ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு 12ம் இடம். அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச்சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச்சனி என்பார்கள். அந்தக் காலக்கட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.

ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப் படைக்கும் சனி பகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழிவகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊரு விட்டு ஊரு போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்ப்போம்.

சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி புனுகு பூசி, கறிவேப்பயிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமீட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

ராசி 12ல் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சை பழத்தின் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும், ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும், தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதைப் போக்க, திங்கட் கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகுப்பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் விலகும்.