இயல்பாய் இரு!

இயல்பாய் இரு!


ஒரு அரசன் ஜென் குருவைக் காண்பதற்காக வந்தான்.

குருவே! ஜென் என்பது இயல்பாய் இருத்தல் என்பதுதான் இல்லையா? என்று அரசன் கேட்டான்.
அதற்கு குரு மவுனமாக ஆம் என்று தலையசைத்தார்.

இயல்பு என்பது மனதை பொறுத்த விஷயம் அல்லவா?’ மன்னனிடம் இருந்து அடுத்த கேள்வி வந்தது.
அதற்கும் குருவிடம் இருந்து தலையசைப்பே பதிலாக கிடைத்தது.

அரசனுக்கு அடுத்த சந்தேகம், அப்படியானால் ஜென் மார்க்க உபதேசத்தின்படி மனமே புத்தர். அப்படித்தானே? என்றான்.
நான் இதற்கு இல்லை என்று பதில் சொன்னால் உலகமறிந்த ஓர் உண்மையை மறுப்பது ஆகிவிடும். ஆமாம் என்று சொன்னால் உங்களுக்கு தெரியாத விஷயத்தைத் தெரிந்து கொண்டதாக நினைப்பீர்கள் என்றார் குரு.

மன்னனின் கேள்வி முடிந்தபாடில்லை, அவன், ‘உங்களைப் போன்ற ஞானிகளும் மரணத்தைத் தவிர்க்க முடியாது. இல்லையா? என்றான்.

ஆம் என்றார் ஞானி.

அப்படியானால் செத்த பிறகு நீங்கள் எங்கே போவீர்கள்? என்றான் தெளிவு பெறாத மன்னன். தெரியாது என்றார் குரு.
என்னது தெரியதா? என்றான் மன்னன்.

ஆமாம். தெரியாது. ஏனென்றால் நான் செத்ததில்லை! என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இறந்த பின் என்ன நடக்கும் என்று அஞ்சுவதைக் காட்டிலும், வாழும்போது எப்படி பயனுள்ள முறையில் வாழ்வை செலவிடுவது என்பதே சிறந்த சிந்தனை. அதை விடுத்து நாம் செய்யும் விவாதம் எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது.
வாழ்க்கையிலும் இயல்பாகவே இருத்தல் வேண்டும்.