நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்

நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன் !!!

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தபோது அவரிடம் பாஞ்சாலி “தர்ம நியாயத்துக்கு கட்டுப்படும் தாங்கள், நான் துகிலுரியப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு பீஷ்மர், துரியோதனனின் உணவை உண்டதால் உண்டான ரத்தம்தான் அதற்கு காரணம்” என்றார்.

“அப்படியானால் இப்போது மட்டும் ஏன் மாறினீர்கள்?” என்று கேட்க, “அந்த ரத்தத்தை எல்லாம் அர்ஜுனனின் அம்பு வெளியேற்றி விட்டது. அதனால் நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்” என்றார் பீஷ்மர். ஆகையால் நல்லவர் இல்லத்திலும் நல்ல மனதுடன் உணவு படைப்பவர் கையிலும்தான் உணவு உண்ண வேண்டும்.