சுவை மருத்துவம்

சுவை மருத்துவம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். நடக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போது நாம் ஏதாவது ஒரு உணவைச் சாப்பிடுவோம்.

சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்குச் சக்தி கிடைக்கிறதா?

அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா?

சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும்.

 ஆனால்  நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்கு சென்று அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது.

 ஏனவே நமக்கு 2 மணிநேரத்திற்குப் பிறகு தான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரையின் அளவை சோதனை செய்து பார்ப்பார்கள்.

இதற்கான காரணம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு தான் சர்க்கரையாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?

நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதி பிராண சக்தி கிடைக்கிறது. நாம் உணவை வாயில் மெல்லும் பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளி புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள்  மூலமாக சுவைகளைக் கிரகித்து உடல் முழுவதும் அனுப்பி விடுகிறது.

நமது நாக்கில் இருக்கும் சுவை மொட்டுக்கள் சுவையைப் பிராண சக்தியாக மாற்றி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பி மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பிரித்து கொடுக்கிறது.

நாம் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டவுடன் தெம்புடன் இருக்கிறோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும். ஏனென்றால் ஹோட்டல்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவை சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள்.

 எனவே அந்தக் சுவை நாக்கின் மூலமாக பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம்.

ஆனால் ஹோட்டலில் சோடா உப்பு. அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருள்களாக இருப்பதில்லை. எனவே ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.

நமது உடலுக்குப் பல வகையில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும் பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.

வீட்டில் சாப்பிடும் பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி கழித்து நன்றாக தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால் வீட்டில் நாம் சுவைகளைப் பற்றி கவலைப் படுவதில்லை.

 ஆனால் உணவு சத்து பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே சுவைகள் மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால் உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.

 வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஹோட்டலில் சுவை மூலமாக கிடைக்கும் பிராண சக்தி முதல் ஒரு மணி நேரத்திற்குப் பயன்படுகிறது. ஆனால் அதன் பிறகு சத்துப் பொருட்கள் இல்லை என்பதால் சோர்வடைகிறோம். வீட்டில் சுவை இல்லை என்பதால் முதல் ஒரு மணி நேரம் சோர்வாக இருக்கிறோம். பின்னர் சத்துப் பொருட்கள் மூலமாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் சக்தியுடன் இருக்கிறோம்.

எனவே வீடுகளில் இனி மேல் ஹோட்டலைப் போன்று சுவையாக சமைக்க வேண்டும். அதே சமயம் ஹோட்டலில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருள்களை சமைக்க வேண்டும். இப்படி செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம். எனவே சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் ஒரு அற்புதமான ஒரு விசயம். எனவே நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகையிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழ்வதற்கு கற்றுக் கொள்ளலாம்.

நமது வீட்டில் கரண்ட் போய்விட்டது என்றால் டி.வி, ஃபேன், டியூப் லைட் வேலை செய்யாது. ஆனால் கே° அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கே° தீர்ந்து விட்டது என்றால் அடுப்பும் எரியாது. ஆனால் ருஞளு மூலமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் அணையாது. இப்படி நாம் வீட்டில் கரண்ட்டு மூலமாக சில பொருட்களும், பேட்டரி மூலமாக சில பொருட்களும் ருஞளு மூலமாக சில பொருட்களும் கே° சிலிண்டர் மூலமாகச் சில பொருட்களும் இப்படி ஒவ்வொரு பொருள்களும் ஒவ்வொரு எரிபொருள் மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். அதே போல் நமது உடலிலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்து கொண்டிருக்கும். நமது உடலில் மொத்தம் ஐந்து விதமான பிராண சக்தி என்ற கரண்ட் இருக்கிறது. ஒவ்வொரு விதமான கரண்ட் என்கிற பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்புகள் வேலை செய்யும்.