உணவுக்கு நமஸ்காரம் !!!

உணவுக்கு நமஸ்காரம் !!!


உண்ணும் உணவை நிந்திக்க கூடாது. குறை சொல்லி இகழக் கூடாது! நிந்தித்தால் சரியான நேரத்துக்கு வாழ்நாள் முழுவதும் உணவுக் கஷ்டம் ஏற்படும்.

குறை சொன்னால் அடுத்த பிறவியில் தரித்திரனாய் பிறக்க நேரும். உணவு பரிமாறுபவர் உணவைத் தொட்டு வணங்கி இந்த உணவை வழங்கிய இறைவா இந்த உணவினால் தீய உணர்ச்சிகள் ஏற்படாதவாறு அருள்புரிய வேண்டும்.

உணவு மயமான குண்டலினி சக்தியோ; அன்ன பூரணி மாதா உங்களுக்கு நமஸ்காரம்; இந்த உணவு தினசரி கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று சொல்லித் தொட்டு வணங்கிய பின்தான் பரிமாற வேண்டும்.

உணவு உண்பவரும் இவ்வாறு செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும். இதனால் குண்டலினி எழும் ஆற்றல் உண்டாகும். நல்லவர்கள் பாராட்டும் நல்லவராக விளங்குவோம்.