியிட்டது. அந்தப் புத்தகம் சமீபத்தில் ‘சிவப்புச் சந்தை' என்ற தலைப்பில் தமிழில் அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

‘உடல் உறுப்பு தானத்தால் இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம். ஆனால், உறுப்பு எப்படிக் கிடைத்தது என்று தெரியாத நிலையில் அப்படித் தானம் பெறாமல் இருப்பதன் மூலமும், இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம்' என்பதே இந்தப் புத்தகம் நமக்குத் தரும் ஞானம்!

தூக்கம் எங்கே போனது?

மரபு மருத்துவம்: தூக்கம் எங்கே போனது?

அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

இரவின் கொடை ‘மெலடோனின்'

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன.

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம்.

சிகிச்சை

l அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.

l சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

l பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ள லாம்.

l திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

l அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

l மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.

l எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

l மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

l மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.

l தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி.

கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி...ஒரு உஷார் ரிப்போர்ட்...!!!

முக்கனி என்று அழைக்கப்படும் மா,பலா,வாழை யில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.

மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.

தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும், அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.

அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.

“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால் அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.

பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று எண்ணி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட கடைகளை தொடர்ந்து இரவு பகல் பாராது திடீர் திடீரென்று ஆய்வு செய்து கண்காணித்து கார்பைடு பழங்களை அழித்து மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

Jobbing Trading Strategy in Stock Market - Share Market Jobbing Training

Jobbing Trading Strategy in Stock Market -  Share Market Jobbing Training

                    Share Market Jobbing Training
                                                              Click Below

Jobbing is buying and selling of shares within quick time (Entry and Exit) for a very small profit. Whatever the trade is you have to square it off within short time .Usually jobbers do this kind of trade continuously throughout the day earning a handsome profit at the end of the day. For this, one has to take dealing training .You have to be really fast in Placing order executions. Jobbing requires high concentration and training before entering.

Click Below

Most Suitable for SUBBROKERS, FRANCHISE, BROKERS, DEALERS, TERMINAL OPERATORS and HNI CLIENTS

GOOD NEWS  for SUBBROKERS, FRANCHISE, BROKERS, DEALERS, TERMINAL OPERATORS and HNI CLIENTS

Improve your Income: through Stock broking Business with Our Free Jobbing Calls

Rupeedesk is providing JOBBING CALLS FOR ALL EQUITY, COMMODITY AND CURRENCY SEGMENT Success rate of jobbing calls bring on an average 96% for all segment.

Click Below

வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா?

வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா?

அந்த காலத்தில், வெற்றிலை பாக்கு போடாமல், விருந்து என்பது முழுமையாய் முடியாது. இன்று தாம்பூலங்களில் வைத்து கொடுப்பதோடு சரி, யாரும் அதனை விரும்புவதில்லை.
பற்களில் கரையாகும். சிவக்கிறது என யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டி செய்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. எவ்வளவு ‘பலமாக’ நீங்கள் சாப்பிட்டு இருந்தாலும், வெற்றிலை, எளிதில் ஜீரணப்படுத்தி விடும்.

வெற்றிலை வேறு எவற்றிற்கெல்லாம் நம் தாத்தாக்கள் பயன்படுத்தினார்கள் என்று பார்ப்போமா?
ஆஸ்துமா-வறட்டு இருமல் : அலர்ஜியினால் ஏற்படும் வறட்டு இருமல் சிலருக்கு மாதக் கணக்கில் இருக்கும். ஆஸ்துமாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இரவின் சரியான தூக்கம் இல்லாமல் என்ன செய்தாலும், நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் கவலைப் படாதீர்கள். எளிய தீர்வு கைவசம் உள்ளது.
சித்த மருந்து கடைகளில் சுவாசகுடோரி என்ற வில்லைகள் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் இரு வில்லைகளுடன், இரு மிளகினை சேர்த்து, வெற்றிலைக்குள் வைத்து, மடித்து, மெல்லுங்கள். அதன் சாறினை முழுங்க வேண்டும். இப்படி காலை மாலை என்று இரு வேளை மென்றால், படிப்படியாக குணம் கிடைக்கும். அலர்ஜி சுத்தமாக நின்று விடும்.
தீக்காயங்கள் குணமாக : தீக்காயங்கள் தரும் எரிச்சலை சொல்லி மாளாது. சீக்கிரம் ஆறவும் செய்யாது. இந்த மாதிரியான நேரத்தில், வெற்றிலையை நெய்யில் வதக்கி, தீக்காயத்தின் மேல் பற்றாக போடுங்கள். விரைவில் ஆறிவிடும்.
நுரையீரல் பிரச்சனைகளுக்கு : நுரையீரலை பலப்படுத்தும் சக்தியை வெற்றிலைக் கொண்டுள்ளது. வெற்றிலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறு, இரண்டையும் சம அளவு கலந்து கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்தால், நுரையீரல் பிரச்சனைகள் உங்களை நெருங்காது. சுவாசக் குழாய் சுத்தமாகும்.
பூச்சிக் கடிக்கு : எந்த பூச்சி கடித்ததென்று தெரியாமல் போனால், அதனால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க, நடு நரம்பு நீக்கிய வெற்றிலையுடன் 3 மிளகினை சேர்த்து நன்றாக மென்று, அதன் சாற்றினை முழுங்குங்கள். கடியின் விஷம் எளிதில் இறங்கும்.
சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும் : சர்க்கரை அளவினை, மாத்திரை மருந்துகளைக் கொண்டு, கட்டுப்படுத்த வேண்டுமென்பதில்லை. இயற்கையான எளிய முறைகளை உபயோகப்படுத்தலாம். வெற்றிலைக் கொண்டு செய்யப்படும் இந்த மருந்தினை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையானவை :
வெற்றிலை – 4
வேப்பிலை – ஒரு கைப்பிடி
அருகம் புல் – ஒரு கைப்பிடி மேலே சொன்னவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றை, அரை லிட்டர் நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்.
நீர், கால் லிட்டர் வரை சுண்டியவுடன், அடுப்பை அணைத்து, ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் மூன்று வேளை உணவு சாப்பிட்ட பின் , 50 மி.லி. குடித்து வந்தால், சர்க்கரை அளவு குறைந்து சீராகும்.
தலைவலி நீங்க :
வெற்றிலை சாறினை எடுத்துக் கொண்டு, அதில் கற்பூரத்தை பொடி செய்து நன்றாக குழையுங்கள். இதனை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி சரியாகிவிடும். மைக்ரைன் இருந்தாலும் இதனை தொடர்ந்து உபயோகிக்கும் போது, தலைவலி குறைந்து விடும்.

ஸ்படிகம்

ஸ்படிகம் :

பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.
இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல் (Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும் பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலைக்கு உண்டு. இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையில் மொத்தம் 108 ஸ்வர்ண ஸ்படிக மணிகள் உள்ளன. ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின் பிம்பமாக இருக்கும். தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த நிறம் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நிறங்கள் எங்கும் வியாபித்திருக்கின்றன. இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிந்து கொள்பவர்கள் நிறமாலைக் கொள்கைப்படி தனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ள நிறத்தை இந்த உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர்.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் சீரடையும். வேலைப் பளுவினால் ஏற்படும் களைப்பு தெரியாது. இதயமும், நுரையீரலும் ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும். இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். இது கர்ப்ப மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும். தெளிவான சிந்தனையை இது தூண்டுவதால் மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும். நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும் ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் வாக்கு பலிதத்தைப் பெறுவர். இதனை அணியும் அரசாங்க அதிகாரிகள் ஆளுமையைப் பெறுவதால் துணிச்சலாகப் பணியாற்றுவதற்கு இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை உற்ற துணையாக இருக்கும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது. இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது. இதனை அணிந்திருப்பவர்களிடம் எதிரிகள் சரணடைவர். இதனை அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும். சுத்தமான ஸ்படிக மணியை தண்ணீரில் போட்டால் மணி இருப்பது
தெரியாது.சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும்,
நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும் .இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.இப்படி தனக்குள் உள்ள ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள் படிகமாலை அனுப்புவதை இதன் மூலம் அறியலாம்.ஸ்படிகம் பூமியிலிருந்து எடுப்பதால்
முறையான பஞ்சபூத பரிகாரம். தீட்சை மந்திரம் சொல்லாமல் மாலையாக அணியக்கூடாது.

ஸ்படிகமாலையை ருத்ராட்சம் இல்லாமல் அணியக்கூடாது. அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும் போதும் அணியக்கூடாது. ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை
தாங்கக்கூடிய சக்தி உள்ளது. ஸ்படிகலிங்கம் வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும். இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க
தரிசனம் மிகவும்சிறப்பு வாய்நதது.

.
எனவே ஸ்படிகம் அணிவது உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.
.
எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும்.இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங்கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.

ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள் நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி , கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத் தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது .

இந்த மணி மாலையை அணிவதால் இது தொழிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன் குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை செய்வதோடு ரத்த அழுத்த நோயை குனபடுத்துவதோடு நீரழிவு நோயையும் குணப்படுத்தும் . இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி மந்த்ர ப்ரயோகம் செய்தால் வேண்டிய தெய்வம் ப்ரசன்னமாதி அருள் பாலிக்கும். இது ஸ்வர்ண ஸ்படிக மாலையாக இருப்பதால் வறுமையை போக்க வல்லது. குபேர மந்திரங்களினால் உருவேற்றப்பட்ட சக்தி வாய்ந்த இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை ஆன்மீக அன்பர்கள் பெற்று எல்லா செல்வ சிறப்பையும், புகழையும், எண்ணில்லா நற்பலன்களையும் பெற்று சிறப்புற வாழ வாழ்த்துகிறோம்.

நோன்பு முப்பதிலும் கேக்க வேண்டிய முப்பது தூஆக்கள்

நோன்பு முப்பதிலும் கேக்க வேண்டிய முப்பது தூஆக்கள்

1.இறைவா! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக.
2.இறைவா! முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக.
3.இறைவா! ரமலான் உடைய அருட்கொடைகளையும் பரக்கத்துகளையும் எங்களுக்குநிறைவாக தந்தருள்வாயாக!
4.இறைவா எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக! மேலும் ஹலாலான ரிஸ்கை தந்தருள்வாயாக!
5.இறைவா! இஸ்லாமிய சட்டத்தின்படி முழ்மையான முறையில் செயல் படக் கூடியவர்களாக எங்களை ஆக்கியவைப்பாயாக!
6.இறைவா! நீயே எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக! மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக! மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
7.இறைவா! லைலத்துல் கத்ர் இரவை பெறக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வயாக!
8. இறைவா! ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை எங்களிக்குத் தந்தருள்வாஆக!
9.இறைவா! பொய் புறம், கோபம்,பொறாமை இன்னும் சண்டை சச்சரவுகளை விட்டும் எங்களை காப்பாயாக!
10.இறைவா!வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்கலை பாதுகாப்பாயாக!
11.இறைவா!எஙக்ளின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக!
12.இறைவா! தஜ்ஜாலுடைய குழப்பங்கள், ஷைத்தான் மற்றும் மனோ தீங்குகளை விட்டும் எங்களை காப்பாயக!
13.இறைவா! முழுமையான பர்தா முறையில் பெண்களை வாழச்செய்வாயாக!
14.இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக!
15.இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
16.இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!
17.இறைவா பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!
18.இறைவா! நாளை மறுமை நாலிபெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் ஹவ்ளுள் கவ்தர் தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக!
19.இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!
20.இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!
21. இறைவா! மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
22.இறைவா! இறைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!
23. இறைவா! கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக!
24.இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக!
25. இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
26.இறைவா! கியாமத் நாளில் இழிவுகலை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!
27.இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக!
28.இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக!
29.இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!
30.இறைவா! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக!

Technical Analysis Training In Chennai

Technical Analysis Training In Chennai




1. Technical Analysis for Beginners
2. Advanced Technical Analysis Course

Two Types of Training

1. One to One Training
2. Group Training


Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

                               Click Below

Free Commodity Tips - Get Register for 2 day commodity Tips

Free Commodity Tips - Get Register for 2 day commodity Tips



             Register for 2 day commodity Tips

Mcx Commodity Futures - Rupeedesk Consultancy

We(Rupeedesk Consultancy)are Leading Indian Stock Market Trading Tips Providers for Commodity Market Traded in MCX,NCDEX And MCX-SX (Gold,Silver,Copper,Aluminium,Zinc,Crudeoil,Naturalgas,Lead,Nickel,Menthaoil) respectively.91-9094047040,91-9841986753,044-24333577

Commodity Market - Share Market Training

Mini Commodity Futures - Rupeedesk Advisory
Free MCX MINI and Commodity MINI tips - Rupeedesk.Live Mcx Commodity MINI tips for GOLD MINI , SILVER MINI ,CRUDEOIL MINI , ZINC MINI , LEAD MINI , COPPER MINI , NICKEL MINI , ALUMINIUM MINI , NATURALGAS MINI . (Contact: 9094047040 / 044-24333577, www.rupeedesk.in)

           Register for 2 day commodity Tips