நந்திகேஸ்வரரின் ஆணவம்….!!!

நந்திகேஸ்வரரின் ஆணவம்….!!!


நந்திமேல் அமர்ந்தபடி சிவபெருமான் ஒரு முறை பூமியை வலம் வந்தார். அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனை நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த கர்வத்தை நந்தியிடமிருந்து அகற்ற நினைத்த இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஆணவம் உண்டான போது – அதாவது இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியைக் கூட பாரம் தாங்க முடியவில்லை.

இறைவன் அருளால் தான் அனைத்தும் நிகழ்கின்றன. இறைவன் இல்லாமல் எந்த உயிராலும் எதையும் செய்ய முடியாது.