கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை

கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை !!!

• கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
• கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
• வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
• கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது.
• சோம்பல் முறித்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
• பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்லவதை தவிர்க்கலாம்.
• போகின்ற போக்கில் ஒரு கையால் வணங்கி விட்டு செல்லக் கூடாது.
• மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
• நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
• கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
• கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
• பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
• அஷ்டமி, நவமி, அமாவசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
• ஆலயத்தில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
• தெய்வ வழிபாடு ஈர துணி உடுத்தக் கூடாது.
• கோவிலுக்குள் குளிக்காமல் செல்லக் கூடாது.
• சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
• கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கால்களை கழுவ வேண்டும்
• கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
• கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
• ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.
• கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
• நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்யும் படி இருக்கக் கூடாது