பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? அதற்கான 10 அம்சங்கள்…

* நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது மனதில் எந்த சலனமும் இல்லாது கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.

* இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.

* பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும் கடவுள் உங்கள் எதிரே இருப்பதாக நினைத்து ‘குட்டி’ பிரார்த்தனை அடிக்கடி செய்யுங்கள்.

* எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

* உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கடவுளின் அன்மையும், பாதுகாப்பையும் தரும் என்று நம்புங்கள்.

* பிரார்த்தனையின் போது கசப்புணர்வும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

* கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால் அவர் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளை விட அவர் கொடுப்பது சிறந்ததாகவே இருக்கும்.

* ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.

* உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள்.

* யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், அதைவிட அதிகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும்